முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.100.திருத்தோணிபுரம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.100.திருத்தோணிபுரம்
3.100.திருத்தோணிபுரம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர்.
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
3872 | கரும்பமர்
வில்லியைக் காய்ந்து காதற் அரும்பமர் கொங்கை யோர்பான் மகிழ்ந்த பெரும்பக லேவந்தென் பெண்மை கொண்டு சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் |
3.100.1 |
சிவபெருமான் கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதனைக் கோபித்து நெருப்புக் கண்ணால் எரித்து, பின்னர் அவனது அன்பிற்குரிய மனையாளாகிய இரதி வேண்ட அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு செய்து, கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய உமாதேவியை ஒரு பகுதியாகக் கொண்டு மகிழ்ந்த அற்புதம் செப்புதற்கரியதாகும். நண்பகலிலே வந்து எனது பெண்மை நலத்தைக் கவர்ந்து கொண்டு திரும்பவும் அவர் சென்று சேர்ந்த இடம் வண்டுகள் விரும்பி உறைகின்ற சோலைகள் சூழப்பெற்ற நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் ஆகும்.
3873 | கொங்கியல்
பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க் பங்கிய லுந்திரு மேனி யெங்கும் சங்கியல் வெள்வளை சோர வந்தென் துங்கியன் மாளிகை சூழ்ந்த செம்மைத் |
3.100.2 |
இயற்கைமணம் பொருந்திய அழகிய கூந்தலையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுமுடைய அழகிய உமா தேவியைத் தன் ஒரு பாகமாகப் பொருந்திய, திருமேனி முழுவதும் பால்போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள சிவபெருமான் எனது உள்ளத்தில் புகுந்து என் வநையல் கழன்று விழுமாறு செய்து, எனது தோற்றப் பொலிவினைக் கெடுத்து வீற்றுருந்தருளும் ஊர் உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.
3874 | மத்தக்
களிற்றுரி போர்க்கக் கண்டு சித்தந் தௌயநின் றாடி யேறூர் றொத்தபடி வந்தென் னுள்ளங் கொண்ட துத்தநல் லின்னிசை வண்டு பாடுந் |
3.100.3 |
மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டதைக் கண்ட உமாதேவி அஞ்சவும், அவள் பயம் நீங்கி மனம் தௌயச் சிவபெருமான் திருநடனம் செய்தார். அவர் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனியர். சிறுபிச்சை ஏற்க அதற்கேற்ற பிட்சாடனர் கோலத்தில் வந்து உஎனது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட ஒப்பற்றவராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துத்தம் என்னும் நல்ல இன்னிசையை, வண்டுகள் பாடுகின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.
3875 | வள்ள
லிருந்த மலையத னைவலஞ் உள்ளங் கொள்ளாது கொதித்தெ ழுந்தன் மௌள விரல்வைத்தெ னுள்ளங் கொண்டார் துள்ளொலி வெள்ளத்தின்மேன்மி தந்த |
3.100.8 |
வேண்டுவோர் வேண்டுவதே வரையாது வழங்கும் வள்ளலான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற கயிலைமலையை வலஞ்செய்து செல்லலே உண்மைநெறி என்பதை உள்ளத்தில் கொள்ளாது, தனது திக்விஜயத்திற்கு இடையூறாக உள்ளது என்று கோபம் கொண்டு அன்று திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணனின் நெஞ்சு நெரியும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய, என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், பிரளய காலத்தில் அலைகள் துள்ளி வரவதால் உண்டாகிய ஒலியுடன் கூடிய வெள்ளத்தின்மேல் மித்ந்து நிலைபெற்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.
3876 | வெல்பற
வைக்கொடி மாலு மற்றை பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய செல்வறநீண்டெஞ் சிந்தைபொண்ட தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத் |
3.100.9 |
கருடக்கொடிடையு திருமாலும், நறுமணமிக்க தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் முறையே பன்றியாய் உருக்கொண்டு கீழே அகழ்ந்து கென்றும், அன்னப் பறவையாய் உருவெடுத்தும், காணற்கரியராய் நெருப்புருவாய் நீண்டு எம் உள்ளத்தைக் கவர்ந்த செல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொன்மையான பறவைகள் சுமந்த ஓங்கியுள்ள நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.
3877 | குண்டிகை
பீலி தட்டோடு நின்று மண்டைகை யேந்தி மனங்கொள் கஞ்சி இண்டை புனைந்தெரு தேறிவந்தெ தொண்டிசை பாட லறாத தொன்மைத் |
3.100.10 |
கமண்டலம், மயில்தோகை, தடுக்கு ஆகிய வற்றுடன் மலைகளில் வசிக்கின்ற சமணர்களும், மண்டை என்னும் உண்கலத்தில் கஞ்சிபெற்றுப் பருகும் புத்தர்களும் பேசுகின்ற வார்த்தைகள் அடங்க, இண்டை மாலை புனைந்து, இடப வாகனத்திலேறி எனது அழகைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொண்டர்களின் இசைப்பாடல்கள் நீங்காத பழமைவாய்ந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.
3878 | தூமரு
மாளிகை மாட நீடு மாமறை நான்கினொ டங்க மாறும் நாமரு கேள்வி நலந்திகழும் ஞான பாமரு பாடல்கள் பத்தும் வல்லார் |
3.100.11 |
தூய்மையான வெண்ணிற மாளிகைகள், மாடங்கள் நிறைந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நானகு வேதங்களும், அவற்றின் ஆறு அங்கங்களும் வல்லவனும், தானுண்ட ஞானப் பாலை நாவால் மறித்து உண்மையான உபதேச மொழிகளாக் நமக்குக் கேள்வி ஞானத்தைப் புகட்டிட நன்மையைச் செய்கின்றவனுமான திருஞானசம்பந்தன் அருளிய பாட்டிலக்கணங்க.ள் பொருந்திய இப்பாடல்கள் பத்தினையும் பத்தியுடன் ஓத வல்லவர்கள் இப்பூவுலகம் முழுவதையும் ஆளும் பேறு பெறுவர்
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தோணிபுரம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருத்தோணிபுரம், என்னும், சிவபெருமான், திருத்தலமாகும், புரந்தானே, வீற்றிருந்தருளும், கொண்டு, நன்னெறி, பொருந்திய, கவர்ந்து, உள்ளத்தைக், சூழ்ந்த, செம்மைத், வீற்றிருந்தருளுகின்ற, கொள்ளாது, கேள்வி, கவர்ந்த, னுள்ளங், மாளிகைகள், வந்தென், பெண்மை, மகிழ்ந்த, திருச்சிற்றம்பலம், திருமுறை, சோலைகள், செய்து, சிவந்த, மாளிகை, வண்டுகள், உள்ளத்தில்