முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.110.திருப்பிரமபுரம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.110.திருப்பிரமபுரம்
3.110.திருப்பிரமபுரம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3978 | வரமதேகொளா
வுரமதேசெயும் தரனனாமமே பரவுவார்கள்சீர் |
3.110.1 |
தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். திருப் பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற பூமி முழுவதும் பரவும்.
3979 | சேணுலாமதில்
வேணுமண்ணுளோர் தாணுவின்கழல் பேணுகின்றவ |
3.110.2 |
ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர் காணும்படி அமைந்த, நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர்.
3980 | அகலமார்தரைப்
புகலுநான் மறைக் பகல்செய்வோனெதிர்ச் சகலசேகர |
3.110.3 |
விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார்.
3981 | துங்கமாகரி
பங்கமாவடுஞ் அங்கணானடி தங்கையாற்றொழத் |
3.110.4 |
உயர்ந்ததும், பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும், புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா.
3982 | காணியொண்பொருட்
கற்றவர்க்கீகை றோணிவண்புரத் தாணியென்பவர் |
3.110.5 |
நிலங்களையும், அறவழியில் ஈட்டிய பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர்.
3983 | ஏந்தராவெதிர்
வாய்ந்தநுண்ணிடைப் பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற் |
3.110.6 |
படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைப் தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும்.
3984 | சுரபுரத்தினைத்
துயர்செய்தாரகன் சிரபுரத்துளா னென்னவல்லவர் |
3.110.7 |
தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர்.
3985 | உறவுமாகியற்
றவர்களுக்குமா புறவமாநகர்க் கிறைவனேயெனத் |
3.110.8 |
வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற, இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா.
3986 | பண்புசேரிலங்
கைக்குநாதனன் சண்பையாதியைத் தொழுமவர்களைச் |
3.110.9 |
பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த, திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத் தொழுபவர்கள் வினைகள் துன்புறுத்தா. வலியிழந்துபோம்.
3987 | ஆழியங்கையிற்
கொண்டமாலய காழிமாநகர்க் கடவுணாமமே |
3.110.10 |
சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும், பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும், சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும்.
3988 | விச்சையொன்றிலாச்
சமணர்சாக்கியப் கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர் |
3.110.11 |
மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர், புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள்.
3989 | கழுமலத்தினுட்
கடவுள்பாதமே முழுதும்வல்லவர்க் கின்பமேதரு |
3.110.12 |
திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 108 | 109 | 110 | 111 | 112 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பிரமபுரம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், வீற்றிருந்தருளுகின்ற, போற்றி, சிவபெருமான், வினையே, வினைகள், திருத்தலத்தில், சிவபெருமானின், வீற்றிருந்தருளும், மாநகரில், விளங்கும், பெறுவர், சிவபெருமானைத், புகழுடன், போன்று, திருச்சிற்றம்பலம், திருமுறை, நன்னகரில், ஆணிப்பொன், வாழ்கின்ற, திருப்பிரமபுரம், சிவபெருமானே