முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.025.திருப்பாசூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.025.திருப்பாசூர்
5.025.திருப்பாசூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர்.
தேவியார் - பசுபதிநாயகியம்மை.
1315 | முந்தி மூவெயி லெய்த முதல்வனார் சிந்திப்பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார் அந்திக் கோன்தனக் கேயருள் செய்தவர் பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே. |
5.025.1 |
வரிசையாகிய அடர்ந்த செஞ்சடையுடையவராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர் முதற்கண் முப்புரங்களை எய்த முதல்வர்; சிந்திப்பவர்களின் வினைகளைத் தீர்க்கும் செல்வர்; சந்திரனுக்கு அருள் செய்த தண்ணளியாளர்.
1316 | மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார் கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர் படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே. |
5.025.2 |
படர்ந்தெழும் நாகத்தைப் பூண்ட திர்ப்பாசூர்த் தலத்து இறைவர். உமாதேவியை ஒரு பாகத்து மகிழ்ந்த மணவாளர்; உயிர்களைப் பிறவிதோறும் தொடர்ந்து வரும் வல்லமை உடைய வினைகளாகிய இருளைப் போக்கிடும் ஒளி வடிவானவர்; எல்லை கடந்த இயமனைக் கால்கொண்டு பாய்ந்து உதைத்தவர்.
1317 | நாறு கொன்றையும் நாகமுந் திங்களும் ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார் காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர் பாறி னோட்டினர் பாசூ ரடிகளே. |
5.025.3 |
பருந்துகள் அலைக்கும் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவராகிய திர்ப்பாசூர்த்தலத்து இறைவர், மணம்வீசும் கொன்றையும், நாகமும், திங்களும், கங்கையாறும் செஞ்சடையில் வைத்த அழகர்; கரியகண்டத்தர்; கையிற்பிடித்த சூலத்தர்.
1318 | வெற்றி யூருறை வேதிய ராவர்நல் ஒற்றி யேறுகந் தேறு மொருவனார் நெற்றிக் கண்ணினர் நீளர வந்தனைப் பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே. |
5.025.4 |
நீண்ட அரவினைப் பற்றியாட்டும், இயல்பினர் ஆகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், வெற்றியூரில் உறையும் வேதியர், ஏற்றினை ஒற்றி உகந்து ஏறும் ஒப்பற்றவர், நெற்றிக் கண்ணினார்.
1319 | மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால் இட்ட வேட்கைய ராகி யிருப்பவர் துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. |
5.025.5 |
பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர். தேன் விரிந்த மலர்களையணிந்த நீண்ட கண்ணுடைய உமாதேவியார்பால் விருப்பமும் வேட்கையும் உடையவராயிருப்பவர்; இவர் தீயவரேல் இவரது சூழ்ச்சித் தன்மைகளை அறியேன்.
1320 | பல்லில் ஓடுகை யேந்திப் பகலெலாம் எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர் சொல்லிப் போய்ப்புகு மூரறி யேன்சொலீர் பல்கு நீற்றினார் பாசூ ரடிகளே. |
5.025.6 |
நிறைந்த திருவெண்ணீற்றினராகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், பல்லில்லாத ஓட்டினைக் கையேந்திப் பகலெல்லாம் வெயிலில் நின்று இடுகின்ற பலியினை ஏற்பவர்; சொல்லிவிட்டுச் சென்று புகுந்த ஊரினை அறியேன்; சொல்லுவீராக.
1321 | கட்டி விட்ட சடையர் கபாலியர் எட்டி நோக்கிவந் தில்புகுந் தவ்வவர் இட்ட மாவறி யேனிவர் செய்வன பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. |
5.025.7 |
பட்டமணிந்த நெற்றியை உடையவராகிய திருப்பாசூர்த்தலத்து இறைவர் கட்டிவிட்ட சடையை உடையவரும், கபாலம் கைக்கொண்டவரும் எட்டிப்பார்த்து இல்லத்தில் புகுந்தவரும் ஆகியர். இவர் விரும்பிச் செய்வன இவையென யான் முற்ற அறியேன்.
1322 | வேத மோதிவந் தில்புகுந் தாரவர் காதில் வெண்குழை வைத்த கபாலியார் நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர் பாதி வெண்பிறைப் பாசூ ரடிகளே. |
5.025.8 |
பாதி வெண்பிறையணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர், வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார்; காதில் வெண்குழை வைத்த கபாலியார்; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார்.
1323 | சாம்பல் பூசுவர் தாழ்சடை கட்டுவர் ஓம்பன் மூதெரு தேறு மொருவனார் தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர் பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே. |
5.025.9 |
தீயதாகிய பாம்பினையும் பற்றி ஆடுபவராகிய திர்ப்பாசூர்த் தலத்திறைவர், சாம்பல் பூசுவர்; தாழ்கின்ற சடையினைக் கட்டுவர்; தாங்கும் இயல்புள்ள முதிர்ந்த எருதினை யேறும் ஒருவர்; ஒளிதேம்பிய வெண்மதியைச் சூடுவர்.
1324 | மாலி னோடு மறையவன் தானுமாய் மேலுங் கீழு மளப்பரி தாயவர் ஆலின் நீழ லறம் பகர்ந் தார்மிகப் பால்வெண் நீற்றினர் பாசூ ரடிகளே. |
5.025.10 |
பால்போன்ற வெண்ணீற்றையணிந்தவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் மாலினோடு பிரமனும் மேலும் கீழும் அளந்தும் காண்டற்கரியவர்; ஆலின்நீழல் இருந்து அறம் பகர்ந்த ஞானவடிவினர்.
1325 | திரியும் மூஎயில் செங்கணை யொன்றினால் எரிய எய்தன ரேனு மிலங்கைக்கோன் நெரிய வூன்றியிட் டார்விர லொன்றினால் பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே. | 5.025.11 |
பருப்பொருளும், நுண்பொருளுமாகிய திருப்பாசூர்த் தலத்து இறைவர், திரியும் மூன்று புரங்களைச் சிவந்த கணையொன்றினால் எரியுமாறு எய்தனரேனும், இலங்கையரசன் நெரியுமாறு திருவிரலால் ஊன்றியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாசூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ரடிகளே, இறைவர், திருப்பாசூர்த், தலத்து, அறியேன், காதில், வெண்குழை, செய்வன, தில்புகுந், கபாலியார், திருப்பாசூர்த்தலத்து, கட்டுவர், தலத்திறைவர், திரியும், சூடுவர், உடையவராகிய, பூசுவர், சாம்பல், நெற்றியர், திர்ப்பாசூர்த், கொன்றையும், மகிழ்ந்த, திருச்சிற்றம்பலம், திருமுறை, திங்களும், சூலத்தர், திருப்பாசூர், பட்டமணிந்த, யேனிவர், நெற்றிக், மொருவனார், நெற்றியை