முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.100.திருப்பரங்குன்றம்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.100.திருப்பரங்குன்றம்
1.100.திருப்பரங்குன்றம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரங்கிரிநாதர்.
தேவியார் - ஆவுடைநாயகியம்மை.
1080 |
நீடலர்சோதி வெண்பிறையோடு சூடலனந்திச் சுடரெரியேந்திச் ஆடலனஞ்சொ லணியிழையாளை பாடலன்மேய நன்னகர்போலும் |
1.100.1 |
நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண்பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று.
1081 |
அங்கமொராறும் மருமறைநான்கும் பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் பங்கினன்மேய நன்னகர்போலும் |
1.100.2 |
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும் சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச் சிவபிரான் விளங்கும் நன்னகர் திருப்பரங்குன்றம்.
1082 |
நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மே சீரிடங்கொண்ட வெம்மிறைபோலுஞ் ஓருடம்புள்ளே யுமையொருபாக பாரிடம்பாட வினிதுறைகோயில் |
1.100.3 |
கங்கை சூடிய நிமிர்ந்த சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக்கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம்.
1083 |
வளர்பூங்கோங்க மாதவியோடு குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் தளிர்போன்மேனித் தையனல்லாளோ நளிர்பூங்கொன்றை சூடினன்மேய |
1.100.4 |
வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும்.
1084 |
பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் துன்னியசோதி யாகியவீசன் பன்னியபாட லாடலன்மேய உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை |
1.100.5 |
பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங்கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடுபொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடி ஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை.
1085 |
கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் தொடைநவில்கின்ற வில்லினனந்திச் புடைநவில்பூதம் பாடநின்றாடும் படைநவில்வான்ற னன்னகர்போலும் |
1.100.6 |
வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழ்குமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம்.
1086 |
அயிலுடைவேலோ ரனல்புல்குகையி எயில்படவெய்த வெம்மிறைமேய மயில்பெடைபுல்கி மாநடமாடும் பயில்பெடைவண்டு பாடலறாத |
1.100.7 |
கூரிய வேற்படையை உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால் மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன் மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் இடையறாது இசை பாடும் சிறப்புடைய திருப்பரங்குன்றாகும்.
1087 |
மைத்தகுமேனி வாளரக்கன்றன் பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் |
1.100.8 |
மை எனத்தக்க கரிய மேனியனாகிய வாட் போரில் வல்ல இராவணனின் மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள பெருமானின்சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல் நில்லா.
1088 |
முந்தியிவ்வையந் தாவியமாலு உந்தியில்வந்திங் கருமறையீந்த சிந்தையினாலுந் தெரிவரிதாகித் பந்தியலங்கை மங்கையொர்பங்கன் |
1.100.9 |
மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத்திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகிய கையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று.
1089 |
குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு பண்டானீழன் மேவியவீசன் தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல் |
1.100.10 |
பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன்மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மர நிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.
1090 |
தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான படமலிநாக மரைக்கசைத்தான்றன் தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் விடமலிகண்ட னருள்பெறுந்தன்மை |
1.100.11 |
பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப் பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பரங்குன்றம் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்பரங்குன்றம், பரங்குன்றே, கொன்றை, சிவபிரான், முதலிய, எழுந்தருளிய, பரங்குன்றைத், தொல்வினை, நம்மேல், பாகமாகக், விளங்கும், வண்டுகள், பூதகணங்கள், இறைவன், எவையும், ஓரடியால், திரியும், நில்லாவே, பொருந்திய, திருப்பரங்குன்றை, அணிந்துள்ள, சிவபிரானது, ஆகியவற்றை, நன்னகர்போலும், வரிசையாகத், சுடுகானில், வெண்பிறையோடு, திருமுறை, திருச்சிற்றம்பலம், தொடுத்த, மாலையைச், செய்து, பாம்பு, கொண்டு, உமையம்மையை, சுடுகாட்டில், பேசும், நன்னகர்