முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.074.திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.074.திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
7.074.திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
751 |
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை |
7.074.1 |
மின்னலை உண்டாக்குகின்ற கரிய மேகங்கள் மழையைப் பொழிந்தபின், அருவிகளாய் ஓசையுண்டாகப் பாய்ந்து அலைகளைக் கொணர்ந்து கரையோடு மோதுவிக்கின்ற, அன்னப் பறவைகள் பொருந்திய காவிரியாற்றினது, அகன்ற கரையின்கண் பலவிடத்தும் எழுந்தருளியிருப்பவரும், திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும், வீற்றிருப்பவராகிய தலைவரும், தமது அடியிணையைத் தொழுது துயிலெழுகின்ற அன்பையுடையவராகிய அடியவர்கள் வேண்டிக்கொண்ட வகைகளை எல்லாம் நன்கு உணர்ந்து அவைகளை முடித்தருளுகின்றவரும், என் உடம்பை வருத்திய பிணியாகிய துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் மறக்குமாறு யாது!
752 |
கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் மாடுமா கோங்கமே மருதமே பொருது ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக் பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப் |
7.074.2 |
கூடத் தக்கனவாய் உள்ள யாறுகளோடு கூடியும், அவை வேறு காணப்படாதவாறு கோத்தும், கொய்யும் பருவத்தை அடைந்த கொல்லைத் தினைக் கதிர்களையும், மலைநெற் கதிர்களையும் சிதறியும், இரு பக்கங்களிலும் கோங்கு மருது முதலிய மரங்களை முரித்தும், கரைகளை மலை தகர்ந்தாற் போலத் தகருமாறு இடித்தும் ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் உள்ளவராகிய தலைவரும், எனது பழவினைகளாய் உள்ளவற்றை அடியோடு தொலைத்தவரும் ஆகிய எம்பெருமான, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான், பாடும் வகையை அறிகின்றிலேன்!
753 |
புல்கியுந் தாழ்ந்தும்போந் துதவஞ் செய்யும் செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக் சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத் |
7.074.3 |
கொல்லுகின்ற பெரிய யானையின் தந்தங்களையும், மணம் பொருந்திய கொழுமையான கனிகளாகிய வளவிய பயனையும் வாரிக்கொண்டு, அவற்றின் தொகுதியைப் பொருந்தி வந்து வலம் செய்தும், வணங்கியும் தவம் புரிகின்ற உலகியலாளரும், வீட்டுநெறியாளரும் விடியற்காலையில் வந்து மூழ்குமாறு ஓடுகின்ற பெரிய காவிரி யாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைத் தொடர்ந்து வருத்திய மிக்க பிணியினது தொடர்பை அறுத்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலுங் கடையேனும் ஆகிய யான் புகழுமாற்றை அறிகின்றிலேன்!
754 |
பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் கறியுமா மிளகொடு கதலியும் உந்திக் எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக் அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை |
7.074.4 |
அருவிகள், பொரிந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும் நிரம்பக் கொணர்ந்து குவித்துப் புன்செய் நிலத்தை மூடிக்கொள்ள, பின்பு, கரிக்கப்படும் சிறந்த மிளகுகளையும், வாழைகளையும் தள்ளிக்கொண்டு சென்று கடலில் பொருந்தச் சேர்ப்பதையே கருதிக்கொண்டு, தன் இரு மருங்கிலும் சென்று அலை வீசுகின்ற காவிரியாற்றினது கரையின்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது அரிய வினைகளாய் உள்ள குற்றங்களைப் போக்கினவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனுமாகிய யான் அறியும் வகையை அறிகிலேன்!
755 |
பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக் ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை |
7.074.5 |
பொழியப்பட்டுப் பாய்கின்ற மும்மதங்களையுடைய யானையது தந்தங்களையும், பொன்னைப்போல மலர்கின்ற, வேங்கை மரத்தினது நல்ல மலர்களையும் தள்ளிக்கொண்டு அருவிகள் பலவும் வீழ்தலால் மிக்க நீர் நிரம்பி, எட்டுத் திக்கில் உள்ளவர்களும் வந்து முழுகுமாறு, இவ்விடத்தில் சுழித்துக்கொண்டு பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னைப்பற்றிய நோயை இன்றே முற்றும் நீக்கியவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய் போலும் கடையேனும் ஆகிய யான் பிதற்றுதலை ஒழிந்திலேன்.
756 |
புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக் இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை |
7.074.6 |
புகழப்படுகின்ற சிறந்த சந்தனக் கட்டைகளையும், அகிற் கட்டைகளையும், பொன்னும் மணியுமாகிய இவைகளையும் வாரிக்கொண்டும், நல்ல மலர்களைத் தள்ளிக் கொண்டும், தன்னால் அகழப்படுகின்ற, பெரிய, அரிய கரைகள் செல்வம்படுமாறு பெருகி, முழுகுகின்றவர்களது பாவத்தைப் போக்கி, கண்ணில் தீட்டிய மைகளைக் கழுவி நிற்கின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், என்னை இழிவடையச் செய்த நோயை இப்பிறப்பில் தானே ஒழிக்க வல்லவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றம் உடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான், இகழுமாற்றை நினையமாட்டேன்!
757 |
வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக் உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை |
7.074.7 |
அளவில்லாத மாம்பழங்களையும், வாழைப்பழங்களையும் வீழ்த்தியும், கிளைகளோடு சாய்த்தும், மராமரத்தை முரித்தும், கரைகள் அரிக்கப்படுகின்ற கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக் கொண்டு, மூங்கில்களையும் மயில் தோகைகளையும் சுமந்து, ஒளி விளங்குகின்ற முத்துக்கள் இருபக்கங்களும் தெறிக்க, விரைய ஓடுகின்ற பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனது, உலகறிந்த பழவினைகளை முற்றிலும் நீக்கினவரும் ஆகிய எம் பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் துதிக்குமாற்றை அறிகின்றிலேன்!
758 |
ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப் காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக் ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை |
7.074.8 |
அணியவான ஊர்களில் உள்ளவர்களும், பெரிதாகிய நாடு முழுதும் உள்ளவர்களும், மனம் விரும்பி நினைக்குமாறு, பறவைக் கூட்டங்கள் பல மூழ்கி எழுந்து, அழகிய கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் திரிய, நீர் நிறைந்த, பெரிய, கரிய கடலைக் காண்பதையே கருத்தாகக்கொண்டு கவரி மானினது சிறந்த மயிரைச் சுமந்து, ஒளியையுடைய பளிங்குக் கற்களை உடைத்து, நானிலங்களில் உள்ள பொருள்களையும் கண்டு செல்கின்ற, பெரிய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும் பிறப்பில் வரக் கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே களைந் தொழித்தவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய் போலும் கடையேனும் ஆகிய யான், துய்க்குமாற்றை அறிகின்றிலேன்!
759 |
புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் இலங்குமா முத்தினோ டினமணி இடறி கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக் விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை |
7.074.9 |
வயல்கள் வளம்படவும், அதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கவும், நீர்பெருகி பொற்கட்டிகளைச் சுமந்துகொண்டு, ஒளி விளங்குகின்ற சிறந்த முத்துக்களையும், மற்றும் பலவகை மணிகளையும் எறிந்து, இருகரைகளிலும் உள்ள பெரிய மரங்களை முரித்து ஈர்த்துக் கரையைத் தாக்கி, எவ்விடத்தில் உள்ளவர்களும் ஆரவாரம் செய்து ஒலிக்க, கலங்கி ஓடுகின்ற காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருத்துருத்தியிலும், திருவேள்விக்குடியிலும் வீற்றிருப்பவராகிய தலைவரும், எனக்கு வரும்பிறப்பில் வரக்கடவதாகிய துன்பமாகிய குற்றத்தை இப்பிறப்பிற்றானே நீக்கியவரும் ஆகிய எம்பெருமானாரை, குற்றமுடையேனும், நாய்போலும் கடையேனும் ஆகிய யான் நீங்குமாற்றை எண்ணேன்!
760 |
மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி அங்கையான் கழலடி யன்றிமற் றறியான் கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக் தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் |
7.074.10 |
மங்கை ஒருத்தியை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தும், இடபத்தை விரும்பி ஊர்ந்தும் நிற்கின்ற, பகைத்தலையுடையவரது முப்புரங்களை நீறுபட அழித்த அகங்கையை உடையவனது கழலணிந்த திருவடிகளை யன்றி வேறொன்றை அறியாதவனாகியும், அவன் அடியார்க்கு அடியவனாகியும் அவனுக்கு அடியவனாகிய நம்பியாரூரன், கங்கை போலப் பொருந்திய காவிரியாற்றினது கரைக்கண் உள்ள திருக்துருத்தியிலும், திருவேள்விக் குடியிலும் வீற்றிருக்கின்ற தலைவருக்குச் சேர்ப்பித்த இப்பாடல்களை, தங்கள் கையால் தொழுது, தங்கள் நாவிற் கொள்பவர்கள், தவநெறிக் கண் சென்று, பின்னர்ச் சிவலோகத்தை ஆள்பவராதல் திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடிகளைச், துருத்தியார், வேள்விக், திருத்துருத்தியிலும், குடியுளார், செடியனேன், நாயேன், திருவேள்விக்குடியிலும், காவிரித், கரைக்கண், கடையேனும், தலைவரும், வீற்றிருப்பவராகிய, காவிரியாற்றினது, குற்றமுடையேனும், றறிகிலேன், எம்பெரு, நாய்போலும், எம்பெருமானாரை, உள்ளவர்களும், கட்டைகளையும், ஓடுகின்ற, சிறந்த, அறிகின்றிலேன், பொருந்திய, இம்மையே, பெருமானாரை, சென்று, விரும்பி, நன்மலர், கரைகள், ஒழிந்திலேன், பெருகி, நீக்கியவரும், பாய்கின்ற, வளம்படப், போலும், காண்பதே, துன்பமாகிய, சுமந்து, எனக்கு, குடியிலும், விளங்குகின்ற, திருவேள்விக், காண்பதையே, குற்றத்தை, கருங்கடல், நிற்கின்ற, கருத்தாய்க், கடலைக், இப்பிறப்பிற்றானே, தங்கள், யானையின், கரையின்கண், கொணர்ந்து, தொழுது, வருத்திய, பழவினை, றெம்பெரு, காவிரி, திருமுறை, திருவேள்விக்குடியும், திருச்சிற்றம்பலம், மேகங்கள், பொழிந்திழிந், யுள்ளன, கதிர்களையும், கைபோய், தருவிகள், ஆசறுத், அருவிகள், சந்தனக், டகிலும், துண்டமோ, முரித்தும், மரங்களை, திருத்துருத்தியும், தந்தங்களையும், சந்தனத், தள்ளிக்கொண்டு