முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.073.திருக்கானூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.073.திருக்கானூர்
1.073.திருக்கானூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்மேனிநாயகர்.
தேவியார் - சிவயோகநாயகியம்மை.
787 |
வானார்சோதி மன்னுசென்னி தேனார்போது தானார்கங்கை மானேர்நோக்கி கண்டங்குவப்ப கானூர்மேய கண்ணார்நெற்றி |
1.073.1 |
திருக்கானூரில் மேவிய கண்பொருந்திய நெற்றியினை உடையவரும், ஆனேற்றை ஊர்ந்து வருபவருமாகிய செல்வர், வானத்தில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற ஒளி மன்னும் சென்னியில் வன்னி, காடுகளில் பூத்த தேன் பொருந்திய கொன்றை மலர், தானே வந்து தங்கிய கங்கை, திங்கள் ஆகியவற்றைச் சூடி, மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமையம்மை கண்டு மகிழ மாலைக் காலத்தில் நடனம் புரிபவராவர்.
788 |
நீந்தலாகா வெள்ளமூழ்கு ஏய்ந்தகோணற் பிறையோடரவு போந்தமென்சொ லின்பம்பயந்த காந்தள்விம்மு கானூர்மேய |
1.073.2 |
காந்தள் செடிகள் தழைத்து வளர்ந்து பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர், தடுக்க முடியாதபடி பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு, பாம்பு, கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர் ஆவார்.
789 |
சிறையார்வண்டுந் தேனும்விம்மு மறையார்பாட லாடலோடு இறையார்வந்தெ னில்புகுந்தென் கறையார்சோலைக் கானூர்மேய |
1.073.3 |
கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர், சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப்பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இது முறையோ?.
790 |
விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை தண்ணாரக்கோ டாமைபூண்டு எண்ணாவந்தெ னில்புகுந்தங் கண்ணார்சோலைக் கானூர்மேய |
1.073.4 |
இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறை மதியைக் கண்ணியாகச்சூடி, வெண்ணிறமான மாலையை அணிந்து, குளிர்ந்த என்புமாலை, ஆமையோடு ஆகியவற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க, என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து, எனக்கு மிக்க விரக வேதனையைத் தந்து சென்றார். இது முறையோ?
791 |
தார்கொள்கொன்றைக்
கண்ணியோடுந் சீர்கொள்பாட லாடலோடு ஊர்கள்தோறு மையமேற்றென் கார்கொள்சோலைக் கானூர்மேய |
1.073.5 |
கருநிறம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர், கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை அணிந்தவராய்க் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி, சிறப்புமிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்குரியவராய் வந்து ஊர்கள்தோறும் திரிந்து, பலியேற்று, என் மனத்தகத்தே கொடிய விரக வேதனையைத் தந்து சென்றார்.
792 |
முளிவெள்ளெலும்பு நீறுநூலு எளிவந்தார்போ லையமென்றெ தௌவுநாணுங் கொண்டகள்வர் களிவண்டியாழ்செய் கானூர்மேய |
1.073.6 |
தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும் திருக்கானூரில் மேவிய ஒளிபொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய இறைவர், காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும் முப்புரி நூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வந்தவர் போல வந்து, 'ஐயம் இடுக' என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தௌவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.
793 |
மூவாவண்ணர் முளைவெண்பிறையர் பூவார்கொன்றை புனைந்துவந்தார் போவார்போல மால்செய்துள்ளம் தேவார்சோலைக் கானூர்மேய |
1.073.7 |
தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவதேவராகிய சிவபிரானார், மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர். அவர் கொன்றை மாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும் புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்து, பொய் கலந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்து போவாரைப்போல் காட்டி என்னை மயக்கி என் உள்ளத்தில் புக்கொளித்த புரிநூலர் ஆவார்.
794 |
தமிழினீர்மை பேசித்தாளம் முழவமொந்தை மல்குபாடல் குமிழின்மேனி தந்தகோல கமழுஞ்சோலைக் கானூர்மேய |
1.073.8 |
மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர், தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது இல்லத்தை அடைந்து, அதனை விட்டுப் பெயராதவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.
795 |
அந்தமாதி யயனுமாலு சிந்தையுள்ளு நாவின்மேலுஞ் வந்தென்னுள்ளம் புகுந்துமாலை கந்தமல்கு கானூர்மேய |
1.073.9 |
மணம் நிறைந்த திருக்கானூரில் எழுந்தருளிய எந்தையாராகிய பெருமானார், அந்தத்தைச் செய்பவரும், யாவர்க்கும் ஆதியாய் இருப்பவரும் ஆவார். அயன், மால் முதலிய அனைவராலும் அறிதற்கரியவர். என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலைபெற்றிருப்பவர். அத்தகையோர் யான் காண வெளிப்பட்டு வந்து என் உள்ளம் புகுந்து மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்தருளுகின்றார்.
796 |
ஆமையரவோ டேனவெண்கொம் டாமோர்கள்வர் வெள்ளர்போல ஓமவேத நான்முகனுங் சேமமாய செல்வர்கானூர் |
1.073.10 |
வேள்விகள் இயற்றும் முறைகளைக் கூறும் வேதங்களை ஓதும் நான்முகனும், வளைந்த பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும் தங்கள் பாதுகாப்புக்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமானார், ஆமை, அரவு, பன்றியின் வெண்மையான கொம்பு என்புமாலை ஆகியவற்றைப் பூண்ட ஓர்கள்வராய் வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லவர் போல வந்து எனக்கு மன வேதனையைத் தந்தார்.
797 |
கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் பழுதின்ஞான சம்பந்தன்சொற் தொழுதுபொழுது தோத்திரங்கள் றழுதுநக்கு மன்புசெய்வார் |
1.073.11 |
பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர் மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கானூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கானூர்மேய, பொருந்திய, கொன்றை, சோலைகள், திருக்கானூரில், சூழ்ந்த, இறைவர், புகுந்து, சென்றார், கானூரில், வேதனையைத், வெண்மையான, கானூர், நோய்செய்தார், எனக்கு, இல்லம், வார்த்தைகளைப், சொல்லித், உள்ளம், பெருமானார், ஆகியவற்றைப், புரிநூலர், என்புமாலை, திருமுறை, திருச்சிற்றம்பலம், லாடலோடு, வளைந்த, கவர்ந்து, திருக்கானூர், குளிர்ந்த, சிவபிரானார், விண்ணோர், முறையோ, திருநீறும்