முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.103.திருக்கழுக்குன்றம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.103.திருக்கழுக்குன்றம்
1.103.திருக்கழுக்குன்றம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதகிரீசுவரர்.
தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
1112 |
தோடுடையானொரு காதிற்றூய ஏடுடையான் றலைகலனாக நாடுடையா னள்ளிருளேம காடுடையான் காதல்செய்கோயில் |
1.103.1 |
ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத், தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண்கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக் குன்றமாகும்.
1113 |
கேணவல்லான் கேழல்வெண்கொம்பு பூணவல்லான் புரிசடைமேலொர் பேணவல்லான் பெண்மகள்தன்னை காணவல்லான் காதல்செய்கோயில் |
1.103.2 |
திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணிய வல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூண வல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.
1114 |
தேனகத்தார் வண்டதுவுண்ட தானகத்தார் தண்மதிசூடித் வானகத்தார் வையகத்தார்கள் கானகத்தான் காதல்செய்கோயில் |
1.103.3 |
தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி, வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.
1115 |
துணையல்செய்தான் றூயவண்டியாழ்செய் பிணையல்செய்தான் பெண்ணினல்லாளை இணையல்செய்யா விலங்கெயின்மூன்று கணையல்செய்தான் காதல்செய்கோயில் |
1.103.4 |
வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில், கழுக்குன்றம் ஆகும்.
1116 |
பையுடைய பாம்பொடுநீறு மெய்யுடையான் வெண்பிறைசூடி மையுடைய மாமிடற்றண்ணன் கையுடையான் காதல்செய்கோயில் |
1.103.5 |
நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும், விடம் பொருந்திய மிடற்றினை உடைய தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
1117 |
வெள்ளமெல்லாம்
விரிசடைமேலோர் கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் |
1.103.6 |
விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும், தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத் தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
1118 |
ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை நோதல்செய்தா னொடிவரையின்கண் பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ காதல்செய்தான் காதல்செய்கோயில் |
1.103.8 |
அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும், பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
1119 |
இடந்தபெம்மா னேனமதாயு தொடர்ந்தபெம்மான் றூமதிசூடி மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் கடந்தபெம்மான் காதல்செய்கோயில் |
1.103.9 |
அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
1120 |
தேயநின்றான் றிரிபுரங்கங்கை பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த சாயநின்றான் வன்சமண்குண்டர் காயநின்றான் காதல்செய்கோயில் |
1.103.10 |
முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகி வந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும்.
1121 |
கண்ணுதலான் காதல்செய்கோயில் நண்ணியசீர் ஞானசம்பந்தன் பண்ணியல்பாற் பாடியபத்து புண்ணியராய் விண்ணவரோடும் |
1.103.11 |
நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கழுக்குன்றம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காதல்செய்கோயில், கோயில், கழுக்குன்றே, செய்யும், சிவபிரான், கழுக்குன்றம், விரும்பி, கொன்றை, திருக்கழுக்குன்றம், விரிந்த, உறையும், நின்றவனும், விரிகொன்றை, ஞானசம்பந்தன், அழியுமாறு, அணிந்த, பொருந்திய, செய்தவனும், காலனைக், பெருகி, நல்லவளான, கொண்டு, அத்தகையோன், காதில், திருச்சிற்றம்பலம், திருமுறை, யொருபாகம், அகழ்ந்து, தொழுதேத்தும், பாகமாகக், பெண்ணின், வல்லவன், வண்டுகள்