முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.040.திருக்கானாட்டுமுள்ளூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.040.திருக்கானாட்டுமுள்ளூர்

7.040.திருக்கானாட்டுமுள்ளூர்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பதஞ்சலியீசுவரர்.
தேவியார் - கானார்குழலம்மை.
404 |
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கிஉமிழ்ந் தானைப் முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக் |
7.040.1 |
கூரிய வாயை உடைய பிறை ஒளிரும் நீண்ட சடையை உடையவனும், 'வேதம், வாயாற் சொல்லப்படும் பிற சொற்கள், இந்திரன், திருமால், பிரமன்' என்னும் பொருள்களாய் உள்ளவனும் ஆகிய இறைவனை, அடியேன், தாழையரும்புகள், வளைந்த தாழை மரத்தினால் ஈன்றிடப்பட்டு, முட்களையுடைய வாயினையுடைய இதழ்களைப் பொருந்தி மலர்ந்து மணம் வீசுகின்ற, தேன் மிகுந்த சோலைகள் சூழ்ந்த, மதுவொழுகும் வாயினையுடைய கருங்குவளை மலர்கள் கண்ணுறங்குவது போலக் காணப்படுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
405 |
ஒருமேக முகிலாகி யொத்துலகந் தானாய் பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப் திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக் |
7.040.2 |
உலகிற்கு ஒருபெருந் துணையாய் உள்ள மேகமாகியும், தம்முள் ஒத்த உலகங்கள் பலவும் தானேயாகியும், அவற்றில் உள்ள ஊர்வனவும், நிற்பனவுமாகிய உயிர்களும், அவற்றின் தோற்ற ஒடுக்கங்கட்குக் காரணமாகிய ஊழிக் காலங்களும் தானே யாகியும், அலையால் கரையை மோதுகின்ற கடல்களாகியும், ஐந்து பூதங்களாகியும் அவற்றைப் படைத்து நிற்பவனும், அறவடிவினனும், புரிந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருமகளும் விரும்பத்தக்க செல்வத்தை உடையவர்களது மாளிகைகளும், முத்தீயையும் வளர்க்கின்ற மேலான தகுதியுடைய அந்தணர்கள் வேதத்தை ஓதி வாழ்கின்ற மாளிகைகளும் உள்ள இடங்களிலெல்லாம், கரிய எருமைகள் செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
406 |
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ் அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக் |
7.040.3 |
வலிமை மிகுந்த மூன்று இலைகளை உடைய சூலத்தை உடையவனும், இறைவனும், வேதத்தை ஓதுபவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் மேலே சூழ்கின்ற கொன்றை மாலையோடு, வெள்ளிய சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை ஏறுபவனும், 'சுயஞ்சோதி' எனப்படுகின்ற ஒளியானவனும் ஆகிய இறைவனை, அடியேன், அன்னப்பறவைகள், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்ற தாமரையினது ஒப்பற்ற மலர்களின்மேல் ஏறி விளையாடுகின்ற, அகன்ற நீர்த்துறையின் அருகே கரும்புகள் வளரப்பட்டு, செந்நெற்பயிர்கள் செறிந்து விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
407 |
பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப் நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி பாளைபடு பைங்கமுகின் சூழல்இளந் தெங்கின் காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக் |
7.040.4 |
பூளைப் பூவையும், அழகிய கொன்றை மாலையையும், புரித்த சடையின்கண் உடையவனும், நீராகியும், நெருப்பாகியும், ஐம்பூதங்களாகியும், 'நாளை, இன்று, நேற்று' என்னும் நாள்களாகியும், பரவெளியாகியும், சூரியனாகியும், சந்திரனாகியும் நிற்கின்ற எங்கள் இறைவனை, அடியேன், பாளைகள் உளவாகின்ற, பசிய கமுகுகளினது செறிவினிடத்தே உள்ள இளமையான தென்னையினது, மிக்க மயக்கத்தை உண்டாக்குகின்ற கள்ளினை இளைய ஆண் வண்டுகள் உட்கொண்டு திளைத்து இசையைப் பாட, மயில்கள் ஆடுகின்ற, உயர்ந்த சோலையையுடைய, திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
408 |
செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத் முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை இரக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் ங்கும் கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக் |
7.040.5 |
சீறுகின்ற வாயினையும், பசிய கண்களையும் உடைய, வெள்ளிய பாம்பினை அரையிற் கட்டியவனும், தேவர்கள் முடியிற் பதிக்கும் மணிபோன்றவனும், சிவந்த கண்களையுடைய இடப ஊர்தியை உடையவனும், முருக்கமரத்தின்கண் பொருந்தியுள்ள மலர்போலும் திருமேனியை உடையவனும், எல்லாவற்றிற்கும் சான்றாய் நிற்பவனும், உலகமுழுதும் தானேயாய் நிறைந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன், எழுவகைப் பிறப்பினவாகிய உயிர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வேதத்தை ஓதுகின்ற அந்தணர்கள்வேள்வி வேட்டிருத்தலால், அவர்கட்கு மிக்க நிதிகளை வழங்குகின்ற மாளிகையின் பக்கங்களில் எல்லாம், கருக்குவாயினையுடைய பனைமரங்களும், தென்னை மரங்களும் நிறைந்த சோலைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
409 |
விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக் கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக் |
7.040.6 |
எருதினை எழுதிய ஒலிக்குங் கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும், நீரில் துயில்கின்ற திருமாலும், வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி இணையையும், அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய, 'சங்கரன்' என்னும் காரணப் பெயரை உடையவனும், மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை, அடியேன், இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும், மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிடநதியின் கரைமேல் உள்ள, கடையர்கள் தாங்கள் களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச் சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.
410 |
அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் |
7.040.7 |
அரிய மணியாகிய மாணிக்கம் போல்பவனும், முத்துப்போல்பவனும், ஆனைந்தினை ஆடுகின்ற தேவர் பெருமானும், அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகிய பிற மணிகள் போல்பவனும், இனிய கரும்பினின்றும் வடிதலையுடைய மிக்க சாறுபோல்பவனும், அறிதற்கரிய மணியாகிய சிந்தாமணி போல்பவனும், மாற்று விளங்குகின்ற செம்பொன் போல்பவனும் ஆகிய இறைவனை, அடியேன் முன்னே, நிறம் பொருந்திய மணிகளைக் கொழித்து மலையினின்றும் பாய்ந்து, பின்பு நிலத்தில் சுழித்துக் கொண்டு ஓடுகின்ற, அலைகளுக்கிடையில், வரிசையான வளையல்களை அணிந்துள்ள மகளிர் மூழ்கி விளையாடுகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள, நீலோற்பல மலர்கள் நீலமணிபோல மலர்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
411 |
இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின் குழைதழுவு தருக்காதிற் கோளரவ மசைத்துக் தழைதழுவு தண்ணிறத்த செந்நெலத னயலே கழைதழுவித் தேன்தொடுக்குங் கழனிசூழ் பழனக் |
7.040.8 |
பாம்பாகிய அணிகலமும், அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினையுடைய கடவுளும், தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு, குழைபொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு, உடையைக் கோவணமாக உடுத்த அழகனும், கங்கை நீராற் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், தழைத்தலையுடைய பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில், பெரிய முத்துக்களை யுடைய மென்மையான கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
412 |
குனியினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக் பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப் துனியினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார் கனியினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக் |
7.040.9 |
வளைந்த இனிய ஒளியையுடைய சந்திரனைச் சூடியதும், வண்டுக் கூட்டங்கள் பாட, நீர்த்துளிகள் சிந்துகின்றதுமாகிய சடையினையும், குண்டலம் பொருந்திய காதினையும் உடையவனும், பால்போலும் வெள்ளிய. நீற்றை அணிந்தவனும், எல்லா உருவங்களும் தன் உருவமேயாய் நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன், தூய நீலோற்பலங்கள், ஊடலிலும் இனியனவாயும்தூயனவாயும் தோன்றும் மொழிகளையும், கொவ்வைக் கனிபோலும் வாயினையும் உடைய அழகிய பெண்கள்போலக் கண்வளர்கின்ற, நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள, பழங்களைப் பழுத்த, இனிய வாழைத் தோட்டங்களைப் பொருந்தியுள்ள சோலைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
413 |
தேவியம்பொன் மலைக்கோமான் றன்பாவை யாகத் மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு தூவியவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத் காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக் |
7.040.10 |
அழகிய பொன்மலைக்கு அரசன் மகள் தனக்கு மனைவியாய் வாய்க்க, அவளைத் தனது திருமேனியில் ஒருபாகமாகச் சேர்ந்திருக்கும்படி வைத்த பெருமானும், பாவிகள் விரும்பும் கொடிய நரகத்தில் வீழாதபடி நமக்கு மெய்ந்நெறியைக் காட்டுகின்ற, வேதத்தால் துணியப்பட்ட முதற்கடவுளும் ஆகிய இறைவனை, சிறகுகள் வாய்ந்த நாரைகளும், குருகுகளும் பறந்து ஒலிக்க, நீர்த்துறைகளில் கெண்டை பிறழ, பிற மீன்கள் துள்ளி விளையாட, குவளைப்பூவின் கண் வண்டுகள் பலவகையான இசைகளைப் பாடுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன்; இஃது என் தவப்பயன் இருந்தவாறு!
414 |
திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச் கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற் உரையினார் மதயானை நாவலா ரூரன் வரையினார் வகைஞால மாண்டவர்க்குந் தாம்போய் |
7.040.11 |
புகழ்மிகுந்து, மதம் பொருந்திய யானையையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், அலையால் நிறைந்த கடல்சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும், செம்மையான சடையின்மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை. கரையின்கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு அடிவணங்கி, வணங்கப்பெற்ற அவ்வுரிமையினால் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள், எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய், பின்புசென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கானாட்டுமுள்ளூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முள்ளூரிற், உடையவனும், கானாட்டு, இறைவனை, இருந்தவாறு, கண்டுதொழு, தவப்பயன், திருக்கானாட்டுமுள்ளூரிற், அடியேன், வணங்கப்பெற்றேன், பொருந்திய, கழனிக், கரைமேல், வயல்களையுடைய, வண்டுகள், போல்பவனும், பெருமானும், அந்தணர்கள், வேதத்தை, கொள்ளிடத்தின், தலைவராய், னானைத், நிறைந்த, சோலைக், வெள்ளிய, என்னும், மறையவனை, அவிழவும், வளைந்த, மூழ்கி, வாயினையுடைய, எல்லாம், மிகுந்த, சோலைகளையுடைய, வேதமுத, மலர்கின்ற, உள்ளவனும், நரகத்தில், நமக்கு, கடல்சூழ்ந்த, கருங்குவளை, அணிந்தவனும், வெண்மையான, பொருந்தியுள்ள, கொள்ளிட, நதியின், மணியாகிய, வாயினையும், மாளிகைகளும், திருமுறை, திருச்சிற்றம்பலம், திருக்கானாட்டுமுள்ளூர், நிற்பவனும், அலையால், பூதங்கள், ஊர்வனவும், ரெங்கும், கொன்றையொடு, காணப்படுகின்ற, நிற்கின்ற, ஆடுகின்ற, வணங்கப், பெற்றேன், சூழ்ந்த, விளையாடுகின்ற, கொன்றை, மலர்கள், சந்திரனைச், புரிசடையி