முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » இரண்டாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - இரண்டாம் அதிகாரம்
இரண்டாம் அதிகாரம்
2. பாற்கற் கூட்டம்
1. பாங்கனை நினைதல்
பூங்கனை யார்புனல் தென்புலி யூர்புரிந்(து) அம்பலத்துள் ஆங்கெனை யாண்டுகொண் டாடும் பிரானடித் தாமரைக்கே பாங்கனை யான்அன்ன பண்பனைக் கண்(டு)இப் பரிசுரைத்தால் ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை எய்துதற்கே. |
19 |
கொளு எய்துதற்(கு) அருமை ஏழையில் தோன்றப் பையுள் உற்றவன் பாங்கனை நினைந்தது. |
2. பாங்கன் வினாதல்
சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளம் உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்(து) எய்தியதே. |
20 |
கொளு கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது. |
3. உற்றது உரைத்தல்
கோம்பிக்(கு) ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித்(து) ஆங்(கு)அப் பணைமுலைக்கே தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லைச் சிவன்தாள் ஆம்பொன் தடமலர் சூடும்என் ஆற்றல் அகற்றியதே. |
21 |
கொளு மற்றவன் வினவ, உற்றது உரைத்தது. |
4. கழறியுரைத்தல்
உளமாம் வகைநம்மை உய்யவந்(து) ஆண்டுசென்(று) உம்பர்உய்யக் களமாம் விடம்அமிர்(து) ஆக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றோர்வஞ் சிம்மருங்குல் இளமான் விழித்ததென் றோஇன்றெம் அண்ணல் இரங்கியதே. |
22 |
கொளு வெற்பனத்தன் மெய்ப்பதங்கன் கற்பனையில் கழறியது. |
5. கழற்றெதிர் மறுத்தல்
சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற்றம் பலத்து மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும் பூணிற் பொலிகொங்கை யாவியை ஒவியப் பொற்கொழுந்தைக் காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே. |
23 |
கொளு ஆங்குயி ரன்ன பாங்கன் கழற வளந்தரு வெற்பன் உளந்தளர்ந்து உரைத்தது. |
6 கவன்றுரைத்தல்
விலங்கலைக் கால்கொண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும் முந்நீர்க் கலங்கலைச் சென்றஅன் றுகலங் காய்கமழ் கொன்றைதுன்றும் அலங்கலைச் சூழ்ந்தசிற்றம்பலத் தான்அருள் இல்லவர்போல் தலங்கலைச் சென்றிதென் னோவள்ளல் உள்ளம் துயர்கின்றதே. |
24 |
கொளு கொலைகளிற் றண்ணல் குறைநயந்(து) உரைப்பக் கலக்கங்செய் பாங்கன் கவன்(று) உரைத்தது. |
7. வலியழிவுரைத்தல்
தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று மலைத்தறி வார்இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும் கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை மலைச்சிறு மான்விழி யால்அழி வுற்று மயங்கினனே. |
25 |
கொளு நிறைபொறை தேற்றம் நீதியடு சால்பு மறியறு நோக்கிற்கு வாடினேன் என்றது. |
8. விதியடு வெறுத்தல்
நல்வினை யும்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல் கொல்வினை வல்லன கோங்கரும் பாம்என்று பாங்கன் சொல்ல வல்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கித் தொல்வினை யால்துய ரும்என(து) ஆருயிர் துப்புறவே. |
26 |
கொளு கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச் செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது. |
9. பாங்கன் நொந்துரைத்தல்
ஆலத்தி னால்அமிர்(து) ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல் கோலத்தி னாள்பொருட் டாக அமிர்தம் குணங்கெடினும் காலத்தி னால்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற் சீலத்தை நீயும் நினையா(து) ஒழிவதென் தீவினையே. |
27 |
கொளு இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி நின்னது நன்மை நினைந்திலை என்றது. |
10. இயல் இடங்கேட்டல்
நின்னுடை நீர்மையும் நீயும்இவ் வாறு நினைத்தெருட்டும் என்னுடை நீர்மையி(து) என்னென்ப தேதில்லை யேர்கொள்முக்கண் மன்னுடை மால்வரை யோமல ரோவிகம் போசிலம்பா என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே. |
28 |
கொளு கழுமலம் எய்திய காதல் தோழன் செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது. |
11. இயலிடங் கூறல்
விழியால் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று மொழியால் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழல்தில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்(கு)எழி லாம்எங் குலதெய்வமே. |
29 |
கொளு அழுங்கல் எய்திய ஆருயிர்ப் பாங்கற்குச் செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது. |
12. வற்புறுத்தல்
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பில்பைம் பூம்புனம் காக்கும் கருங்கண்செவ்வாய் மயிலைச் சிலம்புகண்(டு) யான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பனிக்கறையே. |
34 |
கொளு பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது. |
13. குறிவழிச் சேறல்
கொடுங்கால் குலவரை ஏழ்ஏழ் பொழில்எழில் குன்றும்அன்றும் நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய விடங்கால் அயிற்கண்ணி மேவுங்கொ லாம்தில்லை ஈசன் வெற்பில் தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலம் தண்புனத்தே. |
35 |
கொளு அறைகழல் அண்ணல் அருளின வழியே நிறையுடைப் பாங்கன் நினைவொடு சென்றது. |
14. குறிவழிக்காண்டல்
வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம் துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவிடா அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்(கு) அம்பலம்போல் படிச்சந் தமும்இது வேஇவ ளேஅப் பணிமொழியே. |
36 |
கொளு குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று தளிர்புரை மெல்லடித் தையாலக் கண்டது. |
15. தலைவனை வியந்துரைத்தல்
குவளைக்களத்(து)அம் பலவன் குரைகழல் போற்கமலத் தவளைப் பயங்கர மாகநின்(று) ஆண்ட அவயவத்தின் இவளைக்கண்(டு) இங்குநின்(று) அங்குவந்(து) அத்துனை யும்பகர்ந்த கவளக் களிற்றண்ண லேதிண்ணி யான்இக் கடலிடத்தே. |
37 |
கொளு நயந்த உருவம் நலனும் கண்டு வியந்த வனையே மிகுத்துரைத்தது. |
16 கண்டமை கூறல்
பணந்தாழ் அரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப் புணர்ந்தாங்(கு) அகன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய் நிணந்தாழ் சுடரிலை வேல்கண் டேன்ஒன்று நின்றதுவே. |
38 |
கொளு பிடிமிசை வைத்துப் பேதையது நிலைமை அடுதிறல் அண்ணற்கு அறிய உரைத்தது. |
17. செவ்வி செப்பல்
கயலுள வேகம லத்தவர் மீது கனிபவளத்(து) அயலுள வேமுத்தம் ஒத்த நிரைஅரன் அம்பலத்தின் இயலுள வேபிணைச் செப்புவெற் பாநின(து) ஈர்ங்கொடிமேல் புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே. |
37 |
கொளு அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்கு அவ்வுரு கண்டவன் செவ்வி செப்பியது. |
18. அவ்விடத்து ஏகல்
எயிற்குலம் முன்(று)இரும் தீஎய்த எய்தவன் தில்லையத்துக் குயிற்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தம்நிரைத்(து) அயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனம்நடக்கும் மயிற்குலம் கண்டதுண் டேல்அது என்னுடை மன்னுயிரே. |
36 |
கொளு அரிவையது நிலைமை அறிந்தவன் உரைப்ப எரிகதிர் வேலோன் ஏகியது |
19. மின்னிடை மெலிதல்
ஆவியன் னாய்கவ லேல்அக லேம்என்(று) அளித்தொளித்த ஆவியன் னார்மிக் கவாயின ராய்க்கெழு மற்(கு)அழிவுற்(று) ஆவியன் னார்மன்னி ஆடிடம் சேர்வர்கொல் அம்பலத்தெம் ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்(து) அருவரையே. |
37 |
கொளு மன்னனை நினைந்து மின்னிடை மெலிந்தது. |
20. பொழில்கண்டு மகிழ்தல்
காம்பிணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால் வாம்பிணை யால்வல்லி ஒல்குத லான்மன்னும் அம்பலவன் பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமும் தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றும்என் சிந்தனைக்கே. |
38 |
கொளு மணங்கமழ் பொழிலின் வடிவுகண்(டு) அணங்கென நினைந்(து) அயர்வு நீங்கியது. |
21. உயிரென வியத்தல்
நேயத்த தாய்நென்னல் என்னைப் புணர்ந்துநெஞ் சம்நெகப்போய் ஆயத்த தாய் அமிழ் தாய்அணங் காய்அரன் அம்பலம்போல் தேயத்த தாய்என்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது மாயத்த தாகி இதோவந்து நின்ற(து)என் மன்னுயிரே. |
39 |
கொளு வெறியறு பொழிலின் வியன்பொ தும்பரின் நெறியறு குழலி நிலைமை கண்டது. |
22. தளர்வு அகன்று உரைத்தல்
தாதிவர் போதுகொய் யார்தைய லார்அங்கை கூப்பநின்று சோதி வரிப்பந்(து) அடியார் கனைப்புனல் ஆடல்செய்யார் போதிவர் கற்பக நாடுபுல் வென்னத்தம் பொன்அடிப்பாய் யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை எய்துதற்கே. |
40 |
கொளு பனிமதி நுதலியைப் பைம்பொ ழிலிடைத் தனிநிலை கண்டு தளர்வகன்(று) உரைத்தது. |
23. மொழிபெற வருந்தல்
காவிநின்(று) ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத் தேவிஎன் றேஐயம் சென்ற(து)அன் றேஅறி யச்சிறிது மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடின்என் ஆவியன் றேஅமிழ் தேஅணங் கேஇன்(று) அழிகின்றதே. |
41 |
கொளு கூடற்(கு) அரிதென வாடி யுரைத்தது. |
24. நாணிக் கண் புதைத்தல்
அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்(சு) அம்பலத்தின் இகலிடம் தாவிடை ஈசன் தொழாரின்இன் னற்கிடமாய் உகலிடம் தான்சென்(று) எனதுயிர் நையா வகையதுங்கப் புகலிடம் தாபொழில் வாய்எழில் வாய்தரு பூங்கொடியே. |
42 |
கொளு ஆயிடைத் தனிநின்(று) ஆற்றா(து) அழிந்து வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது. |
25. கண் புதைக்க வருந்தல்
தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர் சூழச்செய் தான்அம் பலங்கை தொழாரின்உள் ளந்துளங்கப் போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேஎன்னைநீ வாழச்செய் தாய்கற்று முற்றும் புதைநின்னை வாணுதலே. |
43 |
கொளு வேல்தருங் கண்ணினை மிளிர்வன அன்றுநின் கூற்றரு மேனியே கூற்றெனக்(கு) என்றது. |
26. நாண்விட வருந்தல்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல் வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்(று) ஒருநாள் பிரியா(து) உயிரின் பழகி யுடன்வளர்ந்த அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத்(து) அழிகின்றதே. |
44 |
கொளு ஆங்ங னம்கண்(டு) ஆற்றா ளாகி நீங்கன நாணொடு நேரிழை நின்றது. |
27. மருங்கணைதல்
கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்(கு) அ·தே குறைப்பவர்தம் சீலத் தன்கொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள் நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால் சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே. |
45 |
கொளு ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கிக் கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது. |
28. இன்றியமையாமை கூறல்
நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும் வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன் தீங்ரும் பும்அமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்பும் கோங்கரும் பும்தொலைத்(து) என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே. 46 |
|
கொளு வென்றி வேலவன் மெல்லி யல்தனக்(கு) இன்றியமை யாமை எடுத்து ரைத்தது. |
29. ஆயத்து உய்த்தல்
சூளா மணியும்பர்க்(கு) ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்(கு) ஆளா ஒழிந்ததென் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும் நாளார் மலர்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே. |
47 |
கொளு தேங்கமழ் சிலம்பன் பாங்கிற் கூட்டியது. 29 |
30. நின்று வருந்தல்
பொய்யுடை யார்க்(கு)அரன் போல்அக லும்மகன் றாற்புணரின் மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும் மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான் பையுரை வாளர வத்(து) அல்குல் காக்கும்பைம் பூம்புனமே. 48 |
|
கொளு பாங்கிற் கூட்டிப் பதிவயின் பெயர்வோன் நீங்கற்(கு) அருமை நின் று நினைந்தது. |
பாற்கற் கூட்டம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பாங்கன், ஆவியன், உரைத்தது, வருந்தல், நிலைமை, அம்பலம்போல், தெரிந்து, சிற்றம், என்றது, பாங்கனை, செப்பியது