முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.049.திருக்கோகரணம்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.049.திருக்கோகரணம்
6.049.திருக்கோகரணம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் துளுவதேசத்திலிருப்பது. அந்தத்தேயத்தில் இது ஒரேதலம்.
சுவாமிபெயர் - மாபலநாதர்.
தேவியார் - கோகரணநாயகியம்மை.
2574 | சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண் பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண் மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண் |
6.049.1 |
பெரிய மேலைக் கடலால் ஒருபுறம் சூழப்பட்ட கோகரணத்தில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் தாழ்ந்த சடையில் பிறையையும் கங்கையையும் அணிந்தவனாய், அடியார்களுக்கு அமுதாய் வானத்தில் உலவிய அசுரரின் முப்புரங்களையும் அழித்தவனாய், அழகிய உருவங்களின் மேம்பட்ட அழகுடைய உருவினனாய், இசைவகைகளை உடைய நான்கு வேதங்களையும் பாடினவனாய்த் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய், மந்திரத்தை உடைய வேதமாகவும் உள்ளான்.
2575 | தந்தவத்தன் தன்தலையைத் தாங்கி னான்காண் கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண் வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண் வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ ணான்காண் |
6.049.2 |
மேற்குக் கடலை அடுத்த கோகரணப் பெருமான் உலகைப் படைத்த பிரமனது மண்டையோட்டை ஏந்தி எங்கும் சஞ்சரிப்பவனாய், அடியவர்களுக்கு அமுதமாய், மலரில் மணம்போல எங்கும் பரவியவனாய், அதிகை வீரட்டனாய்த் தான்என்றும் அழிவில்லாதவனாய்த் தன்னை அழிப்பாரும் இல்லாதவனாய்த் திருநீறு பூசியவனாய்த் தவமாகிய பெருமிதம் உடையவனாய், பரந்த கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்த் தன்னிடத்துத் தோன்றித் தன் கருத்துக்கு ஏற்பக்காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலாலும் உள்ளபடி அறிய ஒண்ணாதவனாய், உள்ளான்.
2576 | தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண் பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண் மின்னுருவ நுண்ணிடையாள் பாகத் தான்காண் மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண் |
6.049.3 |
மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் தன் உருவையார்க்கும் எதிர்ப்படச் செய்யாதவனாய்த் தாழ் சடையனாய், அடியார்களுக்கு அநுபவப் பொருளாகிய பொற்சோதியாய், கங்கா தரனாய், பழையோனாய், ஐம்பூதங்களாய், மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகனாய், யானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு போர்த்தவனாய், என்றும் நிலை பெற்ற உருவமுடையவனாய், வேதங்களை ஓதிக்கொண்டு இருப்பவன் ஆவான்.
2577 | ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண் நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண் கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண் மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண் |
6.049.4 |
மாகடல் சூழ்கோகரணம் மன்னிய பெருமான் கங்கையைச் சடையில் சூடிய ஆரூரனாய்ப் பழனத்தில் உறைபவனாய், அன்பனாய்த் திருநீறணிந்து ஒளிவீசும் மேனியனாய், தலைவனாய், ஒப்பற்றவனாய், பிளவு தோன்றுதற்குக் கருவியாகிய மழுப்படையினனாய், கொக்கரை என்ற வாச்சியத்தை உடையவனாய், மேம்பட்ட பூதக்கூட்டத்தை உடையனாய், பகையாகச் செயற்பட்ட மும்மதிலையும் அழித்து மறையச் செய்தவனாவான்.
2578 | சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண் பொன்றப் பொடியாக நோக்கி னான்காண் அன்றப் பொழுதே அருள்செய் தான்காண் மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண் |
6.049.5 |
மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் திரிபுரங்களை நோக்கிச் சென்று மேரு மலையாகிய வில்லை வளைத்துத் தீயாகிய அம்பைச் செலுத்தி வானத்தில் திரிந்த மும்மதில்களும் சாம்பலாகுமாறு செய்தவனாய், உயிர்களை ஆளாக உடைய வனாய், பூதப் படை உடையவனாய், அடியார்களுக்கு அன்றன்று அவ்வப்பொழுதே அருள் செய்தவனாய்த் தீயிடையே கூத்தாடுபவனாய், அடியவர்களுக்கு அமுதானவனாய், நறுமணம் கமழும் நீண்ட சடையை உடையவனாய் உள்ளான்.
2579 | பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண் கறையோடு மணிமிடற்றுக் காபா லிகாண் பறையோடு பல்கீதம் பாடி னான்காண் மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண் |
6.049.6 |
மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் சடைமுடியாகிய ஓரிடத்தில் பிறையையும் கங்கையையும் சேர்த்து வைத்த புகழோனாய், பிறப்பில்லாதவனாய், நஞ்சுபொருந்திய நீல கண்டனாய்க் காபாலக் கூத்து ஆடுபவனாய்க் கட்டங்கம் என்ற படை உடையவனாய்க் கையில் மண்டையோட்டை ஏந்திப் பறை ஒலிக்கப் பல பாடல்கள் பாடியவனாய், தாளத்திற்கு ஏற்ப ஆடியவனாய், அடியார்கள் ஓதும் வேத ஒலியையும் பாடும் பாடல் இசையையும் செவிமடுத்தவனாவன்.
2580 | மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண் முன்னளந்த மூவர்க்கும் முதலா னான்காண் எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண் மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண் |
6.049.7 |
மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் ஒளிவீசும் அண்டச்சுவரின் மேலும் பொருந்தியவனாய்த் தேவர்கள் தலைவனாய், எவ்விடத்தையும் தம் தொழிலுக்கு உட்படுத்திய மூவருக்கும் காரணனாய், முத்தலைச்சூலம் ஏந்திய அழகினனாய், என் எண்ணத்தை அளந்து என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய், அம்பு எய்தலில் வல்லவனாய்த் தேவர்கள் துதிக்குமாறு இருந்து, உலகை அளந்த திருமாலால் அறியப்பட முடியாத வியக்கத்தக்க நிலை உடையவனாக உள்ளான்.
2581 | பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண் முன்னி யுலகுக்கு முன்னா னான்காண் இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண் மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண் |
6.049.8 |
மாகடல் சூழ் கோகரணம் மன்னியபெருமான் இணைத்த சடைமீது பிறை சூடிப் பேரருளாளனாய்ப் பிறப்பிலியாய், உலகுக்குக் காரணனாய், மும்மதிலும் அழித்து மகிழ்ந்த முதல்வனாய்த் தன் உண்மை உருவை மற்றையார் அறிய இயலாத இயல்பினனாய், ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவனாய்ப் பார்வதி பாகனாய் உள்ளான்.
2582 | வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண் பொட்ட அநங்கனையும் நோக்கி னான்காண் கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண் வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண் |
6.049.9 |
மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் வீணாக அடியவர்களை உரத்தகுரலில் இழித்துப் பேசுபவருக்குக் கொடிய நெருப்புப் போன்றவனாய்த் தவத்தின் பெருமிதம் உடையவனாய், வீரட்டத் தலங்களில் விரும்பியிருப்பவனாய், விரைவாக மன்மதனைச் சாம்பலாகுமாறு தீவிழித்தவனாய், ஐம்பூத வடிவினனாய்ப் பூதப் படையினனாய், தீங்குதரும் கொடிய வினைகள் தாக்காதவாறு காத்து அடியவர்களை ஆட்கொள்பவனாய், கற்கண்டு போன்ற இனியவனாய், வண்டு தேன் உண்ட கொன்றையைச் சூடியவனாய், பிறை சூடியாய் உள்ளான்.
2583 | கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக் மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண் மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண் |
6.049.10 |
மாகடல் சூழ் கோகரணம் மன்னிய பெருமான் கைகளால் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனை, கால் விரலால் தோள்கள் நெரியுமாறு அழுத்தியவனாய், தன் உடம்பில் உள்ள நரம்புகளை வீணை நரம்புகளாகக் கொண்டு இன்னிசை எழுப்பி, தன்னைச் செவிமடுக்கச் செய்த இராவணனுக்கு அருள்களை விரும்பிக் கொடுத்தவனாய்ப் பொய்யருடைய உள்ளங்களுக்கு அப்பாற்பட்டவனாய், போரிடுவதற்குரிய படைக்கலன் ஏந்தியவனாய், அவற்றால் போர் செய்யப்படுவார் ஒருவரும் இல்லாதானாய், நீலகண்டமும், நீண்ட சடையும் உடையவனாய், அடியார்கள் அகக் கண்ணுக்குத்தோற்றம் வழங்குகின்றான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோகரணம் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோகரணம், மாகடல், உடையவனாய், உள்ளான், பெருமான், மன்னிய, அடியார்களுக்கு, மன்னியபெருமான், னான்காண்மாகடல்சூழ், அழித்து, தலைவனாய், ஒளிவீசும், மில்லா, உறைபவனாய், தான்காண்மாகடல்சூழ், னான்காண்பூதன்காண், தேவர்கள், காரணனாய், அடியவர்களை, அடியார்கள், சாம்பலாகுமாறு, பாகனாய், வார்சடை, யான்காண்மாகடல்சூழ், நோக்கி, விரும்பி, கங்கையையும், வானத்தில், மேம்பட்ட, பிறையையும், சடையில், திருமுறை, திருச்சிற்றம்பலம், தாளத்திற்கு, கூத்து, பெருமிதம், திருக்கோகரணம், பெருமான்காண், அடியவர்களுக்கு, எங்கும், றில்லா, மண்டையோட்டை, பார்வதி