முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.037.திருவையாறு
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.037.திருவையாறு
6.037.திருவையாறு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர்.
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.
2455 | ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் கூரார் மழுவாட் படையொன் றேந்திக் பேரா யிரமுடையா யென்றேன் நானே ஆரா அமுதேயென் ஐயா றன்னே |
6.037.1 |
பகைவருடைய முப்புரங்களை அழித்தவனே! தீயில் கூத்து நிகழ்த்துபவனே! கிட்டுதற்கு அரிய அமுதமே! கூரிய மழுப்படையை ஏந்துபவனே! குட்டையான பல பூதங்களைப் படையாக உடையவனே! ஆயிரம் பெயர் உடையவனே! பிறையைச் சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமாம் ஐயாற்றெம் பெருமானே! என்று பலகாலும் வாய்விட்டு அழைத்து மனம் உருகி நைகின்றேன்.
2456 | தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் மூவா மதிசூடி யென்றேன் நானே ஏவார் சிலையானே யென்றேன் நானே ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே |
6.037.2 |
திரிபுரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிய தூயோனே! பழையோய்! பிறைசூடி! முதல்வா! முக்கண்ணா! அம்பு பூட்டிய வில்லினனே! துயர்க்கடலில் அடியேன் அழுந்தாமல் எடுத்துக் கரையேற்றி ஐயோ! என்று இரங்கி அருள்புரியும் ஐயாறனே! என்று வாய்விட்டு அழைத்து நான் மனம் உருகி நிற்கின்றேன்.
2457 | அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே நஞ்சணி கண்டனே யென்றேன் நானே நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே |
6.037.3 |
அழகிய நறுமணப் பொடி பூசியவனே! அடியவர்களுக்கு ஆரமுதே! விடம் அணிந்த கழுத்தினை உடையவனே! சான்றோர்கள் ஓதும் நான்கு வேத வடிவினனே! என் மனம் உணருமாறு உள்ளே புகுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு அமுதம் போன்ற இனியனே! நாங்கள் அஞ்சாதபடி எங்களை ஆட்கொண்ட ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2458 | தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே எல்லை நிறைந்தானே யென்றேன் நானே அல்லற் கடல்புக் கழுந்து வேனை எல்லையாம் ஐயாறா என்றேன் நானே |
6.037.4 |
பழைய மேல் கடலே! சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழ்க்கடலே! விளங்கும் இளம் பிறை சூடீ! உலகம் முழுதும் நிறைந்தவனே! ஏழ் நரம்பாலும் எழுப்பப்படும் ஏழிசை யானவனே! துயரக் கடலில் மூழ்கி வருந்தும் என்னை கரைக்குக் கொண்டுவந்து அருள் செய்தவனே! ஐயாற்றை உகந்தருளி உறைவிடமாகக் கொண்டவனே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2459 | இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே கண்டங் கறுத்தானே யென்றேன் நானே அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னே |
6.037.5 |
சடையில் முடி மாலை அணிந்தவனே! சூரிய சந்திரர் உலவும் ஆகாய வடிவினனே! அடியவரால் வணங்கப் படுபவனே! துருத்தியிலும் நெயத்தானத்திலும் உறைபவனே! நீல கண்டனே! தீக் கண்ணனே! அண்டங்களையும் கடந்த ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2460 | பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே கற்றார்கள் நாவினா யென்றேன் நானே பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே |
6.037.6 |
பகைவர் திரிபுரத்தை எரித்தவனே! ஆன்மாக்களுக்குத் தலைவனே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் அறிந்த சான்றோர்களின் நாவில் இருப்பவனே! விரைந்து செல்லும் காளை வாகனனே! உன்னையே பற்றுக் கோடாக உடையவரின் நெஞ்சினை உறைவிடமாகக் கொண்டவனே! அருச்சுனனுக்கு அருள்செய்தவனே! வேற்றுக் களைகண் இல்லாதவர்களுக்கு அருள் செய்யும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2461 | விண்ணோர் தலைவனே யென்றேன் நானே எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே பண்ணார் மறைபாடி யென்றேன் நானே அண்ணாஐ யாறனே யென்றேன் நானே |
6.037.7 |
தேவர் தலைவனே! விளங்கும் பிறை சூடியே! பகைவருடைய மும்மதிலையும் எரித்தவனே! ஏகம்பத்தில் உறைபவனே! பண் நிறைந்த வேதம் ஓதுபவனே! ஆன்மாக்களின் தலைவனே! வெள்ளிய நீறணிந்தவனே! அண்ணால்! ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2462 | அவனென்று நானுன்னை யஞ்சா தேனை சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச் பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று அவனென்றே யாதியே ஐயா றன்னே |
6.037.8 |
வீணன் என்று சொல்லுமாறு, உன்னை அஞ்சாது தீய வழியில் சென்று வருந்திய என்னுடைய துன்பங்களைப் போக்கியவனே! இன்பத்துக்குக் காரணன் என்று நான் உன் பெருமை எல்லாம் சொல்ல எனக்கு உன் திருவருட் செல்வத்தை வழங்குகின்றவனே! என் உள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுபவனாய் இருந்து என் பழைய ஊழ்வினையை நீக்குபவனே! ஆதியே! ஐயாற்றுப் பெருமானே! நீயே யாவுமாய் எங்குமாய் நிற்கும் அவன் எனப்படும் பரம் பொருள் என்று நான் அரற்றி நைகின்றேன்.
2463 | கச்சியே கம்பனே யென்றேன் நானே நிச்சன் மணாளனே யென்றேன் நானே உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே |
6.037.9 |
கச்சியில் ஏகம்பத்து உறைபவனே! கயிலாயனே! குடந்தை நாகைக் காரோணனே! நித்திய கல்யாணனே! விரும்பி நினைப்பவர் மனத்து உள்ளவனே! நண்பகலில் காளையை இவர்ந்து உலவுபவனே! தியானம் செய்பவர் மனத்தை உறைவிடமாகக் கொள்பவனே! அச்சம், நோய் இவற்றைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
2464 | வில்லாடி வேடனே யென்றேன் நானே சொல்லாய சூழலா யென்றேன் நானே எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே அல்லா வினைதீர்க்கும் ஐயா றன்னே |
6.037.10 |
வில்லைச் செலுத்தும் வேடர் வடிவில் தோன்றியவனே! திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனே! வேதங்கள் ஓதப்படும் இடங்களில் உள்ளவனே! எங்கும் பரவிய நல்லவர்கள் பின்பற்றும் நன்னெறி ஆகியவனே! எனக்கு எல்லாச் செல்வங்களாகவும் உயிராகவும் இருப்பவனே! இராவணனுடைய தோள்களை நெரித்தவனே! உன்னைச் சார்தற்கு இடையூறாக இருக்கும் தீவினையைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவையாறு - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - யென்றேன், நானரற்றி, நைகின்றேன், அரற்றி, பெருமானே, நைகின், றன்னேயென்றென்றே, ஐயாற்றுப், உடையவனே, தலைவனே, உறைவிடமாகக், எனக்கு, உறைபவனே, என்றேன், திருச்சிற்றம்பலம், நானேபசுபதீ, அணிந்தவனே, கொண்டவனே, ஆரமுதே, எரித்தவனே, திருமுறை, போக்கும், உள்ளவனே, நானுன்னை, இருப்பவனே, விளங்கும், நானேயென்றென்றே, திருவையாறு, கண்டனே, கண்ணனே, வாய்விட்டு, நைகின்றேனே, வடிவினனே, இளம்பிறையா, பகைவருடைய, கூத்து, அமுதமே, அழைத்து