முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.066.திருவாவடுதுறை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.066.திருவாவடுதுறை
7.066.திருவாவடுதுறை
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர்.
தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.
672 |
மறைய வன்ஒரு மாணிவந் தடைய கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் இறைவன் எம்பெரு மான்என் றெப்போதும் அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் |
7.066.1 |
திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, உன்னை, அந்தணனாகிய பிரமசாரி ஒருவன் அன்புடன் வந்து அடைய, அவனது அரிய உயிரைப் போகாது நிறுத்த வேண்டி, உதிரத்தைக் கொண்ட சூலத்தையுடைய இயமனைக் காலால் உதைத்துக்கொன்ற காரணத்தை உணர்ந்து உணர்ந்து, அடியேன், 'யாவர்க்கும் முதல்வன்; எமக்குப் பெருமான்' என்று எப்பொழுதும் துதித்துத் துதித்து, அஞ்சலி கூப்பிநின்று, கழலும் சிலம்பும் ஒலித்தலைக் கொண்ட உனது செவ்விய திருவடியிடத்துக் கொண்ட அன்போடும் வந்து அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டருள்.
673 |
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச் புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் |
7.066.2 |
திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, தௌவுபெற்ற சிலந்தி ஒன்று, தனது வாயினின்றும் உண்டாகும் நூலால் அழகிய பந்தரை உறுதிப்பட ஆக்க, அச்சிலந்தியை, சுருண்ட, சிவந்த சடையை உடையையாகிய நீ சோழனாய்ப் பிறக்கச்செய்த திருவருளை அறிந்து, அடியேன், எனது எதிர் வினைக்கு அஞ்சித் துணுக்குற்று, உனது அழகிய மலர்போலும் திருவடியில் விழுந்து புரண்டு, 'போற்றி! போற்றி!' என்று துதித்து, அன்பினால் அழுது, உன்னை வந்து அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
674 |
திகழும் மாலவன் ஆயிர மலரால் புகழி னால்அவன் கண்ணிடைந் திடலும் திகழு நின்திருப் பாதங்கள் பரவித் அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் |
7.066.3 |
தேவர்கட்குத் தேவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, மிக்க புகழுடையவனாகிய திருமால் நாள்தோறும் ஆயிரந் தாமரைப் பூக்களால் உன்னை அருச்சிக் கின்றவன், ஒருநாள் ஒரு சிறந்த பூக்குறைய, அவன் அதற்கு மெலியாது, புகழத்தக்க உறுதிப் பாட்டுடன், தனது கண்களில் ஒன்றைப் பெயர்த்து உனக்குச் சாத்த, அதனைக் கண்டு மகிழ்ந்து அவனுக்கு நீ சிறந்த சக்கரப்படையை அளித்தமையை உணர்ந்து, அடியேன், என் நிலைமையைப் பெயர்த்து, நிலையில்லாது உழலச் செய்கின்ற வலிய வினைக்கு அஞ்சி, ஒளிவீசுகின்ற உனது திருவடிகளைத் துதித்து, உனது பெருமைகள் பலவற்றையும் பலகாற் பேசி, உன்னை வந்து அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
675 |
வீரத் தால்ஒரு வேடுவ னாகி போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப் வாரத் தால்உன நாமங்கள் பரவி ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன் |
7.066.4 |
திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, நீ, ஒரு வேடுவனாய் உருக்கொண்டு, ஒரு பன்றியை, வீரத்துடன் விரைந்து துரத்திச் சென்று, உன்னை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனனை அடைந்து, அவன்மேல் வைத்த விருப்பத்தால் அவனோடு போர் புரிந்து, பின்பு அவனுக்கு, சிறந்த படையாகிய பாசுபதக் கணையை அளித்தமையை அறிந்து, அடியேன் உனது தன்மைகளை நினைந்து உருகி, உனது திருப்பெயர்களை அன்போடு சொல்லி உன்னை வழிபட்டு, ஆர்வத்தோடு வந்து உன் திருவடியிணையை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
676 |
ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ புக்கு மற்றவர் பொன்னுல காளப் மிக்க நின்கழ லேதொழு தரற்றி அக்க ணிந்தஎம் மானுனை யடைந்தேன் |
7.066.5 |
வேதம் ஓதுபவனே, உலகிற்கு முதலாய மூர்த்தியே, உன் அரையில் எலும்பை அணிந்த பெருமானே, திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, நீ, மூன்று ஊர்களில் ஓங்கி எரிகின்ற நெருப்பை ஒருசேர எழுப்பியபொழுது, அங்கு உன்னையே நினைத்திருந்த மூவராகிய அவர் மட்டில் உய்ந்து, உன் திருவடியை அடைந்து, மேல் உலகத்தை ஆளும் வண்ணம், அவர்கட்கு, புகழத்தக்க வகையில் திருவருள் ஈந்தமையை அறிந்து, அடியேன், மேலான உனது திருவடியையே தொழுது முறையிட்டு, உன்னை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாவடுதுறை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடைந்தேன், எழுந்தருளியுள்ள, எங்கள், முதற்கடவுளே, அடியேன், திருவாவடுதுறையில், ஆதிஎம், டுதுறை, கொண்டருள், டடியேன், அறிந்து, போற்றி, சிறந்த, உணர்ந்து, துதித்து, புரிந்து, அரையில், கொடுத்தல்கண், அடைந்து, புகழத்தக்க, பெயர்த்து, அளித்தமையை, அவனுக்கு, சிலந்தி, திருவாவடுதுறை, திருச்சிற்றம்பலம், திருமுறை, சுருண்ட, புரண்டு, தடைந்தேன், கஞ்சிவந், வினைக்கு