முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.097.திருநனிபள்ளி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.097.திருநனிபள்ளி
7.097.திருநனிபள்ளி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நற்றுணையப்பர்.
தேவியார் - பர்வதராசபுத்திரி.
985 |
ஆதியன் ஆதிரையன் அயன் சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் ஓதியன் உம்பர்தங்கோன் உல நாதியன் நம்பெருமான் நண்ணும் |
7.097.1 |
எப்பொருட்கும் முதலானவனும், ஆதீரை நாண்மீனைத் தனக்கு உரியதாகக் கொண்டவனும், பிரமனும் திருமாலும் அறிதற்கரிய ஒளிவடிவானவனும், சொல்லும் சொற்பொருளுமாய் நின்று, சுருங்குதல் இல்லாத வேதங்கள் நான்கினையும் ஓதியவனும், தேவர்களுக்குத் தலைவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
986 |
உறவிலி ஊனமிலி உண செறுவிலி தன்னினைவார் வினை அறவில கும்மருளான் மரு நறவிரி கொன்றையினான் நண்ணும் |
7.097.2 |
உறவுத் தொடக்கு இல்லாதவனும், குறைவில்லாதவனும், தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி அழித்த வில்லை உடையவனும், தன்னை நினைபவரது வினையெல்லாம் வலிமை குன்றி அழியும்படி, மிகவும் விளங்குகின்ற திருவருளை உடையவனும், தேனோடு மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர், மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநனிபள்ளியே.
987 |
வானுடை யான்பெரியான மனத ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு டூனுடை இவ்வுடலம் ஒடுங் நானுடை மாடெம்பிரான் நண்ணும் |
7.097.3 |
விண்ணுலகத்தைத் தனதாக உடையவனும், யாவரினும் பெரியோனும், மனத்தாலும் நினைத்தற்கரியவனும், பசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும், நுண்ணிய பொருளாகி, சுடர் வடிவத்தைக்கொண்டு, ஊனையுடையதாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும், உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும், நான் உடைய செல்வமாய் இருப்பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனிபள்ளியே.
988 |
ஓடுடை யன்கலனா உடை பாடுடை யன்பலிதேர்ந் துணும் காடுடை யன்னிடமா மலை நாடுடை நம்பெருமான் நண்ணும் |
7.097.4 |
ஓட்டினை உண்கலமாகவும், கோவணத்தை உடையாகவும், உடையவனும், ஒரு பக்கத்தில் உமையை உடையவனும், பிச்சை எடுத்து உண்ணும் தன்மையை உடையவனும், வாழ்வதற்குரிய இடமாகக் காட்டை உடையவனும், ஏழு மலைகளையும், கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும் உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
989 |
பண்ணற் கரியதொரு படை கண்ணற் கருள்புரிந்தான் உண்ணற் கிமையவரை நண்ணற் கரியபிரான் நண்ணும் |
7.097.5 |
ஆக்குதற்கு அரிதாகிய சக்கரப்படை ஒன்றை ஆக்கி, அதனைத் திருமாலுக்கு அளித்தவனும், தன்னை மதியாதவனாகிய தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து, ஒருவராலும் அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
990 |
மல்கிய செஞ்சடைமேல் மதி புல்கிய ஆரணன்எம் புனி மெல்கிய விற்றொழிலான் விருப் நல்கிய நம்பெருமான் நண்ணும் |
7.097.6 |
நிறைந்த, சிவந்த சடையின்மேல், சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும், எங்கள் தூயோனும், முப்புரி நூலையணிந்த, வேறுபட்ட தன்மையை உடையவனும், தன்மேல் அன்புடையவனாகிய மிக்க தவத்தையுடைய அருச்சுனனுக்கு, மெல்லிய வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
991 |
அங்கமொ ராறவையும் அரு எங்கும் இருந்தந்தணர் எரி பங்கய மாமுகத்தாள் உடை செங்கயல் பாயும்வயல் திரு |
7.097.7 |
தாமரை மலர்போலும் முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம், அந்தணர்கள் மூன்று எரிகளோடே, ஆறு அங்கங்களையும், அரிய வேதங்களையும், வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து வளர்க்கின்ற இடமாகிய, செவ்விய கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனிபள்ளியே.
992 |
திங்கட் குறுந்தெரியல் திகழ் நங்கட் பிணிகளைவான் அரு மங்கத் திருவிரலால் அடர்த் நங்கட் கருளும்பிரான் நண்ணும் |
7.097.8 |
சிறிய பிறையாகிய, விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச் சூடியவனும், நுண்ணியனாய் நின்று, எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி, நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை நீக்குகின்ற, உயர்ந்த அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும், வலிய அரக்கனாகிய இராவணனையும், அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய, நமக்கு அருள்செய்யும் பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர், திருநனிபள்ளியே.
993 |
ஏன மருப்பினொடும் எழில் வான மதிள்அரணம் மலை ஊனமில் காழிதன்னுள் ளுயர் ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் |
7.097.9 |
பன்றியின் கொம்பையும், அழகிய ஆமையோட்டையும் விரும்பியணிந்து, வானத்திற்செல்லும் மதிலாகிய அரணின்முன், மலையையே வில்லாக வளைத்து நின்றவனும், குறையில்லாத சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே.
994 |
காலமும் நாள்கழியுந் நனி கோலம தாயவனைக் குளிர் மாலை மதித்துரைப்பார் மண் சாலநல் லின்பமெய்தித் தவ |
7.097.10 |
காலமும் நாள்தோறும் கழியாநிற்கும், அதனால், குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன், கருணையால் திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர், தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து, பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து, சிவலோகத்தில் இருப்பவரே யாவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 95 | 96 | 97 | 98 | 99 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநனிபள்ளி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பள்ளியதே, திருநனிபள்ளியே, உடையவனும், ஊர்நனி, நண்ணும், இறைவன், பொருந்தியிருக்கின்ற, நம்பெருமான், பொருந்தியிருக்கும், நுண்ணியனாய், காலமும், நங்கட், தன்மையை, மூன்று, நான்கினையும், நின்று, திருநனிபள்ளி, திருச்சிற்றம்பலம், திருமுறை