முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.033.திருவாரூர்
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.033.திருவாரூர்
6.033.திருவாரூர்
அரநெறிதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அரநெறிதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2415 | பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப் கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக் இருங்கனக மதிலாரூர் மூலத் தானத் அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை |
6.033.1 |
போரிடும் துதிக்கையை உடைய மத யானையின் தோலைப் போர்த்தியவனாய்ப் பூவணமும் வலஞ்சுழியும் உறைவிட மாகக் கொண்டவனாய்க் கருப்பங்கட்டியையும் அமுதையும் தேனையும் போன்ற இனியவனாய், காட்சிக்கு செஞ்சுடராய்ப் பொற்குன்றாய்ப் பெரிய பொன்மயமான மதில்களை உடைய ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளியவனாய், தேவர்கள் துதிக்கும் பெருந்தவத்தோனாய் உள்ள திருவாரூர் அரநெறியப்பனை அடைந்து அடியேன் நீக்கற்கரிய வினையாகிய நோயினைப் போக்கிக் கொண்ட திறம் நன்று.
2416 | கற்பகமும் இருசுடரு மாயி னானைக் விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம் அற்புதனை அரநெறியி லப்பன் தன்னை |
6.033.2 |
கற்பகமும், சோம சூரியருமாய் ஆகிக் காளத்தி மலையிலும் கயிலாயத்திலும் உறைந்து, விற்றொழிலில் பழகிய மன்மதன் நீறாகுமாறு நெற்றிக்கண்ணைவிழித்து, அருச்சுனன் முன்வேடனாய்க் காட்சியளித்து, அழகிய சோலைகள் சூழ்ந்த ஆரூர் மூலட்டானத்திலே பொருந்திய எம்பெருமானாய்ப் பகைவர்கள் உள்ளத்தே சூனியமாய் உள்ளவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2417 | பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப் வேதியனைத் தன்னடியார்க் கௌயான் தன்னை போதியலும் பொழிலாரூர் மூலட் டானம் ஆதியனை அரநெறியில் அப்பன் தன்னை |
6.033.3 |
பார்வதி பாகனாய்க் கங்கையை இருத்திய முடியினனாய்ப் பாசூரிலும் பரங்குன்றிலும் விரும்பி உறைபவனாய், வேதியனாய்த் தன் அடியார்களுக்கு எளியவனாய், மெய்ஞ்ஞான விளக்காய், நறுமணம் கமழும் மலர்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உள்ள புற்றிடங்கொண்ட பெருமானாய்த் தன்னைத் துதிப்பவர்கள் தலைவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே.
2418 | நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந் இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம் அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை |
6.033.4 |
நந்திதேவருடைய முதற்பெருங்காவலை ஏற்றுக்கொண்ட தலைவனாய், நாகேச்சுரத்தில் உறைபவனாய், காலை நண்பகல் மாலை என்ற முப்போதும் வானவர்கள் பூக்களால் அலங்கரித்துத் துதிக்கும் மெய்ப் பொருளாய், திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய், சந்திரன் நுழைந்து செல்லுமாறு வானளாவி உயர்ந்த சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உறையும் பெருமானாய், தேவர்கள் போற்றும் அந்தணனாய் உள்ள ஆரூரில் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2419 | சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற்றானைச் விடக்கிடுகா டிடமாக வுடையான் தன்னை மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம் அடர்த்தவனை அரநெறியில் அப்பன் தன்னை |
6.033.5 |
பவளம் போல ஒளி வீசும் செம்மேனியில் வெண்ணீறு அணிந்தவனைச் சோதிலிங்கமாக உள்ளவனைப் பெண்ணாகடத்துத் தூங்கானைமாடத்து உறைபவனைப் பிணங்கள் இடும் சுடுகாட்டை உறைவிடமாக உடையவனை, தீமை மிக்க முப்புரங்களை எரித்தவனை, பூக்களின் இதழ்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் நிலைபெற்ற எம்பெருமானை, தன்னை மதியாதவர்களுடைய வேள்வியை. அழித்தவனை, அரநெறியில் உறையும் தலைவனை இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய பெருமானை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2420 | தாயவனை யெவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத் மாயவனும் மலரவனும் வானோ ரேத்த மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம் ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை |
6.033.6 |
எல்லா உயிர்களுக்கும் தாயாய், தனக்கு ஒப்பு இல்லாத திருத்தலமாகிய தில்லையில் கூத்தனாய், திருமாலும், பிரமனும் ஏனைய வானவரும் துதிக்குமாறு அலைகள் மோதி மீளும் கடலின் நஞ்சினை உண்டு மகிழ்ந்த வலியவனாய், எல்லா உயிர்களையும் விரும்பியவனாய், சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை விரும்பிய எம்பெருமானாய், எல்லாப் பொருள்களிலும் தொடக்கத்தி லேயே பரவி அவற்றைச் செயற்படுத்துபவனாய் உள்ள ஆரூரில் அர நெறியில் உறையும் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2421 | பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப் மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத் அருளியனை அரநெறியி லப்பன் தன்னை |
6.033.7 |
பொருள்களை உடைய சொற்களாக அமைந்தவனாய், புகலூரிலும் புறம்பயத்திலும் விரும்பி உறைபவனாய், மயக்கம் பொருந்திய மனத்தவருக்கு மயக்கம் போக்கும் அமுதமாய், மறைக்காட்டிலும், சாய்க்காட்டிலும் உறைபவனாய், மரச்செறிவால் இருண்ட பெரிய பொழில்களை உடைய ஆரூர் மூலட்டானத்தில் மகிழ்வாக அமர்ந்திருக்கும் பெருமானாய்த் தேவர்கள் துதிக்க அவர்களுக்கு அருளியவனாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2422 | காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் தன்னைப் சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ் ஆலவனை அரநெறியி லப்பன் தன்னை |
6.033.8 |
காலனைக் காலால் வெகுண்ட கடவுளாய், குடந்தை நாகைக் காரோணங்களையும் கழிப்பாலையையும் விரும்பி உறைபவனாய், உபமன்னியுவாகிய பாலனுக்காகப் பாற்கடலையே அளித்தவனாய், தன் திருத்தொண்டில் மகிழ்ந்து ஈடுபட்ட அடியவர்களுக்கு இனியனாய், சேல்மீன்கள் தாவித் திரியும் வயல்களை உடைய திருவாரூர் மூலட்டானத்தில் சேர்ந்திருக்கும் பெருமானாய், பவளத்தின் ஒளியைத் தருகின்ற ஆலம்விழுது போன்ற சடையை உடையவனாய் உள்ள ஆரூரின் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2423 | ஒப்பொருவ ரில்லாத ஒருவன் தன்னை வைப்பவனை மாணிக்கச் சோதி யானை மெய்ப் பொருள் ஆய் அடியேனது உள்ளே நின்ற அப் பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை, |
6.033.9 |
தன்னை ஒப்பவர் வேறு யாவரும் இல்லாத ஒப்பற்றவனாய், ஓத்தூரையும், உறையூரையும் விரும்பி உறைபவனாய், நமக்குச் சேமநிதிபோல்வானாய். மாணிக்கத்தின் ஒளியை உடைய வனாய், காற்றும் தீயும், ஆகாயமும் நீரும் மண்ணும் ஆகிய ஐம்பூதங்களாகவும் உள்ளவனாய், ......
2424 | பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப் இகலவனை இராவணனை யிடர்செய் தானை புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம் அகலவனை அரநெறியி லப்பன் தன்னை |
6.033.10 |
சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வஞ்சகனாய், பராய்த்துறையையும் பைஞ்ஞீலியையும் உறைவிடங்களாகக் கருதியவனாய், மாறுபட்ட இராவணனைத் துன்புறுத்தியவனாய்த் தன்னைத் துதியாதவர் மனத்தினில் இருளாக இருப்பவனாய்ப் புகழ் பொருந்திய சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை உறைவிடமாகக் கொண்ட எம்பெருமானாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அருவினைநோய், அறுத்த, அடைந்து, அடியேன், தன்னையடைந்தடியேன், அறுத்தவாறே, அரநெறியில், பொழிலாரூர், அப்பனை, அருவினை, உறைபவனாய், சோலைகளை, மூலட்டானத்தில், பெருமானை, அப்பன், லப்பன், அரநெறியி, திருவாரூர், விரும்பி, அரநெறியின், பெருமானைப், பொருந்திய, உறையும், தேவர்கள், மேயான், பெருமானாய், மயக்கம், ஆரூரில், மூலட்டானத்தை, இல்லாத, துதிக்கும், எம்பெருமானாய், பூவணமும், வலஞ்சுழியும், திருச்சிற்றம்பலம், உள்ளவனாய், திருமுறை, கற்பகமும், தன்னைத், பெருமானாய்த், தலைவனாய்