முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » இருபதாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - இருபதாம் அதிகாரம்

இருபதாம் அதிகாரம்
20. ஓதற் பிரிவு
பேரின்பக் கிளவி
கல்வியில் பிரிவொரு நான்கும் காதல் புல்லும் ஆனந்த இன்பப் பூரணம் சொல்லும் பயனின் திறம்பா ராட்டல். |
1. கல்வி நலங்கூறல்
சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின் ஆரள வில்லா அளவுசென் றார்அம் பலத்துள்நின்ற ஓரள வில்லா ஓருவன் இருங்கழல் உன்னினர்போல் ஏரள வில்லா அளவினர் ஆகுவர் ஏந்திழையே. |
308 |
கொளு கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனச் செறிகுழற் பாங்கிக்(கு) அறிவறி வித்தது. |
2. பிரிவு நினைவுரைத்தல்
வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரும் என்பதுகொண்டு ஓதலுற் றார்உற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான் போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. |
309 |
கொளு கல்விக்(கு) அகல்வர் செல்வத் தவரெனப் பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது. |
3. கலக்கம் கண்டுரைத்தல்
கற்பா மதில் தில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த விற்பா விலங்கல்எங் கோனை விரும்பலர் போலஅன்பர் சொற்பா விரும்பினர் என்னமெல் லோதி செவிப்புறத்துக் கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. |
310 |
கொளு ஓதற்(கு) அகல்வர் மேதக் கவரெனப் பூங்கொடி கலக்கம் பாங்கிகண்(டு) உரைத்தது. |
4. வாய்வழி கூறித் தலைமகள் வருந்தல்
பிரியா மையும்உயிர் ஒன்றா வதும்பிரி யிற்பெரிதும் தரியா மையும்ஒருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற் பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரர்அன்ன புரியா மையும்இது வேயினி என்னாம் புகல்வதுவே. |
311 |
கொளு தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப் போதுறு குழலி புலம்பியது. |
ஓதற் பிரிவு முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருபதாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அகல்வர், வில்லா, பிரிவு