முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.129.திருக்கழுமலம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.129.திருக்கழுமலம்

1.129.திருக்கழுமலம்
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1383 |
சேவுயருந் திண்கொடியான்
றிருவடியே நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் |
1.129.1 |
விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண் விளங்குவதாகும்.
1384 |
பெருந்தடங்கண்
செந்துவர்வாய்ப் பீடுடைய அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தா தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறு கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் |
1.129.2 |
அகன்ற விழிகளையும், பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளி யுள்ள திருக்கோயில், வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளை உடைய முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களை உடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு கழற்சிக்காய் அம்மானை பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின் கண் உள்ளது.
1385 |
அலங்கன்மலி வானவருந் தானவரு கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய |
1.129.3 |
மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு. கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகர ராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.
1386 |
பாரிதனை நலிந்தமரர்
பயமெய்தச் போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு |
1.129.4 |
மண்ணுலக மக்களை வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.
1387 |
ஊர்கின்ற வரவமொளி விடுதிங்க நீர்நின்ற கங்கை நகு வெண்டலைசேர் ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு |
1.129.5 |
ஊர்ந்து செல்லும் அரவு. ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்த மலர், நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகுவனவுமாய வெண்மையான சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமல நகரில் உள்ளது.
1388 |
தருஞ்சரதந் தந்தருளென்
றடிநினைந்து பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய |
1.129.6 |
மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும்.
1389 |
புவிமுதலைம் பூதமாய்ப்
புலனைந்தாய் அவையவைசேர் பயனுருவா யல்லவுரு தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு கவணெறிகற் போற்சுனையிற் கரைசேரப் |
1.129.7 |
மண், புனல் முதலிய பூதங்கள் ஐந்து. சுவை ஒளி முதலிய புலன்கள் ஐந்து. அவற்றுக்கு இடமாகிய மெய், வாய் முதலிய பொறிகள் ஐந்து. வாக்கு பாதம் முதலிய செய் கருவிகள் ஐந்து. மனம் புத்தி முதலிய உட்கருவிகள் நான்கு ஆகிய ஆன்ம தத்துவங்களாகவும் அவற்றின் பயனாகவும், உருவமாகவும் அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயில், தவம் செய்ய முயல்வோர் இறைவனை அருச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறித்துக் கொண்டு விடுத்த கொம்புகள் நிமிர்ந்து தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள் விண்டு கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல சுனைகளில் வீழ ஆங்குறைந்த பறவைகள் அஞ்சி அகலும் வளமான கழுமல வளநகரில் உள்ளதாகும்.
1390 |
அடல்வந்த வானவரை யழித்துலகு மிடல்வந்த விருபதுதோ ணெரியவிரற் நடவந்த வுழவரிது நடவொணா கடல்வந்த சங்கீன்ற முத்துவயற் |
1.129.8 |
வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால் விரலால் நெரிய ஊன்றி அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலை உடையது, நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்துவந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று குவிக்கும் கழுமலமாகும்.
1391 |
பூமகள்தன் கோனயனும்
புள்ளினொடு டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா பாமருவுங் கலைப்புலவோர் பன்மலர்கள் காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து |
1.129.9 |
திருமகளின் கேள்வனாகிய திருமாலும், நான்முகனும் பன்றி உருவம் எடுத்தும், அன்னப்பறவை வடிவ மெடுத்தும், தேடப் புகுந்து தம்மால் ஆமளவும் சென்று அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க, அழலுருவாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது. பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக் கொண்டு அருச்சித்து முறையோடு விருப்பங்கள் நிறைவேறக்கண்டு களிகூர்ந்து போற்றும் கழுமல நகராகும்.
1392 |
குணமின்றிப் புத்தர்களும்
பொய்த்தவத்தை உணன்மருவுஞ் சமணர்களு முணராத மணமருவும் வதுவையொலி விழவினொலி கணமருவு மறையினொலி கீழ்ப்படுக்க |
1.129.10 |
நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும் கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.
1393 |
கற்றவர்கள் பணிந்தேத்துங்
கழுமலத்து நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார் முற்றுலக மதுவாண்டு முக்கணா |
1.129.11 |
கற்றவர்களாலே பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும் இறைவருடைய திருவடிகளின் மேல், நல்லோர்க்கு நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன் விரும்பிப் போற்றிப் பாடிய, ஓதுவார்களுக்குத் துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள் கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 127 | 128 | 129 | 130 | 131 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கழுமலம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கழுமலமே, சிவபிரான், கோயில், மலர்கள், முதலிய, பொருந்திய, நின்று, உள்ளதாகும், உள்ளது, உறையும், எழுந்தருளிய, அமைந்த, எழுந்தருளியுள்ள, கொண்டு, வளநகரில், னமருங்கோயில், உடையது, மெய்த்தவமாய், நகராகும், புத்தர்களும், களிகூர்ந்து, வகைநின்றா, கோயிலை, பொய்த்தவத்தை, நாற்று, நடவந்த, வாழும், கழுமலத்தின்கண், பெருமை, தேவர்கள், மலரும், கருங்குவளை, திருமுறை, திருச்சிற்றம்பலம், வழிபட்ட, வள்ளன்மையோடு, விளங்கும், புகுந்து, திருக்கழுமலம், உலாவும், மேகங்கள், மலைகள், மகளிர், மகிழும், நகரில்