முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.058.திருச்சாத்தமங்கை
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.058.திருச்சாத்தமங்கை
3.058.திருச்சாத்தமங்கை
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அயவந்தீசுவரர்.
தேவியார் - மலர்க்கணம்பிகையம்மை.
3416 | திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதி இருமலர்க் கண்ணிதன்னோ டுட னாவது பெருமலர்ச் சோலைமேக முரிஞ் சும்பெருஞ் அருமல ராதிமூர்த்தீ யய வந்தி |
3.058.1 |
தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், சந்திரனைத் தலையில் தரித்தவனும், இரு தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில், உலகிற்கு ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார். இத்திருத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது.
3417 | பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு கொடியன சாயலாளோ டுடனாவதுங் கடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற் அடிகணக் கன்பரவ வய வந்தி |
3.058.2 |
சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில் முப்புரிநூல் அணிந்து, பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான். நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
3418 | நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் மானன நோக்கிதன்னோ டுட னாவது தானலங் கொண்டுமேகந் தவ ழும்பொழிற் ஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தி |
3.058.3 |
முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினை அணிந்து, இடப வாகனத்திலேறி, மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான். மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
3419 | மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண் புற்றர வல்குலாளோ டுட னாவதும் கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் அற்றவர் நாளுமேத்த வய வந்தி |
3.058.4 |
பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களை எய்து அழித்து, திருவெண்ணீற்றினைப் பூசி, புற்றில் வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் சிவபெருமான். வேதகாமங்களை நன்கு கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும். உலகப் பற்றற்ற மெய்யடியார்கள், தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ பெருமானை நாள்தோறும் போற்றி வழிபட திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் அவன் வீற்றிருந்தருளுகின்றான்.
3420 | வெந்தவெண்
ணீறுபூசி விடை யேறிய பந்தண வும்விரலா ளுட னாவதும் சந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் அந்தமா யாதியாகி யய வந்தி |
3.058.5 |
இறைவன் திருவெண்ணீற்றினைப் பூசியவன். இடபவாகனத்தில் ஏறியமர்பவன். வேதத்தை இசையோடு பாடியருளி, வேதப் பொருளாகவும் விளங்குபவன். பந்து வந்தணைகின்ற விரல்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன். வேதமும், அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும், ஆதியுமாகிய சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
3421 | வேதமாய்
வேள்வியாகி விளங் கும்பொருள் சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்ல சாதியான் மிக்கசீராற் றகு வார்தொழுஞ் ஆதியாய் நின்றபெம்மா னய வந்தி |
3.058.6 |
இறைவன் வேதங்களை அருளி வேதப் பொருளாகவும் விளங்குபவன். எரியோம்பிச் செய்யப்படும் வேத வேள்வியாகவும், ஞானவேள்வியாகவும் திகழ்பவன். ஒண்பொருளாகவும், வீடுபேறாகவும் உள்ளவன். சோதிவடிவானவன். உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன். இப்பெருமான் இத்தகையவன் என்பதை வாயினால் சொல்லவும் ஆகுமோ? அத்தகைய சிறப்புடைய பெருமான், தக்கவர்கள் தொழும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் ஆதிமூர்த்தியாய் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
3422 | இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண் உமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்ன சமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் அமையவே றோங்குசீரா னய வந்தி |
3.058.7 |
சிவபெருமான் இமயம் முதலான பெரிய மலைகளும் நிலைகலங்குமாறு, முப்புரங்களை எரித்து, திருவெண்ணீற்றினைப் பூசி உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்த தன்மை பாராட்டிப் பேசக் கூடிய அரிய செயலாகும். அவன் சமயநூல்களையும், வேதத்தையும், அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
3423 | பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர் விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் தண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற் அண்ணலாய் நின்றவெம்மா னய வந்தி |
3.058.8 |
இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை வீணையில் மீட்டிப் பாடுவான். பரமயோகி அவன். மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். அப்பெருமான் குளிர்ச்சி பொருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி, திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
3424 | பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும் ஈரெழிற் கோலமாகி யுட னாவது காரெழில் வண்ணனோடு கன கம்மனை ஆரழல் வண்ணமங்கை யய வந்தி |
3.058.9 |
மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த தோள்களினால் மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை அடக்கிய சிவபெருமான் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பனாகவும், உடனாகக் கொண்டு அழகிய இரண்டு கோலமாகவும், கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான திருமாலும், பொன்போன்ற நிறமுடைய பிரமனும், காண முடியாவண்ணம் நெருப்பு வண்ணமுமாகி, திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில், திரு அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
3425 | கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி |
3.058.10 |
சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி, பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய தொன்றா? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்றஅந்தணர்கள் தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில் பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
3426 | மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம் நிறையினார் நீலநக்க னெடு மாநக அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமே முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலு |
3.058.11 |
நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி, திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சாத்தமங்கை - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், சாத்தமங்கை, சிவபெருமான், யமர்ந்தவனே, வீற்றிருந்தருளுகின்றான், கொண்டு, திருஅயவந்தி, திருத்தலத்தில், திருக்கோயிலில், உடனாகக், உமாதேவியை, திருச்சாத்தமங்கை, விளங்குபவன், திருவெண்ணீற்றினைப், திருமேனியில், திருசாத்தமங்கை, அந்தணர்கள், வாழ்கின்ற, விளங்கும், தொழுகின்ற, இறைவன், போற்றி, கோயிலில், அயவந்தி, ழும்பொழிற், பாகமாகக், லாவதொன்றே, உமாதேவியைத், றங்கம்வேதந், தார்தொழுஞ், பரமயோகி, கொண்டவன், ணீறுபூசி, ஓதுகின்ற, பொருளாகவும், தொடும்படி, திருமுறை, திருமார்பில், திருச்சிற்றம்பலம், திருச்சாத்த, சந்திரனைத், மலர்கள், முப்புரிநூல், அணிந்து, சூழ்ந்த, லெய்துவெண், சோலைகள், உயர்ந்த, விளங்குகிறான், பொருந்திய, னாவதும்