முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.080.திருமாற்பேறு
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.080.திருமாற்பேறு
6.080.திருமாற்பேறு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மால்வணங்குமீசர்.
தேவியார் - கருணைநாயகியம்மை.
2880 | பாரானை பாரினது பயனா னானைப் ஆராத இன்னமுதை அடியார் தங்கட் காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக் சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ் |
6.080.1 |
இப்பூமி ஆனவனும், பூமியின் பயன் ஆனவனும், படைத்தல் தொழிலே தானாய் அதன்கண் நின்றவனும், பல்லுயிர் மேலும் இரக்கம் கொண்டவனும், அடியார்க்குத் தெவிட்டாத இனிய அமுது ஆனவனும், எல்லா உலகுகளாகவும் விரிந்தவனும், தேவர் கோனாய்த் திகழ்பவனும், கரிய கண்டமுடையவனும், கயிலை மலைக்கு இறையவனும், நினைவார் மனத்தில் நிற்பவனும், இயமனை வெகுண்டொறுத்த புகழுடையவனும், செல்வம் மிக்கவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன்.
2881 | விளைக்கின்ற நீராகி வித்து மாகி துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித் முளைக்கின்ற கதிர்மதியும் அரவு மொன்றி திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேறறெஞ் |
6.080.2 |
விளைவை உண்டாக்கும் நீராயும், வித்தாயும், விண்ணாயும், மண்ணாயும், செம்பொன்விளையும் சுரங்கமாயும், அலகில் சோதியாயும், தூண்டுதல் வேண்டாவிளக்காயும், அசைவில்லா வானத்தின்மேல் தோன்றி ஒளிர்பிறையும் பாம்பும் என்றும் மூவாது நின்று ஒலிமிக்க நீரையுடைய கங்கையுடன் விளையாடி மகிழ்கின்ற சடையனாகவும் ஆகித் திருமால் பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.
2882 | மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை கலைநிலவு கையானைக் கம்பன் தன்னைக் விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ் |
6.080.3 |
மலைமகளுடைய தலைவனும், கடலில் படும் முத்தும், மரகதமும், சிறந்த மாணிக்கமணியும் போல்பவனும், மான் கன்றையே மிக்க செல்வமாகக் கையிடத்துக் கொண்டவனும், கச்சி ஏகம்பனும், விலைமிக்க வெண்ணீற்று மேனியனும், உண்மையடியார் கருதுவதையே தானும் கருதி முடித்தருளுபவனும், வில் நிலவும்கரத்தவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினைநான் சென்றடைந்தேன்.
2883 | உற்றானை யுடல்தனக்கோர் உயிரா னானை பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப் கற்றானைக் கற்பனவுந் தானே யாய செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் |
6.080.4 |
உறவானவனும், உடலிடத்து உயிர் ஆனவனும், ஓங்காரத்தில் முழுப்பொருள் தான் ஒருவனே ஆனவனும், உமை ஒரு பாகத்தைப் பெற்றவனும், தலைக்கோலச் சிறப்பினனும், பிறவாதவனும், பெரியனவும் அரியனவும் ஆகிய எல்லாப் பொருள்களையும் பிறர் எல்லார்க்கும் முன்னே கற்றவனும், கற்றவனாகிய தானேகற்கப்படும் பொருளுமாய் ஆனவனும், கச்சி ஏகம்பனும், இயமன் இறந்துபடச் சினந்தவனும், தானே விளங்கும் ஒளியினனும் ஆகித் திருமாற்பேற்றில்திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன்.
2884 | நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக் ஆறாத ஆனந்தத் தடியார் செய்த சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ் |
6.080.5 |
சாம்பலாயும், சாம்பலை உமிழும் நெருப்பாயும், நினைவாயும், நினைவில் நின்று இனிக்கும் உமையம்மை நிலவு கூறாயும், இயமனாயும், தீயனவும் நல்லனவுமாய்நிற்கும் அவ்வினைகளாயும், நிறைந்த அன்புக் கண்ணீரினராய் நீங்காத ஆனந்தத்தையுடைய அடியார்கள் செய்த அனாசாரமாகிய சிறு குற்றங்களைப் பொறுத்து அவர்களை என்றுஞ் சினவாத பெருமானாயும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.
2885 | மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை கருநிலவு கண்டனைக் காளத்தியைக் செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ் |
6.080.6 |
மருவுதற்கினிய மறைப்பொருள் ஆனவனும், மறைக்காட்டில் உறைபவனும், மறப்பில்லாதவனும், பிறை சூடிய சடையினனும், நிலவுகின்ற தன் நிறத்தால் ஒளிரும் சுடர் ஆனவனும், மேலிடத்து உள்ளவனும், பேசுதற்கினியவனும், தவக்கோலம் தாங்கியவனும், உலகிற்கு வித்தானவனும், கறுத்த கண்டத்தவனும், காளத்தி நகரினனும், நினைப்பவர் உள்ளத்தில் நிற்பவனும், போர்த்தொழில் பயின்ற படைக்கலங்களை ஏந்தியவனும் ஆகித் திருமாற் பேற்றில்திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.
2886 | பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப் நிறத்தானை நின்மலனை நினையா தாரை அறத்தானை அறவோனை ஐயன் தன்னை திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் |
6.080.7 |
பலவகைப் பிறப்புகளாய் உள்ளவனும், வினை வயத்தால் பிறவாத பெருமையுடையவனும், தோற்றம் ஆற்றல் முதலியவற்றில் மிகப் பெரியவனும், உணர்தற்கு அரியவனும், பெண்ணும் ஆணுமாகிய வடிவினனும், குற்றமற்றவனும், தன்னை நினையாதாரைத் தான் நினையாதவனும், தன்னை நினைப்போரைத் தான்நினைப்பவனும், அறமேயாய் நின்று அதனை நிலை பெறுவிப்பவனும், நன்மை தீமைகளை அடைவிக்கும் அறவோனும், வியக்கத் தக்கவனும், தலைவனும், தேவர்கள் வணங்கும் தன்மையனும், திகழ்சோதியும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.
2887 | வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக் தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ் |
6.080.8 |
வானில் வளர் முகிலாயும், மதியமாயும், வணங்குவார் மனத்தில் உறைபவனாயும், அழகிய பொன்னாயும், உடம்பில் உயிர்க்குற்ற உறுதுணையாயும், அழிவில்லாதவனாயும், ஒற்றியூர் வாழ் உத்தமனாயும், ஊழிக்கு ஊழியாயும், கானகத்து வாழ் கருங்களிறாயும், காளத்தி வாழ்வானாயும், கருதுவார் கருத்துள்நிலவுபவனாயும், முதன் முதலாயும், தேனில் இனிய சுவையாயும், நிலவித்திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான்சென்றடைந்தேன்.
2888 | முற்றாத முழுமுதலை முளையை மொட்டை பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னைப் உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய் செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ் |
6.080.9 |
மூவாத முதற்பொருளாயும், முளையாயும், மொட்டாயும், மலரின் வடிவினனாயும், எக்காலத்தும் வெறுப்பிலனாய்ப் பல்லுயிர்க்குந் துணையாகிஇரக்கமுடையனாயும், மேற் பொருளும், கீழ்ப்பொருளும் தான் ஆனவனாயும், மேலான ஒளிப் பிழம்பாயும், எண்ணுவார் மனத்தில் பொருந்தியிருப்பவனாயும், உயர்ந்த கரும்பு வில்லையுடைய மன்மதன் ஒள்ளிய நெருப்பிடத்து வெந்து நீறாகுமாறு செய்த பார்வையனாயும் திரிபுரங்களை அழித்தவனாயும் ஆகித்திருமாற் பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன்.
2889 | விரித்தானை நான்மறையோ டங்க மாறும் நெரித்தானை நின்மலனை யம்மான் தன்னை தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத் சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ் |
6.080.10 |
நான்மறைகளையும் ஆறங்கங்களையும் விரித்தவனும், கயிலை மலையை எடுக்கமுயன்ற இராவணனை விரலூன்றித் துன்புறுத்தியவனும், குற்றமற்றவனும், தலைவனும், பிறைதங்கிய செஞ்சடைமேல் நீர்நிறைந்த கங்கையைத் தரித்தவனும், இன்பத்தைச் செய்யும் சங்கரனும், இன்ப காரணனான சம்புவும் பகைத்தார்புரங்கள் மூன்றும் நெருப்பிடத்து வேகுமாறு சிரித்தவனும், ஒளிப்பிழம்பாய் விளங்கியவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினைநான் சென்றடைந்தேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 78 | 79 | 80 | 81 | 82 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமாற்பேறு - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருமாற், குன்றினைச்சென், றடைந்தேன், பேற்றெஞ்செம்பவளக், ஆனவனும், செம்பவளக், திகழும், சென்றடைந்தேன், குன்றினை, திருமாற்பேற்றில், எம்செம்பவளக், பேற்றில், நின்று, திகழொளியைத், தலைவனும், மனத்தில், நெருப்பிடத்து, இராவணனை, குன்றினைநான், செஞ்சடைமேல், குற்றமற்றவனும், நின்மலனை, ஏகம்பனும், காளத்தி, பிறவாத, அரியனவும், உள்ளவனும், சென்று, பரிவோன், பல்லுயிர்க்கும், திருச்சிற்றம்பலம், திருமுறை, கண்டனைக், மனத்தானைக், அடைந்தேன், திருமாற்பேறு, நிற்பவனும், கொண்டவனும், வெண்ணீற்று