முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 6.1. திருக்கண்ணப்பதேவர் திருமறம்
பதினோராம் திருமுறை - 6.1. திருக்கண்ணப்பதேவர் திருமறம்
6.1. திருக்கண்ணப்பதேவர் திருமறம்
514 | பரிவின் தன்மை உருவுகொண் டனையவன் போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன் குருதி புலராச் சுரிகை எகம் அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன் தோல்நெடும் பையிற் குறுமயிர் திணித்து |
5 | |
வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியன் உழுவைக் கூனுகிர் கேழல்வெண் மருப்பு மாறுபடத் தொடுத்த மாலைஉத் தரியன் நீலப் பீலி நெற்றி சூழ்ந்த கானக் குஞ்சிக் கவடி புல்லினன் |
10 | ||
முடுகு நாறு குடிலை யாக்கையன் வேங்கை வென்று வாகை சூடிய சங்கரன் தன்னினத் தலைவன் ஓங்கிய வில்லும் அம்பும் நல்லன தாங்கி ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கிக் |
15 | ||
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக் கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி நாவில் வைத்த நாட்போ னகமும் தன்தலைச் செருகிய தண்பள்ளித் தாமமும் வாய்க்கல சத்து மஞ்சன நீரும் |
20 | ||
கொண்டு கானப் பேருறை கண்ணுதல் முடியிற் பூசை அடியால் நீக்கி நீங்காக் குணத்துக் கோசரிக்கு அன்றவன் நேசங் காட்ட முக்கண் அப்பனுக்கு ஒருகணில் உதிரம் |
25 | ||
தக்கி ணத்திடை இழிதர அக்கணம் அழுது விழுந்து தொழுதெழுந் தரற்றிப் புன்மருந் தாற்றப் போகா தென்று தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம் |
30 | ||
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க அற்ற தென்று மற்றக் கண்ணையும் பகழித் தலையால் அகழ ஆண்டகை ஒருகை யாலும் இருகை பிடித்து ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய் |
35 | ||
நல்லை நல்லை எனப்பெறும் திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக் கருவேட் டுழல்வினைக் காரியம் கெடுமே |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
6.1. திருக்கண்ணப்பதேவர் திருமறம் - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -