முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.027.திருக்கற்குடி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.027.திருக்கற்குடி
7.027.திருக்கற்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர்.
தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
269 |
விடையா ருங்கொடியாய் வெறி படையார் வெண்மழுவா பர கடியார் பூம்பொழில்சூழ் திருக் அடிகே ளெம்பெருமான் அடி |
7.027.1 |
இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, படைக்கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே, மேலார்க்கும் மேலானவனே, மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக் கொண்டருள்.
270 |
மறையோர் வானவருந் தொழு இறைவா எம்பெருமான் எனக் கறையார் சோலைகள்சூழ் திருக் அறவா அங்கணனே அடி |
7.027.2 |
அந்தணரும், அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே, எம்பெருமானே. எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே, இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, அழகிய கண்களையுடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக்கொண்டருள்.
271 |
சிலையால் முப்புரங்கள் பொடி மலைமேல் மாமருந்தே மட கலைசேர் கையினனே திருக் அலைசேர் செஞ்சடையாய் அடி |
7.027.3 |
வில்லால், திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே, மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே, இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே, மான் பொருந்திய கையை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
272 |
செய்யார் மேனியனே திரு மையார் கண்ணிபங்கா மத கையார் சூலத்தினாய் திருக் ஐயா எம்பெருமான் அடி |
7.027.4 |
செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே, அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே, மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே, மதம் பொருந்திய யானையை உரித்தவனே, கையில் பொருந்திய சூலத்தை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள்.
273 |
சந்தார் வெண்குழையாய் சரி கோவண ஆடையனே பந்தா ரும்விரலாள்ஒரு பாக மமர்ந்தவனே கந்தார் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற எந்தாய் எம்பெருமான் அடி யேனையும் ஏன்றுகொள்ளே. |
7.027.5 |
அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே, சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே, பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே, நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, எங்கள் கடவுளே, அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள்.
274 | அரையார் கீளொடுகோ வண மும்மர வும்மசைத்து விரையார் கொன்றையுடன் விளங் கும்பிறை மேலுடையாய் கரையா ரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற அரையா எம்பெருமான் அடி |
7.027.6 |
அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு, ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே, வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே, எங்கள் இறைவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
275 |
பாரார் விண்ணவரும் பர சீரார் மேனியனே திகழ் காரார் பூம்பொழில்சூழ் திருக் ஆரா இன்னமுதே அடி |
7.027.7 |
மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும், படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற, அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே, விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே, மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள்.
276 |
புலனே புண்டரிகத் தயன் கனலே கற்பகமே திருக் அனல்சேர் கையினனே அடி |
7.027.8 |
நிலமே, நீரே, தீயே, காற்றே, நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே, தாமரை மலரில் உள்ள பிரமன், மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே, கற்பகத் தருப்போல்பவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தீ யேந்திய கையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
277 |
வருங்கா லன்னுயிரை மடி பெரும்பா லன்றனக்காய்ப் பிரி கரும்பா ரும்வயல்சூழ் திருக் விரும்பா எம்பெருமான் அடி |
7.027.9 |
பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி, அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி, அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகையாளனே, கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, எங்கள் இறைவனே, அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள்.
278 |
அலையார் தண்புனல்சூழ்ந் தழ கலையார் மாதவர்சேர் திருக் சிலையார் வாணுதலாள் நல்ல விலையார் மாலைவல்லார் வியன் |
7.027.10 |
அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற, கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பகம் போல்பவனை, விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல, 'சிங்கடி' என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய, விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள், அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கற்குடி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பொருந்திய, உடையவனே, திருக், திருக்கற்குடியில், நிலையாக, யேனையும், கற்குடி, எழுந்தருளியிருக்கின்ற, மன்னிநின்ற, அடியேனையும், நிறைந்த, சொல்லி, அஞ்சாதி, அஞ்சலென்னே, சூழ்ந்த, எங்கள், எம்பெருமான், கொண்டருள், உய்யக்கொண்டருள், கொண்டவனே, உய்யக், விரும்பிக், உள்ளவனே, இறைவனே, கடவுளே, நறுமணம், திருமேனியை, மிடற்றினனே, மேனியனே, கொன்றை, விளங்குகின்ற, சிங்கடி, வயல்கள், நீரால், கையினனே, ரும்வயல்சூழ், மலைமேல், அணிந்தவனே, சோலைகள்சூழ், பூம்பொழில்சூழ், திருக்கற்குடி, அமுதமாய், தலைவனே, திருச்சிற்றம்பலம், திருமுறை, சோலைகள், பூஞ்சோலைகள்