முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.055.திருவான்மியூர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.055.திருவான்மியூர்
3.055.திருவான்மியூர்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருந்தீசுவரர்.
தேவியார் - சுந்தரமாது (அ) சொக்கநாயகி.
3384 | விரையார் கொன்றையினாய் விடமுண்ட உரையார் பல்புகழா யுமைநங்கையொர் திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி அரையா வுன்னையல்லா லடையாதென |
3.055.1 |
நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது.
3385 | இடியா ரேறுடையா யிமையோர்தம் கொடியார் மாமதியோ டரவம்மலர்க் செடியார் மாதவிசூழ் திருவான்மி அடிகே ளுன்னையல்லா லடையாதென |
3.055.2 |
இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக உடையவனே! தேவர்கள் தங்கள் மணிமுடி உன் திருப்பாதத்தில் படும்படி வணங்க அவர்கட்கு வாழ்வளிக்கும் முதற்பொருளே! இடபக்கொடியும், சந்திரனும், பாம்பும், கொன்றைமலரும் உடைய இறைவனே! செடிகளோடு கூடிய மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தலைவனான சிவபெருமானே! உன்னைத் தவிர என் மனம், ஆதரவாக வேறெதையும் அடையாது.
3386 | கையார் வெண்மழுவா கனல்போற்றிரு மையா ரொண்கணல்லா ளுமையாள்வளர் செய்யார் செங்கயல்பாய் திருவான்மி ஐயா வுன்னையல்லா லடையாதென |
3.055.3 |
கையின்கண் பொருந்திய வெண்மையான மழுவாயுதத்தை உடையவனே! கனல் போன்ற சிவந்த திருமேனியனே! மை பூசப் பெற்ற, ஒளி பொருந்திய கண்களை உடைய நல்லவளாகிய உமையம்மை கண்வளரும் மார்பினனே! வயல்களில் செங்கயல்கள் பாயும் வளம் பொருந்திய திருவான்மியூரில் உறையும் ஐயனே! உன்னையல்லால் எனது அன்பு பிறிதொருவரைச் சென்றடையாது.
3387 | பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய மின்போ லும்புரிநூல் விடையேறிய தென்பால் வையமெலாந் திகழுந்திரு அன்பா வுன்னையல்லா லடையாதென |
3.055.4 |
பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத் தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல் அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம் இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.
3388 | கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் திண்ணார் வண்புரிசைத் திருவான்மி அண்ணா வுன்னையல்லா லடையாதென |
3.055.5 |
நெற்றிக்கண்ணை உடையவனே! கதிர்போல் ஒளிரும் திருமேனி மீது திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த உறுதியான மதில்களை உடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.
3389 | நீதி நின்னையல்லா னெறியாதும் ஓதீ நான்மறைகள் மறையோன்றலை சேதீ சேதமில்லாத் திருவான்மி ஆதீ யுன்னையல்லா லடையாதென |
3.055.6 |
நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன் தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.
3390 | வானார் மாமதிசேர் சடையாய்வரை கானா ரானையின்றோ லுரித்தாய்கறை தேனார் சோலைகள்சூழ் திருவான்மி ஆனா யுன்னையல்லா லடையாதென |
3.055.7 |
வானில் விளங்கும் சந்திரனைச் சடையில் தரித்தவனே! மலைபோல வரும் பாட்டிலுள்ள யானையின் தோலை உரித்தவனே! நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன் துளிக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் இடபவாகனத்தில வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.
3391 | பொறிவாய் நாகணையா னொடுபூமிசை நெறியார் நீள்கழன்மேன் முடிகாண்பரி செறிவார் மாமதில்சூழ் திருவான்மி அறிவே யுன்னையல்லா லடையாதென |
3.055.9 |
நெருப்புப் பொறிபோல் விடம் கக்கும் வாயுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், நன்னெறி காட்டும் உனது நீண்ட திருவடியையும், மேலோங்கும் திருமுடியையும் காண்பதற்கு அரியவனாய் விளங்கியவனே! நெருக்கமாக நீண்ட பெரிய மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் முற்றுணர்வும், இயற்கை உணர்வுமுடையவனே! உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.
3392 | குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய கண்டார் காரணங்கள் கருதாதவர் திண்டேர் வீதியதார் திருவான்மி அண்டா வுன்னையல்லா லடையாதென |
3.055.10 |
விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத் தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என் மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது.
3393 | கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு நன்றான புகழான் மிகுஞானசம் சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை |
3.055.11 |
பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன், இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவான்மியூர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - லடையாதென, திருவான்மி, தாதரவே, ஆதரவாக, வேறெதையும், திருவான்மியூரில், வீற்றிருந்தருளும், யூருறையும், அடையாது, உன்னையல்லால், சூழ்ந்த, வுன்னையல்லா, பொருந்திய, என்மனம், உடையவனே, திருவான்மியூர், ஒளிரும், யுன்னையல்லா, அருளிச், சோலைகள், திருமுறை, கறுத்த, விடமுண்ட, கொன்றையினாய், திருச்சிற்றம்பலம், இறைவனே, மார்பினனே