முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » எட்டாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - எட்டாம் அதிகாரம்
எட்டாம் அதிகாரம்
8. நாண நாட்டம்
பேரின்பக் கிளவி
நாண நாட்டத் துறையோர் ஐந்து மருள சிவத்தை அதிசயத்(து) உயிரின் பக்குவந் தன்னைப் பலவும் வியந்தது. |
1. பிறை தொழுகென்றல்
மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன் உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேல(து)ஒத்துச் செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. |
67 |
கொளு பிறைதொழு கென்று பேதை மாதரை நறுநுதற் பாங்கி நாண நாட்டியது |
2. வேறுபடுத்துக் கூறல்
அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து இக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள் அக்குன்ற ஆ(று)அமர்ந்(து) ஆடச்சென் றாள்அங்கம் அவ்அவையே ஒக்கின்ற ஆரணங் கேஇணங் காகும் உனக்கவளே. |
68 |
கொளு வேய்வளைத் தோளியை வேறு பாடுகண்(டு) ஆய்வளைத் தோழி அணங்கென்றது. |
3. கனையாடல் கூறி நகைத்தல்
செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை அம்பலம்போல் அந்நிற மேனிநின் கொங்கையில் அங்கழி குங்குமமும் மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர் இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே. |
69 |
கொளு மாண நாட்டிய வார்குழல் பேதையை நாண நாட்டி நகைசெய்தது. |
4. புணர்ச்சி உரைத்தல்
பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத் தருங்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க் கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணார்அளிபின் வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்கனையே. |
70 |
கொளு மணக்குறி நோக்கிப் புணர்ச்சி உரைத்தது. |
5. மதியுடம் படுதல்
காகத்(து) இருகண் ணிற்(கு) ஒன்றே மணிகலந் தாங்(கு)இருவர் ஆகத்து ளோர்உயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத்தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில் தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்பத் துன்பங்களே. |
71 |
கொளு அயில்வே கண்ணியடு ஆடவன் தனக்கு உயிர் ஒன்றென மயிலியல் தோழி மதியுடம் பட்டது. |
நாண நாட்டம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -