முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.067.திருப்பழனம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.067.திருப்பழனம்
1.067.திருப்பழனம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
722 |
வேதமோதி வெண்ணூல்பூண்டு பூதஞ்சூழப் பொலியவருவார் நாதாவெனவு நக்காவெனவு பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் |
1.067.1 |
நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவு பெற வருவார்.
723 |
கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையு புண்ணாறுதிர மெதிராறோடப் எண்ணாதுதைத்த வெந்தைபெருமா பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் |
1.067.2 |
மது உண்ட வண்டுகள் பண்பாடி ஒலி செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பழன நகரில் இமவான் மகளாகிய பார்வதி தேவியோடு எழுந்தருளிய இறைவர் இயல்பாக உள்ள இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் ஒரு கண்ணையும், சடைமுடிமேல் பிறையையும் உடையவர். காலனை உதைத்து, அவன் உடலில் தோன்றிய புண்களிலிருந்து குருதி வெள்ளம் ஆறாக ஓடுமாறு, அவனை ஒரு பொருளாக மதியாது புறந்தாளால் அவன் அழிய உதைத்த எந்தை பெருமானார் ஆவார்.
724 |
பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் உறையுமயான மிடமாவுடையா அறையுமலர்கொண் டடியார்பரவி பறையுஞ்சங்கும் பலியுமோவாப் |
1.067.3 |
அடியவர்கள் உயர்ந்தனவாகப் போற்றப்படும் நறுமலர்களைக் கொண்டுவந்து சாத்தி, பரவி, ஆடல் பாடல்களைச் செய்தும் பறை, சங்கு ஆகியவற்றை முழக்கியும், பணிந்தும் இடைவிடாது வழிபடும் திருப்பழனநகர் இறைவர் சடைமேல் பிறையையும், கங்கையையும் உடையவர். பறை வாய் போன்ற வட்டமான, விழிகளையுடைய பேய்கள்வாழும் மயானத்தைத் தமக்கு இடமாகக்கொண்டவர். அனைத்துலக மக்கட்கும் தலைவர்.
725 |
உரமன்னுயர்கோட் டுலறுகூகை இரவிற்பூதம் பாடவாடி பிரமன்றலையி னறவமேற்ற பரமன்பகவன் பரமேச்சுவரன் |
1.067.4 |
திருப்பழன நகர் இறைவர் வலிமை பொருந்திய உயரமான மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகைகள் அலறும் மயானத்தே நள்ளிருளில் பூதங்கள் பாட ஆடியும் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமானார் எம்மை ஆளும் பரமர் ஆவார். அவர் பகவன், பரமேச்சுவரன் என்பனவாகிய பெயர்களை உடையவர்.
726 |
குலவெஞ்சிலையான் மதின்மூன்றெரித்த கலவமயிலுங் குயிலும்பயிலுங் நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் பலவின்கனிக டிரைமுன்சேர்க்கும் |
1.067.5 |
தோகைகளையுடைய மயில்கள், குயில்கள் வாழ்வதும், கடல்போல் பரந்து விரிந்த காவிரி ஆற்றின் அலைகள் மாங்கனிகளையும், பலாவின் கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையிற் சேர்ப்பதுமாகிய திருப்பழன நகர் இறைவர், உயர்ந்த கொடிய மலை வில்லால் அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர். பகைவரைக் கொல்லும் ஆனேற்றையுடைய அண்ணல் ஆவார்.
727 |
வீளைக்குரலும் விளிச்சங்கொலியும் மூளைத்தலைகொண் டடியாரேத்தப் ஈளைப்படுகி லிலையார்தெங்கிற் பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் |
1.067.6 |
ஈரத்தன்மையுடைய ஆற்றுப் படுகைகளில் வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும், வாழை மரத்தில் பழுத்த வாழைப் பழங்களும், பாளைகளையுடைய கமுகமரங்களில் பழுத்த பாக்குப் பழங்களும் விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழன நகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும் சங்கொலியும், விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர். அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.
728 |
பொய்யாமொழியார் முறையாலேத்திப் செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் கையாடலினார் புனலான்மல்கு பையாடரவ முடனேவைத்தார் |
1.067.7 |
திருப்பழனநகர் இறைவர் பொய் கூறாத அடியவர்களால் முறைப்படி ஏத்திப் புகழப் பெறுவர். சிவந்த திருமேனி உடையவர். கரிய கண்டம் உடையவர். முப்புரிநூல் அணிந்த மார்பினை உடையவர். கைகளை வீசி ஆடல் புரிபவர். கங்கை சூடிய சடை முடி மீது பிறையையும், படப்பாம்பையும் ஒருசேர வைத்தவர்.
729 |
மஞ்சோங்குயர முடையான்மலையை அஞ்சோடஞ்சு மாறுநான்கு நஞ்சார்சுடலைப் பொடிநீணிந்த பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த |
1.067.8 |
மணம்கமழும் புதிய தாமரை மலர்களையுடைய. வயல்களால் சூழப்பட்ட திருப்பழன நகர் இறைவர், வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு உயர்ந்த தோற்றம் உடைய இராவணன் தனக்கு எதிராகக் கயிலை மலையைப் பெயர்க்க அவனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். நச்சுத் தன்மை பொருந்திய சுடலையில் எரிந்த சாம்பலை அணிந்த பெருமானாகிய சிவனார் ஆவார்.
730 |
கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை முடியாப்படிமூ வடியாலுலக நெடியானீடா மரைமேலயனு படியார்பொடியா டகலமுடையார் |
1.067.9 |
திருப்பழன நகர் இறைவர் மணங்கமழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை மாலை கமழ்கின்ற சிவந்த சடைமுடியையுடையவர். விண்ணளாவிய திருமுடியோடு இவ்வுலகம் முழுவதையும் மூவடியால் அளந்த நெடியோனாகிய திரு மாலும், நீண்ட தண்டின்மேல் வளர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் தேடிக் காணமுடியாத தன்மையை யுடையவர். திருநீற்றுப் பொடியணிந்த மார்பினையுடையவர்.
731 |
கண்டான்கழுவா முன்னேயோடிக் உண்டாங்கவர்க ளுரைக்குஞ்சிறுசொல் வண்டாமரையின் மலர்மேனறவ பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் |
1.067.10 |
வண்டுகள் வளமையான தாமரை மலர்மேல் விளங்கும் தேனாகிய மதுவை வாயால் மிக உண்டு பண்பொருந்த யாழ்போல் ஒலி செய்யும் கழனிகளையுடைய திருப்பழன நகர் இறைவர், கண்களைக் கூடக் கழுவாமல் முந்திச் சென்று கலவைக் கஞ்சியை உண்பவர்களாகிய சமணர்கள் உரைக்கும் சிறு சொல்லைக் கேளாத அடியவர்கள் பாராட்ட விளங்குபவராவார்.
732 | . வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் நாவுய்த்தனைய திறலான்மிக்க பேசற்கினிய பாடல்பயிலும் வாயிற்பொலிந்த மாலைபத்தும் |
1.067.11 |
மூங்கில் மரங்கள் முத்துக்களோடு ஓங்கி வளர்ந்து மணம் பரப்பும் வேணுபுர நகரில் உள்ள, நாவினால் வல்ல திறன் மிக்க ஞானசம்பந்தன் திருப்பழனப் பெருமான் மீது, பேசற்கினிய பாடல்களாய்த் தன் வாயால் பாடிய இப்பதிகப் பாமாலை பத்தையும், இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பழனம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நகராரே, இறைவர், திருப்பழன, உடையவர், பிறையையும், அடியவர்கள், விளங்கும், பொருந்திய, செய்யும், மலர்மேல், வண்டுகள், திருமேனி, சிவந்த, சென்று, சூழப்பட்ட, பழங்களும், அணிந்த, அழைக்கும், திருமுறை, பேசற்கினிய, பெருமான், வாயால், பாராட்ட, கலவைக், கஞ்சியை, பழுத்த, வளர்ந்த, பெருமானார், எனவும், கொண்டு, வெண்மையான, புறந்தாளால், நகரில், திருப்பழனநகர், பரமேச்சுவரன், உயர்ந்த, முப்புரங்களையும், தலையோட்டில், திருப்பழனம், திருச்சிற்றம்பலம், விழவின்