முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.062.திருவானைக்கா
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.062.திருவானைக்கா
6.062.திருவானைக்கா
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்.
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
2705 | எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் |
6.062.1 |
எத்தனை மேம்பட்ட நற்றாய் செவிலித்தாயர், தந்தை, சுற்றத்தார் என்று நம்மால் போற்றப்படுபவருள் எவர் நமக்கு நல்லவர்கள்! எந்தச் செல்வம் நம்மைத்தாங்கக்கூடியதாகும்? நாம் இறந்தால் நம் தேகபந்துக்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் ஏனைய தேகபந்துக்களை விடுத்து, 'என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவை உகந்தருளியிருக்கும் இடமாக உடைய செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை யான் அடைவேனோ?' எனக்குத் துன்புறும் நிலை ஏற்படாது என்றபடி.
2706 | ஊனாகி உயிராகி யதனுள் நின்ற நானேதும் அறியாமே யென்னுள் வந்து தேனாருங் கொன்றையனே நின்றி யூராய் ஆனாய்உன் பொற்பாதம் அடையப் பெற்றால் |
6.062.2 |
திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீ உள்ளாய். யான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய், தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.
2707 | ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான் துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன் தெப்பாலும் நுன்னுணர்வே யாக்கி யென்னை அப்பாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் |
6.062.3 |
அழகான ஆனைக்காவில் உள்ளவனே! தேவர்கள் தலைவனே! எல்லோருடனும் சமமாய் இவ்வுலக நடையோடு பொருந்தி வாழ்வதனை மேற்கொள்ளாத சமணத்துறவியரோடு பொருந்தி வாழ்ந்து, உண்ணுதற்கேற்ற கஞ்சியுணவை நிரம்ப உண்டு, நன்மை தரும் உன் பண்பு செயல்களை மறந்து திரிந்த அடியேனைப் பாதுகாத்து, அடியேன் உள்ளத்து வந்து, எப்பொருட்கண்ணும் உன்னை உணரும் உணர்வைத் தந்து, என்னை அடிமை கொண்டவனே! உன் பொற்பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.
2708 | நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய் கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா |
6.062.4 |
எல்லா உலகங்களையும் ஆள்கின்ற ஆனைக்காப் பெருமானே! உன்னை அன்போடு நினைப்பவர்களுடைய நெஞ்சிலே மறைந்து உறையும் வஞ்சனையை உடைய கள்வனே! ஒளி நிறைந்த பிறையைச் சடையில் சூடியவனே! உன்னைச் சரணடையாது, உன்னோடு பகைத்தவர்களின் மதில்கள் மூன்றும் தீயில் எரியுமாறு அழித்தவனே! முன் ஒரு காலத்தில் யானை ஒன்றனைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய உலக காரணனே! செருக்கி ஒலித்துக்கொண்டு வரும் காளையை இவர்ந்த நீல கண்டனே! கயிலாய மலையில் உறைபவனே! உன் திருவடிகளை அடைந்த அடியேன் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே!
2709 | இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத் கைம்மான மனத்துதவிக் கருணை செய்து வெம்மான மதகரியி னுரிவை போர்த்த அம்மான்நின் பொற்பாதம் அடையப் பெற்றால் |
6.062.5 |
கொடிய மதச் செருக்குடைய யானைத் தோலைப் போர்த்த வேதியனே! அழகான ஆனைக்காவை உகந்தருளியிருக்கும் தலைவனே! இந்த நிலையின்மையை உடைய பிறவிக் கடலில் துன்பமாகிய சுழியில் அகப்பட்டு, வருந்தும் என்னைக் கைகொடுத்து நீர்ச் சுழியிலிருந்து காப்பவரைப்போல, மனத்திலிருந்து உதவி செய்து, கருணை காட்டி, என்னிடத்தில் அன்பையும், அருளையும் பொழிந்தும், யான் கண்ணால் காணுமாறு வெளியேநிற்கின்றாய் அல்லை. நின் பொற்பாதத்தை அடியேன் அடைப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு என் செய்கேனே!
2710 | உரையாரும் புகழானே யொற்றி யூராய் விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால் திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் |
6.062.6 |
புகழுவார் புகழும் சொற்களிலெல்லாம் நிறைந்த புகழுடையவனே! ஒற்றியூர், கச்சி ஏகம்பம், குடந்தை நாகைக் காரோணங்கள் இவற்றில் உறைபவனே! நறுமணமுடைய மலர்களைத் தூவி வணங்கும் அடியவர் மனத்தில் மிக்கு விளங்குபவனே! எலும்பையும் பாம்பையும் மாலையாகப் பூண்டவனே! அலைகள் நிறைந்த நீரை உடைய காவிரியாகிய புண்ணிய தீர்த்தம் நிறைந்த திருவானைக்காவில் உள்ள தேன் போன்ற இனியவனே! தேவர் தலைவனே! உன்பொற்பாதம் அடியேன் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.
2711 | மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய் கையானே காலனுடல் மாளச் செற்ற செய்யானே திருமேனி யரியாய் தேவர் ஐயாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் |
6.062.7 |
நீலகண்டனே! பார்வதிபாகனே! மான்கன்று, பெரிய மழுப்படை, நெருப்பு இவற்றைத் தாங்கும் திருக்கரங்களை உடையவனே! கூற்றுவனுடைய உயிர்போகுமாறு அவனை அழித்த, முழு எலும்புக்கூடு அணிந்தவனே! முற்பிறப்புக்களில் செய்து கொள்ளப்பட்ட வினைகளும் அவற்றின் பயன்களும் ஆனவனே! செம்மேனி அம்மானே! யாவர்க்கும் நேராகக் காண்பதற்கு அரியவனே! தேவர் குலத்துத் தளிர் போன்றவனே! அழகிய ஆனைக்காவுள் உறையும் தலைவனே! உன்பொற்பாதங்களை அடியேன் அடையப்பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.
2712 | இலையாருஞ் சூலத்தாய் எண்டோ ளானே தலையாரக் கும்பிடுவார் தன்மை யானை சிலையானே திருவானைக் காவுள் மேய அலையாதே நின்னடியே அடையப் பெற்றால் |
6.062.8 |
இலைவடிவாக அமைந்த சூலத்தை ஏந்தியவனே! பெருந் தோள்களை உடையவனே! எவ்விடத்தும் உன்னைத் தவிர வேறு பொருள் இல்லை என்று, தலைமேல் கைகுவித்துக் கும்பிடுபவர் செயல்களுக்கு உதவும் பண்பினனே! மேருவாகிய வில்லைக் கையில் கொண்டு, திரிபுரத்தைத் தீக்கு இரை ஆக்கியவனே! திருவானைக்காவுள் உறையும், தீயில் கூத்து நிகழ்த்துபவனே! சிறிய நோய்களால் துன்புறுத்தப்பட்டு உள்ளம் வருந்தாது, நின் அடியே அடைதல் கூடுமாயின் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.
2713 | விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான் கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங் அண்ணாநின் பொற்பாதம் அடையப் பெற்றால் |
6.062.9 |
ஆகாய கங்கை தங்கிய செந்நிறச் சடையனே! வேத நெறியை உபதேசித்தவனே! கடலின் விடத்தை உண்டவனே! எண் நிறைந்த புகழ்களுக்கு உரிய பண்புகளையும் செயல்களையும் உடையவனே! உன்னை என் தலைவன் என்று நாவினால் எப்பொழுதும் கூறி மனத்தால் நினைத்துக் கண்கள் மகிழ்ச்சி நிறையுமாறு காணும்படி எப்பொழுதும் நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய ஆனைக்காவுள் உகந்தருளியிருக்கும் அண்ணால்! நின்பொற்பாதம் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு என் செய்கேனே.
2714 | கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக் வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா படியேயுங் கடலிலங்கைக் கோமான் தன்னைப் அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால் |
6.062.10 |
கொடியில் எழுதப்பட்ட உருவாக அமைந்த காளையை உடையவனே! பேய்கள் பாடக் குட்டையான பூதங்கள் கூத்தாட, நீயும் கூத்து நிகழ்த்தி, அழகிய பார்வதி பாகனாய், மதில்களை உடைய ஆனைக்காவிலும், உஞ்சேனி, இரும்பை, அம்பர் மாகாளங்களிலும் உறைபவனே! நிலம் முழுதும் சூழ்ந்த கடலிடையே உள்ள இலங்கை மன்னனான இராவணனுடைய பருத்த தலைகளையும் வலிய தோள்களையும் நெரித்து, மகிழ்ந்த உன் திருவடிகளைச் சரணாக அடைந்து உனக்கு அடிமையாகப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவானைக்கா - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அடையப், என்செய், கொண்டடியேன், கொண்டு, பெற்றால்அல்லகண்டங், பொற்பாதம், செய்கேனே, அடியேன், நிறைந்த, தலைவனே, காவுள், உறையும், கண்டம், உறைபவனே, உடையவனே, செயல்களையும், பெற்றால், தென்னானைக், அல்லகண்டம், அடையப்பெற்றால், அமைந்த, உகந்தருளியிருக்கும், வருந்தும், திருவடிகளைச், செய்து, புகழானே, தீர்த்தம், ஞானவடிவினனே, கையில், கூத்தாட, நீயும், சூழ்ந்த, எப்பொழுதும், கூத்து, ஆனைக்காவுள், காளையை, அணிந்தவனே, துன்பத்தால், திருவானைக்கா, எனக்கு, திருவானைக்காவில், ஏற்படாது, நமக்கு, பொருந்தி, தீயில், தோலைப், திருமுறை, திருச்சிற்றம்பலம், உதவும், காவிலுறை