முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.049.திருமுருகன்பூண்டி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.049.திருமுருகன்பூண்டி
7.049.திருமுருகன்பூண்டி
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. கழறிற்றறிவாரென்னுஞ் சேரமான்பெருமானாயனார் கொடுத்த திரவியங்களை பரிசனங்கள் தலையில் எடுப்பித்துக்கொண்டு திருமுருகன்பூண்டிக்குச் சமீபத்தில் எழுந்தருளும்போது பரமசிவத்தின் கட்டளையினால் பூதங்கள் வேடுவர்களாகிவந்து அந்தப்பரிசனங்களை அடித்துப் பொருள்களைப் பறித்துப் போயின. அப்போது சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்தப் பதிகமோதிப் பொருள்களைப் பெற்றுக்கொண்டது.
சுவாமிபெயர் - ஆவுடைநாயகர்.
தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
498 |
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் முடுகு நாறிய வடுகர் வழ்முரு இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் |
7.049.1 |
எம்பெருமானிரே, முடைநாற்றம் சேய்மையினும்விரையச்சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி, வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர், வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி, 'திடுகு' என்றும், 'மொட்டு' என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; இம்மாநகரிடத்து இங்குறுகிய, நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர்?
499 |
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் முல்லைத் தாது மணங்க மழ்முரு எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் |
7.049.2 |
எம்பெருமானிரே, முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை, வேடுவர்கள், வில்லைக் காட்டி, வெருட்டியும், பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும், கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீ?
500 |
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும் முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் |
7.049.3 |
எம்பெருமானிரே, வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அப்பாவிகள், பாவம் என்பதொன்றையறியாராய், விலங்குகளையே கொன்று தின்று, நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; இதன்கண் நீர், இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று, இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?
501 |
பீறற் கூறை உடுத்தொர் பத்திரங் சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங் மோறை வேடுவர் கூடி வாழ்முரு ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில் |
7.049.4 |
எம்பெருமானிரே, குற்றமுடைய வேடுவரே கூடி, ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய், வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர், அவர்கள், கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு, அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு, வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி, நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம்; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால், அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல், இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?
502 |
தயங்கு தோலை உடுத்துச் சங்கர மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் முயங்கு பூண்முலை மங்கை யாளொடு இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் |
7.049.5 |
எம் பெருமானிரே, நீர், விளங்குகின்ற தோலை உடுத்து, இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால், தழுவுகின்ற, அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும், இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?
503 |
விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்தளகம் கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர்மகிழ்வீர் மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. |
7.049.6 |
எம்பெருமானிரே, நீர், கொட்டிப்பாடுதற்கு உரிய, தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற' 'கொக்கரை, கொடு கொட்டி, தத்தளகம், துந்துமி, குடமுழா, என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால், மற்றும், ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால், பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர்?
504 |
வேத மோதிவெண் ணீறு பூசிவெண் ஓத மேவிய ஒற்றி யூரையும் மோதி வேடுவர் கூறை கொள்ளு ஏது காரண மேது காவல்கொண் |
7.049.7 |
எம்பெருமானிரே, நீர், வேதத்தை ஓதிக்கொண்டு, வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு, வெள்ளிய கோவணத்தை உடுத்து, பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர்; அங்குப் போகாமல், வேடர்கள், வருவோரைத் தாக்கி, அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, யாது காரணத்தால், எதனைக் காத்துக் கொண்டு, எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர்?
505 |
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் மடவ ரல்லுமை நங்கை தன்னையொர் முடவ ரல்லீர் இடரி லீர்முருகன் இடவ மேறியும் போவ தாகில்நீர் |
7.049.8 |
எம்பெருமானிரே, நீர், தனிமையாக இல்லாது, படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும், பருத்த தோள்களையும், வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய, 'உமை' என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர்; முடவரல்லீர்; ஆகவே, பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர்; அன்றியும், நீர, விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால், இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, இங்கு, எதன்பொருட்டு இருக்கின்றீர்?
506 |
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர் மோந்தை யோடு முழக்க றாமுரு ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் |
7.049.9 |
எம் பெருமானிரே, வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு, வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி, முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே, நீர், 'மொந்தை' என்னும் வாச்சியத்தோடு, வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநகரிடத்து, அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தியோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?
507 |
முந்தி வானவர் தாந்தொ ழும்முரு பந்த ணைவிரற் பாவை தன்னையொர் சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் டெந்தம் மடிகளை ஏத்து வார்இட |
7.049.10 |
தேவர், ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்குகின்ற, திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற பந்திற் பொருந்திய விரல்களையுடைய, பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை, அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள், துன்பம் ஒன்றும் இல்லாதவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகன்பூண்டி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மாநகர்வாய், கிங்கிருந், தீர்எம், பிரானீரே, எம்பெருமானிரே, கன்பூண்டி, பூண்டி, எத்துக், இருக்கின்றீர், முருகன், பொருட்டு, மாநகரிடத்து, முருகன்பூண்டி, வேடுவர், வெள்ளிய, எதன்பொருட்டு, உடைகளைப், தன்னையொர், அவர்களது, மாநகர், பொருந்திய, பறித்துக்கொள்ளும், இதன்கண், திருமுருகன்பூண்டி, என்னும், ஒன்றும், வாழ்கின்ற, கொள்ளுமிடம், தாகில்நீர், திடுகு, நீர்மகிழ்வீர், தத்தளகம், தன்னொடும், கொட்டி, பூசிவெண், குடமுழா, உத்திர, வைத்துகந்தீர், பாகத்தில், விரும்பி, திருமுறை, வேடர்கள், பூசிக்கொண்டு, பொருள்களைப், திருச்சிற்றம்பலம், தனங்களையுடைய, உடுத்து, பறித்துக், என்றும், சொற்களைச், நுண்ணிய, வில்லைக், காட்டி, வருவோரை, தின்று, வாழ்முரு, மயங்கி, பூண்முலை, பெருமானிரே, போகாமல், பிச்சை, பொருந்தாத, நாள்தோறும், பிச்சையை