முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.132.திருவீழிமிழலை
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.132.திருவீழிமிழலை
1.132.திருவீழிமிழலை
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
1416 |
ஏரிசையும் வடவாலின்
கீழிருந்தங் நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் |
1.132.1 |
அழகிய வடவால மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய நால்வேதங்களின் உண்மைப் பொருளை உரைத்து அவர்கட்குச் சிவஞானநெறி காட்டியருளிய சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும் வேதப் புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.
1417 |
பொறியரவ மதுசுற்றிப்
பொருப்பேமத் மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு வெறிகதிர்ச்சா மரையிரட்ட விளவன்னம் |
1.132.2 |
தேவர்கள் அனைவரும் கூடி மந்தரமலையை மத்தாக நாட்டி உடலில் புள்ளிகளை உடைய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில், செறிந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய இருக்கையில் விளங்கும், தாமரை இலையாகிய குடையின்கீழ் உள்ள இள அன்னம், வயலில் விளையும் செந்நெற்கதிர்களாகிய சாமரம் வீச வீற்றிருக்கும் திருவீழிமிழலை யாகும்.
1418 |
எழுந்துலகை நலிந்துழலு
மவுணர்கடம் உழுந்துருளு மளவையினொள் ளெரிகொளவெஞ் கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநகம விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் |
1.132.3 |
வானத்திற் பறந்து திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய கண்ணாடியில், உளுந்து உருளக்கூடிய கால அளவிற்குள் ஒளி பொருந்திய தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை வளைத்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், செழுமையான முத்துக்கள் மகளிரின் பற்களையும், தாமரைகள் முகங்களையும் துள்ளிக்குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும், ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும் காட்டும் திருவீழிமிழலையாகும்.
1419 |
உரைசேரு மெண்பத்து நான்குநூ நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா வரைசேரு முகின்முழவ மயில்கள்பல விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் |
1.132.4 |
நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயில், மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள் பல நடனமாட, வண்டுகள் பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும்.
1420 |
காணுமா றரியபெரு மானாகிக் பேணுமூன் றுருவாகிப் பேருலகம் தாணுவாய் நின்றபர தத்துவனை வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப |
1.132.5 |
காண்டற்கரிய கடவுளாய், மூன்று காலங்களாய், மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப் பெறும் அரி, அயன், அரன் ஆகிய மும்மூர்த்திகளாய், பெரிதாகிய இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் சிவபிரான் உறையும் கோயில், மூங்கில்களிற் கட்டிய நெடிய கொடிகள் நிலை பேறு உடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய, உத்தமனை, வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை அழைப்பனபோல, அசைந்து ஓங்கி விளங்கும் திருவீழிமிழலையாகும். மூன்று உருவுக்கு ஏற்ப அழித்தல் வருவிக்கப்பட்டது.
1421 |
அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட |
1.132.6 |
உள்ளத்தில் பொருந்திய அன்புடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்க மரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.
1422 |
ஆறாடு சடைமுடிய னனலாடு கூறாடு திருவுருவன் கூத்தாடுங் சேறாடு செங்கழுநீர்த் தாதாடி வேறாய வுருவாகிச் செவ்வழிநற் |
1.132.7 |
கங்கையணிந்த சடைமுடியை உடையவனும், மலர் போன்ற கரத்தில் அனலை ஏந்தியவனும், இமவான் மகளாகிய பார்வதிதேவி தன் ஒரு கூறாக விளங்கத் திகழும் திருமேனியை உடையவனும், கூத்தாடும் குணமுடையவனும், ஆகிய சிவபிரான் மனங் குளிர்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில், சேற்றில் முளைத்த செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து தேனையுண்டு, தன் இயல்பான நிறம் மாறிச் சிவந்த நிறம் உடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப் பண்ணைப் பாடிக் களிக்கும் திருவீழிமிழலையாகும்.
1423 |
கருப்பமிகு முடலடர்த்துக்
காலூன்றிக் பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள் தருப்பமிகு சலந்தரன்ற னுடல்தடிந்த விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி |
1.132.8 |
கர்வம் மிகுந்த உடலை வருத்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றிக் கைகளை வளைத்துக் கயிலை என்னும் மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும் தோள்களையும் நெரித்து அடர்த்த கால் விரலையுடைய தூயவராகிய சிவபிரானார் உறையும் கோயில், செருக்கு மிக்க சலந்தரன் என்னும் அவுணனது உடலைத் தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப் பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு செய்ததும், வானிலிருந்து இழிந்த விமானத்தை உடையதுமாகிய திருவீழிமிழலையாகும்.
1424 |
செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் அந்தமடி காணாதே யவரேத்த புந்தியினான் மறைவழியே புற்பரப்பி வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் |
1.132.9 |
சிவந்த இதழ்களையுடைய பெரிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனும், திருமாலும் அன்னமாகியும் பன்றியாகியும் முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட அவர்கட்குக் காட்சி அளித்தோனாகிய சிவபிரான் அமரும் கோயில், தாங்கள் பெற்ற அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய், சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.
1425 |
எண்ணிறந்த வமணர்களு மிழிதொழில்சேர் நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க் பண்ணமரு மென்மொழியார் பாலகரைப் விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ |
1.132.10 |
எண்ணற்ற சமணர்களும், இழிதொழில் புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித் தன் அடியவர்களுக்கு அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள் விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.
1426 |
மின்னியலு மணிமாட மிடைவீழி சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் இன்னிசையாற் பாடவல்லா ரிருநிலத்தி |
1.132.11 |
மின்னல் போலும் ஒளியுடைய மணிகள் இழைத்த மாட வீடுகள் செறிந்த திருவீழிமிழலை இறைவனின் மணம் கமழ்கின்ற திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் இயல்புடைய சிரபுரநகரின் தலைவனும், செழுமறை பயின்ற நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடி இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாடவல்லவர்கள் பெரிதான இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 130 | 131 | 132 | 133 | 134 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீழிமிழலை - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோயில், மிழலையாமே, சிவபிரான், திருவீழிமிழலையாகும், உறையும், திருவீழிமிழலை, விளங்கும், பொருந்திய, கொண்டு, புரியும், மூன்று, என்னும், சிவந்த, உடையவனும், முளைத்த, முதலிய, வழிபாடு, தாங்கள், போற்றும், சென்னிமிசைக், போலும், விழும், திருமாலும், அழித்தல், மோசைகேட்டு, மலராகிய, செறிந்த, வாழும், செய்து, திருச்சிற்றம்பலம், தேவர்கள், மரங்கள், பெறும், திருமுறை, வீற்றிருக்கும்