முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.078.திருக்கோடிகா
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.078.திருக்கோடிகா
5.078.திருக்கோடிகா
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர்.
தேவியார் - வடிவாம்பிகையம்மை.
1849 | சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன் வெங்கு லாமத வேழம் வெகுண்டவன் கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென எங்கி லாததோ ரின்பம்வந் தெய்துமே. |
5.078.1 |
சங்கு வளையல்கள் பொருந்திய முன்கையை உடைய உமாதேவியை ஒருபாகத்திலுடையவனும், சினவெம்மை பொருந்திய மதம் பொழியும் யானையினை வெகுண்டவனும், மணம் உலாவும் பொழிலை உடைய கோடிகாவில் உள்ளவனுமாகிய இறைவா! என்று கூற, எங்கும் இல்லாததோர் இன்பம் வந்து எய்தும்.
1850 | வாடி வாழ்வதென் னாவது மாதர்பால் ஓடி வாழ்வினை யுள்கிநீர் நாடொறும் கோடி காவனைக் கூறீரேற் கூறினேன் பாடி காவலிற் பட்டுக் கழிதிரே. |
5.078.2 |
நாள்தோறும் நீர் மாதர்பால் ஓடி, வாழ்வினையே நினைந்து வாடி வாழ்வது என் ஆவது? கோடிகா இறைவனைக் கூறீரேல், ஊர்க்காவலிற்பட்டுக் கழிவீர்; கூறினேன்.
1851 | முல்லை நன்முறு வல்லுமை பங்கனார் தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார் கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங் கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே. |
5.078.3 |
முல்லையையொத்த நல்ல சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை.
1852 | நாவ ளம்பெறு மாறும னன்நன்னுதல் ஆம ளஞ்சொலி யன்புசெ யின்னலால் கோம ளஞ்சடைக் கோடிகா வாவென ஏவ ளின்றெனை யேசுமவ் வேழையே. |
5.078.4 |
நாவானது வளம் பெறுமாறு அழகிய நுதலை உடைய தலைவி இயன்ற அளவு அழகிய சடையையுடைய கோடிகா இறைவனே என்று அவன் திருப்புகழ் சொல்லி அன்பு செய்தால் பெறலாமேயன்றி அவனை இசைபாடும் வாயால் என்னை வசைபாடுகின்றாளே இந்நங்கை.
1853 | வீறு தான்பெறு வார்சில ராகிலும் நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேல் கூறு வேன்கோடி காவுளா யென்றுமால் ஏறு வேன்நும்மா லேசப் படுவனோ. |
5.078.5 |
கோடிகாவில் உள்ள இறைவனே! பெருமை பெறுவார் சிலர் ஆயினும் நறுமணம் வீசும் கொன்றையை மிக அருளாதவனானால் கூறுவேன்; என்றும் காமத்துயர் மயக்கம் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?
1854 | நாடி நாரணன் நான்முகன் வானவர் தேடி யேசற வுந்தெரி யாததோர் கோடி காவனைக் கூறாத நாளெலாம் பாடி காவலிற் பட்டுக் கழியுமே. |
5.078.6 |
திருமாலும் நான்முகனும் தேவர்களும் ஆராயமுற்பட்டுத் தேடித் துயர் உறவும் தெரியாத இயல்பை உடைய ஒப்பற்ற கோடிகாவுறையும் இறைவனைக் கூறாத நாட்களெல்லாம் ஊர்க்காவலிற்பட்டுக் கழியும்.
1855 | வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர் குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே. |
5.078.10 |
வரங்களாற்பெற்ற பலத்தால் திருக்கயிலையை எடுத்த இராவணனை அழிய ஊன்றி அருள்செய்த அப்பன் ஊராகிய குரங்குகள் சேரும் பொழிலை உடைய கோடிகா இறைவனே என்று என் மனத்துக் குற்றங்கள் தீர இரங்குவேன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோடிகா - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோடிகா, இறைவனே, பட்டுக், காவலிற், இறைவனைக், முல்லை, கொல்லை, கூறினேன், ஊர்க்காவலிற்பட்டுக், காவனைக், திருச்சிற்றம்பலம், திருமுறை, பொருந்திய, பொழிலை, மாதர்பால், கோடிகாவில், திருக்கோடிகா