முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.102.திருவாரூர்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.102.திருவாரூர்
4.102.திருவாரூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
976 | குலம்பலம் பாவரு குண்டர்முன் அலம்பலம் பாவரு தண்புன சிலம்பலம் பாவரு சேவடி புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் |
4.102.1 |
கழுவுதலும் ஒலித்தலும் உடையதாக வரும்தண்ணிய நீர்வளம் மிக்க திருவாரூரில், விளங்குகின்ற சடைமுடியையும் சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகளையும் உடைய சிவபெருமானுடைய திருமூலத்தானத்தே, அப்பெருமானுடைய பேரிரக்கத்தையும் அதன் பயன்களையும் எண்ணி உருகுதலால் கண்ணீர் வடித்து வரும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப்பேறு, கூட்டமும் வலிமையும் பரவிய மூர்க்கர்களாகிய சமணர் காணுமாறு, அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்டுமோ?
977 | மற்றிட மின்றி மனை துறந் சொற்றிட மென்று துரிசுபட் விற்றிடம் வாங்கி விசயனொ புற்றிடங் கொண்டான்றன் றொண்டர்க்குத் |
4.102.2 |
அருச்சுனனுடைய வில்லின் வலிமையைக் கவர்ந்து அக்காலத்தில் வேடுவனாய்க் காட்சி வழங்கிய திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமானுடைய அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப் பேறு, வீட்டினையும் துறந்து வேறு இடமும் இல்லாமல் இரவில் உண்ணுதல் இல்லாத உடல் வலிய சமணர்கள் கூறும் செய்திகளே உறுதியானவை என்று கருதிக் குற்றம் செய்த அடியேனுக்கும் கிட்டுமோ?
978 | ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் செருவடி வெஞ்சிலை யாற்புர திருவுடை யான்றிரு வாரூர்த் பொருவிடை யானடித் தொண்டர்க்குத் |
4.102.3 |
போருக்காக வளைத்துக் கொண்ட மேருமலையாகிய வில்லினாலே மும்மதில்களையும் அழித்தவனாய், தான் போய்த் தேடாமல் இயல்பாகவே மேம்பட்ட செல்வத்தை உடையனாய்த் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறைபவனான, திருமாலாகிய, சிவந்த கண்களை உடைய போரிடும் காளையை உடைய பெருமானுடைய அடியார்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு, ஆடைகளால் பொலிவு செய்யப்படும் வடிவழகின்றி நின்றபடியே உணவினை வாங்கி உண்ணும் மூர்க்கர்களாகிய சமணர், தம் கண்களால் காணுமாறு, அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ?
979 | மாசினை யேறிய மேனியர் டீசனை யேநினைந் தேசறு தேசனை யாரூர்த் திருமூலட் பூசனைப்பூசுரர் தொண்டர்க்குத் |
4.102.4 |
ஞான ஒளி வடிவினனாகிய திருவாரூர் மூலத்தானப் பெருமானைப் பூசனை செய்யும் நில உலகத்தேவர்களின் அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப் பேறு, அழுக்கு ஏறிய உடம்பினராய், அகத்து வன்மையைப் புறத்துக் காட்டும் கண்ணினராய் வழுக்கைத் தலையரான சமணர்களுடைய தொடர்பை விடுத்து, எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமானையே நினைத்து வருந்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ?
980 | அருந்தும் பொழுதுரை யாடா வருந்தி நினைந்தர னேயென்று திருந்திய மாமதி லாரூர்த் பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் |
4.102.5 |
திருத்தமாக அமைந்த பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானனுக்கு உகப்பான தவத்தில் ஈடுபட்ட அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு, உண்ணும் போது யாரிடமும் பேசாதிருத்தலை விரதமாகக் கொண்ட அமணர் கூட்டத்தை விடுத்து, பழைய செயலுக்கு வருந்தி நின்று 'தீவினையை அழிப்பவனே' என்று, அவனை வாழ்த்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ?
981 | வீங்கிய தோள்களுந் தாள்களு மூங்கைகள் போலுண்ணு மூடர்முன் தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் பூங்கழ லானடித் தொண்டர்க்குத் |
4.102.6 |
மணம் கமழும் சோலைகளை உடைய அழகிய ஆரூரில் திருமூலத்தானத்து உறையும் சிவந்த மலர்போன்ற திருவடிகளை உடைய பெருமான் திருவடிகளில் தொண்டு செய்யும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப் பேறு, பருத்த தோள்களையும் கால்களையும் கொண்டு ஆடை உடுக்காதவராய் ஊமைகள் போல யாரிடமும் பேசாமல் உண்ணும் மூடர்களாகிய சமணர்கள் காணுமாறு நமக்குக் கிட்டும் வாய்ப்பு உளதோ?
982 | பண்ணிய சாத்திரப் பேய்கள் டெண்ணில் புகழீசன் றன்னருள் திண்ணிய மாமதி லாரூர்த் புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் |
4.102.7 |
உறுதியான பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எங்கள் நல்வினை வடிவினனாகிய பெருமானுடைய அடித்தொண்டருக்குத் தொண்டராகும் புண்ணியம், தாமாகவே புனைந்துரைத்த சாத்திரங்களை உபதேசிப்பவராய், வலிய தலைமயிரை நீக்கிக் கொள்பவராய் உள்ள சமண மூர்க்கர்களை விடுத்துக் கணக்கிட முடியாத புகழை உடைய ஈசன் அருளைப் பெற்ற அடியேனுக்கும் உண்டோ?
983 | கரப்பர்கண் மெய்யைத் தலைபறிக் உரைப்பன கேளாதிங் குய்யப்போந் திருப்பொலி யாரூர்த் திருமூலட் பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் |
4.102.8 |
செல்வத்தால் பொலிவு பெற்ற திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் கயிலாயபதியிடம் விருப்பம் பொருந்திய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம், ஒரோவழித் தம் உடம்பைப் பாயால் மறைப்பவராய்த் தலைமயிரை வலிய நீக்குவதே சுகம் என்று கூறும் சமண சமய மூர்க்கர்கள் உரைத்தனவற்றைக் கேளாமல் சிவபெருமான் பக்கல் கடைத்தேறுவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் உண்டோ?
984 | கையிலிடு சோறு நின்றுண்ணுங் டுய்யு நெறிகண்டிங் குய்யப்போந் ஐய னணிவய லாரூர்த் பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத் |
4.102.9 |
நம் தலைவனாய் அழகிய வயல்களை உடைய திருவாரூரின் திருமூலத்தானப் பெருமான் பக்கல் உண்மையான அன்புடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம், கையில் வழங்கப்படும் சோற்றை நின்றபடியே உண்ணும் செயலில் விருப்பம் கொள்ளும் சமணரைவிடுத்து, பிழைத்தற்குரிய வழியைக் கண்டு சிவபெருமான் பக்கல் பிறவிப் பிணியிலிருந்து தப்புவதற்காக வந்து சேர்ந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ?
985 | குற்ற முடைய வமணர் டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் மற்பொலி தோளா னிராவணன் பொற்கழ லானடித் தொண்டர்க்குத் |
4.102.10 |
வலிமை பொருந்திய தோள்களை உடைய இராவணனுடைய வலிமையை அழியச் செய்த பொன்னாலாகிய கழலை அணிந்த சிவபெருமானுடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம், குற்றமுடைய சமணர்கள் சமயத்தின் கூறுபாடுகளை விடுத்து நீங்கி, சைவ சமயத்தில் அடியேனுக்குச் செய்வதற்காக வகுக்கப்பட்ட செயல்களைச் செய்து பிறவிப் பிணியினின்றும் பிழைத்துப் போவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ?
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 100 | 101 | 102 | 103 | 104 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புண்ணியமே, தொண்டர்க்குத்தொண்டராம், வாய்ப்பு, அடியேனுக்கும், அடியவர்களுக்கு, திருவாரூர்த், புண்ணியம், உண்ணும், திருமூலத்தானத்தில், அடியவனாகும், கிட்டும், லாரூர்த்திருமூலட், உறையும், சமணர்கள், விடுத்து, திருவாரூர், நல்வினைப், தொண்டருக்குத், நல்வினைப்பேறு, அடியவராகும், பக்கல், நமக்குக், தொண்டராம், பெருமானுடைய, லானடித், வந்தடைந்த, யாரிடமும், பிறவிப், பெருமான், தலைமயிரை, விருப்பம், மதில்களையுடைய, சிவபெருமான், குய்யப்போந்தேனுக்கு, பொருந்திய, பொலிவு, காணுமாறு, அவர்கள், முன்னிலையில், மூர்க்கர்களாகிய, சிவபெருமானுடைய, திருமுறை, திருச்சிற்றம்பலம், கிட்டுமோ, வாங்கி, வடிவினனாகிய, செய்யும், யாரூர்த், நின்றபடியே, கூறும், சிவந்த, அடியேனுக்குக்