முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.093.மறக்கிற்பனே என்னும்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.093.மறக்கிற்பனே என்னும்
5.093.மறக்கிற்பனே என்னும்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1984 | காச னைக்கன லைக்கதிர் மாமணித் தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள் மாசி னைக்கழித் தாட்கொள வல்லவெம் ஈச னையினி யான்மறக் கிற்பனே. |
5.093.1 |
காசு உடையவனும், கனல் உடையவனும், ஒளிச்சுடர்விடும் செம்மணி விளக்கம் உடையவனுமாகிய பெருமானைச் சில தௌவற்ற மூடர்கள் புகழார். குற்றத்தினைக் கழித்து ஆட்கொள்ளவல்ல எம் இறைவனை இனி நான் மறக்கும் வல்லமை உடையேனோ?.
1985 | புந்திக் குவிளக் காய புராணனைச் சந்திக் கண்நட மாடுஞ் சதுரனை அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே. |
5.093.2 |
புத்திக்கு விளக்காக உள்ள மிகப்பழமையனும், நடம் ஆடும் சதுரப்பாடு உடையவனும், அந்திச்செவ்வண்ணம் உடையவனும், நிறைந்த அழல்கொண்ட மூர்த்தியும், வந்து என்னுள்ளம் கொண்டவனுமாகிய பெருமானை மறப்பேனோ?
1986 | ஈச னீசனென் றென்று மரற்றுவன் ஈசன் தானென் மனத்திற் பிரிவிலன் ஈசன் தன்னையு மென்மனத் துக்கொண்டு ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே. |
5.093.3 |
ஈசன் ஈசன் என்றும் வாய்விட்டு அரற்றுவேன்; ஈசன் என் மனத்தில் பிரிவில்லாதவனாய் உள்ளான் - ஈசனையும் என் மனத்துக்கொண்டபின், தன்னை யான் மறக்கும் வல்லமை உடையேனோ?
1987 | ஈச னென்னை யறிந்த தறிந்தனன் ஈசன் சேவடி யேற்றப் பெறுதலால் ஈசன் சேவடி யேத்தப்பெற் றேனினி ஈசன் தன்னையும் யான்மறக் கிற்பனே. |
5.093.4 |
இறைவன் சேவடிகளை ஏத்தப் பெறும் இயல்பினன் ஆதலால் என்னை இறைவன் அறிந்ததை யான் அறிந்தேன்; பிறகும் அவன் சேவடியை ஏத்தப்பெற்றேன்; ஆதலின் இனி ஈசனை யான் மறக்கும் வல்லமை உடையேனோ?
1988 | தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை வான வெண்மதி சூடிய மைந்தனை வேனி லானை மெலிவுசெய் தீயழல் ஞான மூர்த்தியை நான்மறக் கிற்பனே. |
5.093.5 |
தேனும், பாலும் போல்வானும், சந்திரனும் சூரியனும் போல்வானும், வானத்தின்கண் வெண்மதியினைச் சூடிய வீரனும், இளவேனிலுக்குரியவனாகிய மன்மதனைத் தீயழலால் மெலியச் செய்தவனுமாகிய ஞானக் கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ?
1989 | கன்ன லைக்கரும் பூறிய தேறலை மின்ன னைமின் னனைய உருவனைப் பொன்ன னைமணிக் குன்று பிறங்கிய என்ன னையினி யான்மறக் கிற்பனே. |
5.093.6 |
கன்னலும், கரும்பின் ஊறிய சாற்றுத் தௌவு போல்வானும், ஒளியை உடையவனும், மின்னலைப் போன்ற உருவம் உடையவனும், பொன்போலும் மேனியின்னும் ஆகிய மாணிக்கக் குன்றுபோல் விளங்கும் என்னை உடையானை, இனியான் மறக்கும் வல்லமை உடையேனோ?
1990 | கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர்ச் சுரும்பி னைச்சுடர்ச் சோதியுட் சோதியை அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர் விரும்பு மீசனை யான்மறக் கிற்பனே. |
5.093.7 |
கரும்பும் கட்டியும் போல்வானும், வண்டுகள் சூழும் நறுமண மலர்களை அணிந்த சுடர்விடும் ஒளிக்குள் ஒளிஆகியவனும், அரும்புகளிற் பெரிய போதுகளைக் கொண்டு ஆய்மலரால் விரும்பும் இறைவனுமாகிய பெருமான் யான் மறக்கும் வல்லமை உடையேனோ?
1991 | துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை வஞ்ச னேனினி நான்மறக் கிற்பனே. |
5.093.8 |
உறங்கும் போதும் சுடர்விடும் சோதியும், நெஞ்சத்துக்குள் நிலைத்து நின்று நினைக்கவைக்கும் நீதியும், ஆலகாலவிடத்தைத் திருக்கழுத்துள் அடக்கிய நம்பனுமாகிய பெருமானை வஞ்சனை உடைய யான் இனி மறக்கும் வல்லமை உடையேனோ?
1992 | புதிய பூவினை புண்ணிய நாதனை நிதியை நீதியை நித்திலக் குன்றினைக் கதியைக் கண்டங் கறுத்த கடவுளை மதியை மைந்தனை நான் மறக் கிற்பனே. |
5.093.9 |
புதிய பூவும், புண்ணியநாதனும், செல்வமும், நீதியும், முத்துக்குன்றும், அடைந்தோர்க்குக் கதியும், மதியும்,மைந்தனும் ஆகிய திருநீலகண்டமுடைய கடவுளை நான் மறக்கும் வல்லமை உடையேனோ?
1993 | கருகு கார்முகில் போல்வதொர் கண்டனை உருவ நோக்கியை யூழி முதல்வனைப் பருகு பாலனைப் பால்மதி சூடியை மருவு மைந்தனை நான்மறக் கிற்பனே. |
5.093.10 |
கருமை உடைய கார்முகில் போல்வதாகிய ஒப்பற்ற திருநீலகண்டனும், அழகுடைய நோக்கு இயைந்த ஊழிக் காலத்தும் உள்ள முதல்வனும், பருகுதற்குரிய பால் போன்ற வெண்மதியைச் சூடியவனும், அன்பால் நினைவாரை மருவுகின்ற மைந்தனுமாகிய பெருமானை நான் மறக்கும் வல்லமை உடையேனோ?
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மறக்கிற்பனே என்னும் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கிற்பனே, உடையேனோ, மறக்கும், வல்லமை, உடையவனும், யான்மறக், போல்வானும், மைந்தனை, கடவுளை, நான்மறக், பெருமானை, சுடர்விடும், சோதியை, நின்று, நீதியை, கார்முகில், நீதியும், என்னும், திருமுறை, தன்னையும், மறக்கிற்பனே, இறைவன், னையினி, திருச்சிற்றம்பலம், மூர்த்தியை