பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரி யன்ன அறுவை நல்கி மழையென மருளும் மகிழ்செய் மாடத்து இழையணி வனப்பி னின்னகை மகளிர் |
85 |
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால் வாக்குபு தரத்தர வருத்தம் வீட ஆர வுண்டு பேரஞர் போக்கிச் செருக்கொடு நின்ற காலை மற்றவன் |
அவன் தந்தது பூப்போட்ட புத்தாடை. அது பாம்புத்தோல் போல் மெல்லியது. என்றாலும் பிறரது நோக்கம் நுழைய முடியாதது. பிறரால் உள்ளுறுப்புகளைப் பார்க்க முடியாத்து. மழைக்காலம் போல இருக்கும் குளுகுளு மாடத்தில் எங்களை இருக்கச் செய்து மகிழ்வித்தான். போக்கு என்பது வருத்தத்தைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. போக்கில் என்பது வருத்தம் போக்கிக் களைப்புத் தீர்க்கும் ஒருவகை உணவு. இக்காலத்தில் விருந்துணவுக்கு முன்னர் தரப்படும் பழச்சாறு போன்றது எனலாம். இந்தப் போக்கில் என்னும் சுவையுணவைப் பொற் கிண்ணங்களில் மகளிர் தந்தனர். அவர்கள் நகைகளைப் போட்டுக் கொண்டிருந்த அழகுடன் முகம் புன்னகை பூக்க வந்தனர். மீண்டும் மீண்டும் பொற்கலம் நிறையும்படி போக்கில் உணவை வார்த்தனர். அவர்கள் தரத்தர வாங்கி எங்களது வருத்தம் போகும்படி உண்டோம்.எங்களது துன்பத்தை யெல்லாம் போக்கிக் கொண்டு பெருமிதச் செருக்கோடு நின்றோம். அப்போது…
இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்
திருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித் | 90 |
தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ ததன்பய மெய்திய வளவை மான ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி அனந்தர் நடுக்க மல்ல தியாவதும் மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து |
95 |
செல்வச் செருக்கும் செம்மாந்த அழகும் சேர்ந்து கிளர்ச்சி யூட்டிய அவனது அரண்மனையின் ஓர் அறையில் தங்கியிருந்தோம். தவம் செய்யும் பெருமக்கள் தம் உடலை விட்டு உயிர் விலகுவதற்கு முன்பே தவத்தின் பயனை எய்துவர். அது போல நாங்களும் எங்களது இளைத்த உடம்பிலேயே இன்பம் கண்டோம். அவர்கள் தவம் செய்த வருத்தம் நீங்கிப் பயன் கண்டது போல நாங்கள் வழிநடந்த களைப்பெல்லாம் நீங்கிச் சுகம் கண்டோம். தூக்க நடுக்கத்தைத் தவிர வேறு மனக் கவலையே இல்லாமல் மயங்கிக் கிடந்தோம். பின்னர் எழுந்து பார்க்கும் போது…
காலையில் அரசவைக்குச் செல்லுதல்
மாலை யன்னதோர் புன்மையுங் காலைக் கண்டோட் மருளும் வண்டுசூழ் நிலையும் கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப வல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக் கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக். |
100 |
அரசனை அணுகுதல்
கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய் அதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து |
பகலெல்லாம் உழைத்தவர் மாலை நேரம் வந்ததும் காணும் மனச்சுமை குறைந்த புன்மைநிலை போல எங்கள் நெஞ்சம் பாதுகாப்புச் சுகத்தில் மிதந்து கொண்டிருந்தது. காலை நேரத்தில் பூவைச் சூழ்ந்து வண்டுகள் மொய்ப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் கல்லா இளையர் சிலர் வந்து அரசன் வருகையைச் சொல்லிக் காட்டினர். நாங்கள் எழுந்து அவனை வணங்குவதற்கு முன்னர் அவன் முந்திக் கொண்டான். வருக என்று கூவி அழைத்துக் கொண்டே வந்தான். இது அவன் நடந்து கொள்ளும் முறைமை வழக்கம். அவனது இந்த வழக்கமான செயலுக்குப் பின்னர்…
உணவு கொடுத்து ஓம்பிய முறை
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் பராஅரை வேவை பருகெனத் தண்டிக் காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை |
105 |
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி அவையவை முனிகுவ மெனினே சுவைய வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ |
பதத்தோடு சுட்டுச் சமைத்த செம்மறியாட்டுக் கறியும் சோறும் கூடிய உணவை அருகிருந்து ஊட்டலானான். அருகம்புல் மேய்ந்த துருவை என்னும் செம்மறியாடு. பராரை எனப்படும் அதன் பருத்த கால்தொடை. அதனைப் புழுக்கிய வேவை. வேவையை இக்காலத்தில் சூப் என்பர். அரசனாயிற்றே என்று அவனிடம் நெருங்கத் தயங்கினோம். அவன் விடவில்லை. தண்டினான். பருகுக என்று சொல்லித் தடுத்தான். (தண்டித்தான்) காழ் என்பது வைரம் பாய்ந்த கட்டையில் செய்த உண்கலம். கை சுடாமல் இருக்க மரக் கிண்ணத்தில் தந்தான். அதில் கொழுத்த கறித் துண்டுகளும் இருந்தன. சூடு வாயில் சுட்டதால் வாயால் ஊதி ஊதிச் சுவைத்துப் பருகினோம். ஊழின் ஊழின் ஒற்றினோம். அவ்வப்போது வாயில் ஒற்றடம் போட்டுக் கொண்டோம். அவை சலிக்கும்போது முனிவந்தோம். அதாவது முகம் சுளித்தோம். உடனே அவன் வேறு பல மாதிரிகளில் சமைத்த உணவை வரவழைத்தான். தந்திரமாக வரவழைத்துக் கொடுத்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு, வருத்தம், அவன், இலக்கியங்கள், ஊழின், பொருநராற்றுப்படை, போக்கில், என்பது, பத்துப்பாட்டு, உணவை, கல்லா, எங்களது, செய்த, தவம், அவனது, நாங்கள், கண்டோம், மாலை, சமைத்த, வாயில், வேவை, நேரத்தில், எழுந்து, வேறு, என்னும், தரத்தர, காலை, மகளிர், மருளும், சங்க, போல், போக்கிக், போட்டுக், முகம், முன்னர், இக்காலத்தில், உணவு, மீண்டும்