முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 10.1. மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
பதினோராம் திருமுறை - 10.1. மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
10.1. மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
803 |
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர் மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக் குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன் மதலை மாமதந் துவன்றிய கதனுடைக் கடதடக் கபோலத் தோரிட மருப்பிற் கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன் சேவடி யுகளம் அல்லது யாவையும் இலமினி இருநிலத் திடையே. |
1 |
804 |
நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான் தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் -கலந்துளங்கொள் காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து மாமாரி ஈன்ற மணி. |
2 |
805 |
மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாள்அரக்கர் அணிசிந்த வென்றஎம் ஐயர்க் கிளங்கன்றை அங்கரும்பின் துணிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவிப் பிணிசிந்து கார்முளை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறவே. |
3 |
806 |
பேதுறு தகையம் அல்லது தீதுறச் செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கல் நாப்பண் புக்கவண் இரும்பொறித் தடக்கையும் முரணிய பெருந்தோட் கொட்ட நாவி தேவிதன் மட்டுகு தெரியல் அடிமணந் தனமே. |
4 |
807 |
மேய கருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை ஓய மணியூசல் ஆடின்றே - பாய மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து. |
5 |
808 |
உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஓடைநெற்றிச் சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தந் தாளிரியூர் விந்தத் தளரா மருங்கிற் கிளிபெற்ற வேழக்கன்றின் மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமின்னே. |
6 |
809 |
மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து ஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை யாம்மிக வழுத்துவ தெவனோ அவனேல் பிறந்த திவ் வுலகின் பெருமூ தாதை உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது மேருச் சிமையத்து மீமிசை வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே. |
7 |
810 |
மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே கழிய வருபொருளே கண்ணே -தெழிய கலாலயனே எங்கள் கணபதியே நின்னை அலாதையனே சூழாதென் அன்பு. |
8 |
811 |
அன்பு தவச்சுற்று காரழல் கொண்டெயில் மூன்றெரிய வன்புத வத்துந்தை மாட்டுகின் றாம்மதஞ் சூழ்மருப்பிற் கன்பு தவக்கரத் தாளமிட் டோடிக் கடுநடையிட் டின்பு தவச்சென்று நீயன்று காத்த தியம்புகவே. |
9 |
812 |
கவவுமணிக் கேடகக் கங்கணக் கரவணா அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநீள் புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை விரைநனி கீறி மூரி அஞ்சேறு புலர்த்தும் என்பர் மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே. |
10 |
813 |
மலைசூழ்ந் திழிகின்ற மாசுணப்பொற் பாறை தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் - கலைசூழ் திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க் கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை. |
11 |
814 |
காலது கையது கண்ணது தீயது கார்மதநீர் மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம் பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண் வேலது வாளது நான்மறைக் கீன்ற விடுசுடர்க்கே. |
12 |
815 |
சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல் சேய்மூ வுலகம் வலம்வர வேயக் கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி அள்ளல் தீஞ்சுவை அருந்திய வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே. |
13 |
816 |
இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள் திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே வானாடன் பெற்ற வரை. |
14 |
817 |
பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக் கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே. |
15 |
818 |
செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப் பெருந்திரட் புழைக்கை மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின் பனையடர்ப் பாகன் றன திணையடி நெடும்பொற் சரணம் ஏத்த இடும்பைப் பெளவம் இனிநீங் கலமே. |
16 |
819 |
அலங்கல் மணிகனகம் உந்தி அருவி விலங்கல் மிசைஇழிவ தொக்கும் - பலங்கனிகள் உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து வண்டணைந்து சோரும் மதம். |
17 |
820 |
மதந்தந்த மென்மொழி மாமலை யாட்டி மடங்கல்கொன்ற மதந்தந்த முக்கண் ணரற்குமுன் ஈன்றவம் மாமலைபோல் மதந்தந்த கும்பக் குழவிமந் தாரப்பொன் னாட்டிருந்து மதந்தந்த செம்மலன் றோவையம் உய்ய வளர்கின்றதே. |
18 |
821 |
வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப் பொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும் பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர் இட்ட மாங்கனி முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை எந்தை அல்லது மற்று யாவுள சிந்தை செய்யும் தேவதை நமக்கே. |
19 |
822 |
கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண் வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற் றறுத்தெறிந்து கொன்றழித்த அங்கயங்கண் மீண்டே இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு. |
20 |
823 |
ஏறு தழீஇயவெம் புத்தேள் மருகஎங் குந்தவள நீறு தழீஇயஎண் தோளவன் செல்வவண் டுண்ணநெக்க ஆறு தழீஇய கரதலத் தையநின் றன்னைஅல்லால் வேறு தழீஇத்தொழு மோவணங் காத வியன்சிரமே. |
21 |
824 |
சிரமே, விசும்புபோத உயரி இரண்டசும்பு பொழியும்மே கரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மே புயமே, திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே அடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ நெஞ்சகத் தொடுங்குமோ நெடும்பணைச் சூரே. |
22 |
825 |
சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து வார்தந் தெழுமதியம் மன்னுமே - சீர்தந்த மாமதலை வான்மதியங் கொம்பு வயிறுதித்த கோமதலை வாண்மதியங் கொம்பு. |
23 |
(பாசுரங்கள் 24-30 கிடைக்கப் பெறவில்லை) |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
10.1. மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மதந்தந்த, அல்லது