வடமலை நிகண்டு
வடமலை நிகண்டு, 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் ஈசுர பாரதியார் ஆவார். இறையூர் வடமலை நிகண்டு, பல்பொருட் சூடாமணி என்ற பெயர்களைப் பெற்றிருந்த இது, மூன்று பகுதிகளாக இருந்தது. இருப்பினும், இரண்டாவது பகுதியே தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ. வே. சாமிநாத அய்யர் என்பவரால் ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக,. இரா. நாகசாமி அவர்கள் அதனைப் பதிப்பித்தார்.
இதில் 10 வருக்கத் தொகுதிகளும், அதில் 93 வருக்கங்களும் உள்ளன. அவ்வருக்கங்களில் மொத்தம் 1452 சூத்திரங்களும் அடங்கியுள்ளன.
நகர ஒகர வருக்கம்
நொச்சி யெனும்பெயர் சிந்து வாரமும் சிற்றூரு மதிலும் எயில் காத்தலுமாம். | 1001 |
நொடியெனும் பெயர்கை நொடியும் வார்த்தையும். | 1002 |
நொறிலெனும் பெயரே நுடக்கமும் விரைவும் ஒடுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. | 1003 |
நகர ஒகர வருக்கம் முற்றும்.
நகர ஓகார வருக்கம்
நோனாமை யென்னும் பெயர்பொ றாமையும் தவம்பண்ணா மையுஞ் சாற்றுவர் புலவர். | 1004 |
நோக்கெனும் பெயரே யழகும் விழியுமாம். | 1005 |
நோற்ற லெனும்பெயர் பொறையும் தவமுமாம். | 1006 |
நோனா ரெனும்பெயர் தவமில் லோருடன் பகைஞர்தம் பெயரும் பகர்ந்தனர் புலவர். | 1007 |
நகர ஓகார வருக்கம்.
நகர ஒளகார வருக்கம்
நெளவிய மெனும்பெயர் மரக்கலப் பெயரும் மானு மெனவே வழங்கப் பெறுமே. | 1008 |
நகர ஒளகார வருக்கம் முற்றும்.
நகர வருக்கத் தொகுதி முற்றும்.
7 வது பகர வருக்கத் தொகுதி
பகர அகர வருக்கம்
பகுதி யெனும்பெயர் பரிவே டத்துடன் வட்ட வடிவு மிரவியு நேமியும். | 1009 |
பகலெனும் பெயர்பகற் போதும் பிரிவும் நடுவும் பரணி நாளும் இயம்புவர். | 1010 |
பச்சை யெனும்பெயர் பசுமையும் புதனும் தோலும் இலாபமு மரகத மணியுமாம். | 1011 |
பங்கெனும் பெயரே பகுத்தலும் சனியும் முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர். | 1012 |
பக்க மெனும்பெய ரருகு மிறகுந் திதியு மண்மையுஞ் செப்பப் பெறுமே. | 1013 |
பதமெனும் பெயரே பாதமும் சோறும் வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும் உணவு மீரமுஞ் செல்வியுஞ் சேமமும் பொழுது மெனவே புகன்றனர் புலவர். | 1014 |
பணியெனும் பெயரே பணமுடைப் பாம்பும் தொழிலுந் தொழில்படு கலனுஞ் சொல்லுவர். | 1015 |
பயமெனும் பெயரே பாலும் சலிலமு மச்சமும முதுமி லாபமு மாமே. | 1016 |
பரவை யெனும்பெயர் பரப்புங் கடலுமாம். | 1017 |
பயோதர மெனும்பெயர் மேகமு முலையுமாம். | 1018 |
பனியெனும் பெயரே துன்பமு நடுக்கமும் அச்சமுங் குளிர்ச்சியு மிமமு மாமே. | 1019 |
பகவ னெனும்பெயர் பரமனு மாலும் பிரமனும் அருகனும் குருவும் புத்தனும். | 1020 |
பண்ணவ னெனும்பெயர் முனியும் தேவனும் குருவுந் திறலோன் பெயருங் கூறுவர். | 1021 |
பசுவெனும் பெயர்வெண் பெற்றமு முயிருமாம். | 1022 |
படியெனும் பெயரே பகையும் குணமும் புவனமு முலகமும் புகலப் பெறுமே. | 1023 |
படப்பை யெனும்பெயர் நாடு நகரமும் தோட்டமும் பசுநிரைப் பெயருஞ் சொல்லுவர். | 1024 |
பட்டெனும் பெயரே பட்டின் விகற்பமும் சிற்றூர்ப் பெயரும் துகிலுஞ் செப்புவர். | 1025 |
பள்ளி யெனும்பெயர் தவத்தோ ரிடமும் துயிறலும் பாயலுஞ் சிற்றூர்ப் பெயரும் கோயிலின் பெயருங் கூறப் பெறுமே. | 1026 |
பட்ட மெனும்பெயர் மேம்படு பதவியும் வழியுங் கவரி மாவுந் துகிலும் வாயிலு மதகரி முகப டாமும் விலங்கு துயிலிடமும் படமும் விளம்புவர். | 1027 |
பதுக்கை யெனும்பெயர் பாறையு மேடும் சிறுதூ றுமெனச் செப்புவர் புலவர். | 1028 |
பதலை யெனும்பெயர் மலையுந் தாழியும் ஒருகட் பரந்த வாய்ப்பறையு மோதுவர். | 1029 |
பணையெனும் பெயரே பருத்தலு ழூங்கிலும் மருத நிலமும் வயலு முரசமும் குதிரையின் பந்தியு மரத்தின் கொம்புமாம். | 1030 |
பண்ணை யெனும்பெயர் வயலும் வாவியும் சபையு மகளிர் விளையா டிடமும் விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். | 1031 |
படுவெனும் பெயரே மரத்தின் குலையும் மதுவும் நன்மையும் வாவியு மாமே. | 1032 |
பயம்பெனும் பெயரே பகடுபடு குழியும் நீர்நிலைப் பெயரு நிகழ்த்தினர் புலவர். | 1033 |
பங்க மெனும்பெயர் சேறும் துகிலும் பின்னமுந் தீவினைப் பெயரும் பேசுவர். | 1034 |
பரிசு மென்பெயர் கணைப்படைக் கலமும் புரிசை யுள்ளுயர்ந்த நிலமும் அகழியும் மேடையு மெனவே விளம்புவர் புலவர். | 1035 |
பணவை யெனும்பெயர் பரணுங் கழுதுமாம். | 1036 |
படையெனும் பெயரே பரிமாக் கலனையும் ஆயுதப் பொதுவு மடர்கொடுஞ் சேனையும் கண்படை யுடனே கலப்பையுங் கருதுவர். | 1037 |
பலமெனும் பெயரே பழமும் கிழங்கும் சேனையும் லாபமும் நிறையும் செப்புவர். | 1038 |
பங்கி யெனும்பெயர் ஆண்பான் மயிரும் அஃறிணைப் பொதுவின் பெயரு மாமே. | 1039 |
பண்ட மெனும்பெயர் பண்ணி காரத்துடன் விண்டொளிர் பொன்னும் விளம்பப் பெறுமே. | 1040 |
படலிகை யென்னும் பெயர்பெரும் பீர்க்கும் கைமணி வட்டமும் பூத்தட்டின் பெயருமாம். | 1041 |
படங்கென் பெயர்பெருங் கொடியு மேற்கட்டியும். | 1042 |
படலை யெனும்பெயர் வாசிக் கோவையும் படர்தலுந் தொடையலும் பரந்தவாய்ப் பறையுமாம் | .1043 |
பண்ணெனும் பெயரே பரிமாக் கலனையும் பாட்டின் பண்ணும் பகரப் பெறுமே. | 1044 |
பறையென் பெயர்புள்ளி னிறகும் பணையும் வசனமு மெனவே வழங்கப் பெறுமே. | 1045 |
பகழி யெனும்பெயர் பகழிக் குதையும் கணையு மெனவே கருதப் பெறுமே. | 1046 |
பரமெனும் பெயரே பரிமாக் கலனையும் மெய்யு மெய்புகு கருவியும் பாரமும் முன்பு மேலு மொழிந்தனர் புலவர். | 1047 |
பழங்கணெ னும்பெய ரோசையும் துன்பமும். | 1048 |
படிறெனும் பெயரே பொய்யொடு களவுமாம். | 1049 |
பந்த மெனும்பெயர் சீரின் தொடர்ச்சியும் அழகும் திரட்சியும் கிளையொடு கட்டுமாம். | 1050 |
பத்திர மெனும்பெய ரழகும் நன்மையும் சுரிகையும் சிங்கா சனமும் புள்ளிறகும் இலையு மெனவே இயம்பப் பெறுமே. | 1051 |
பலியெனும் பெயரே தேவ பூசையும் பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர். | 1052 |
பரியெனும் பெயரே பாது காத்தலும் பருத்தியுஞ் சுமத்தலுங் குதிரையும் பெருமையும். | 1053 |
பகடெனும் பெயரே பெருமையு மெருதும் எருமை யாண்பெயருந் தோணியுங் களிறுமாம். | 1054 |
பதங்க மெனும்பெயர் விட்டிற் பறவையும் புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. | 1055 |
பயலெனும் பெயர்ச்சிற் றாளும் பள்ளமும் பந்தியு மெனவே பகருவர் புலவர். | 1056 |
பணில மெனும்பெயர் சலஞ்சலப் பெயரும் சங்கின் பெயருஞ் சாற்றுவர் புலவர். | 1057 |
பப்பெனும் பெயரே பரப்பும் உவமையும். | 1058 |
பந்தெனும் பெயர்கந் துகமும் கட்டும் நீர்தூவுஞ் சிறுது ருத்தியும் நிகழ்த்துவர். | 1059 |
பவன மெனும்பெயர் பாருங் காற்றும் இராசியும் கோயிலு நாடு மில்லமுமாம். | 1060 |
படமெனும் பெயரே பாம்பின் பணமும் சித்திரப் படமும் சிலையும் கொடியுமாம். | 1061 |
பறம்பெனும் பெயரே மலையு முலையுமாம். | 1062 |
பரத ரெனும்பெயர் தனவைசியர் பேரும் நெய்தனில மாக்களு நிகழ்த்தப் பெறுமே. | 1063 |
பவமெனும் பெயரே பாவமும் பிறப்புமாம். | 1064 |
பண்ணல் எனும்பெயர் சொல்லு நெருக்கமும் பருத்தியின் பெயரும் பகரப் பெறுமே. | 1065 |
பயிரெனும் பெயரே யொலியும் பைங்கூழும் விதந்து கட்டிய வழக்கும் புட்குரலும் விலங்கின் குரலும் விளம்புவர் புலவர். | 1066 |
படரெனும் பெயரே பரியும் நோயும் வீரரு நினைத்தலு நடையும் விளம்புவர். | 1067 |
பவித்திர மெனும்பெயர் தருப்பையுஞ் சுசியுமாம். | 1068 |
படிவ மெனும்பெயர் வடிவமு நோன்புமாம். | 1069 |
படுத்த லெனும்பெய ரொலியு முண்டாதலும் பூத்தலு மின்மைப் பெயரும் புகலுவர். | 1070 |
பதியெனும் பெயரே கணவனும் நாகமும் தலைவனு மெனவே சாற்றப் பெறுமே. | 1071 |
பத்தி யென்பெயர் வழிபாடு மொழுங்கும் அடைப்பது முறைமையு மாமென வியம்புவர். | 1072 |
பரித்தல் எனும்பெயர் அறுத்தலும் வெட்டலும் இரங்கலு மன்பும் இசைக்கப் பெறுமே. | 1073 |
பஞ்ச மெனும்பெயர் ஐந்துஞ் சிறுமையும். | 1074 |
பனுவ லெனும்பெயர் செய்யுளும் நூலுமாம். | 1075 |
பராக மென்பெயர் மலர்த்தாதுவு மிரேணுவும். | 1076 |
பல்ல மெனும்பெயர் பாணமும் கரடியும் கணக்கிலோர் குணிப்பும் கருதப் பெறுமே. | 1077 |
பத்திரி யெனும்பெயர் பறவையும் பரியுமாம். | 1078 |
பட்டிகை யெனும்பெயர் பணையு மீரமும் கச்சு மெனவே கருதப் பெறுமே. | 1079 |
பரிவெனும் பெயரே யின்பமுந் துன்பமும் அன்பு மிதன்பெய ராமென வியம்புவர். | 1080 |
பற்ப மெனும்பெயர் பதுமமுந் தூளுமாம். | 1081 |
பரணி யெனும்பெயர் தரும னாளும் அழுந்திடு கலனு மதகரிப் பெயருமாம். | 1082 |
பனையெனும் பெயரே போந்தையின் தருவும் அநுடநாட் பெயரு மாகு மென்ப. | 1083 |
பணமெனும் பெயரே பாம்பின் படமும் அரவுஞ் செம்பொற் காசு மாமே. | 1084 |
பகர அகர வருக்கம் முற்றும்.
பகர ஆகார வருக்கம்
பாரதி யெனும்பெயர் பனுவ லாட்டியும் தோணியு மெனவே சொல்லப் பெறுமே. | 1085 |
பாண்டி லெனும்பெய ரிடப ராசியும் சகடமு மூங்கிலுந் தாங்குறு சிவிகையும் காளையுங் கட்டிலும் விளக்கின் றகளியும் வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. | 1086 |
பரணி யெனும்பெயர் பதியொடு சேர்ந்த சோலையு நாடுங் காடு நீரும் பாடற் பல்லியமும் பாட்டுமோ ரிசையும் கையும் பொழுது நீட்டித்தலுங் கருதுவர். | 1087 |
பாரா வார மெனும்பெயர் கடலும் கடற்கரைப் பெயருங் கருதப் பெறுமே. | 1088 |
பாசெனும் பெயரே பசுமையு மூங்கிலும். | 1089 |
பாரெனும் பெயரே தேரின் பரப்பும் உரோகிணிப் பெயரும் புவனியு முரைப்பர். | 1090 |
பாம்பெனும் பெயரே பன்னக விகற்பமும் வரம்பின் பெயரும் வழங்கப் பெறுமே. | 1091 |
பாரி யெனும்பெயர் பாரின் பெயருங் கட்டிலின் பெயருநல் லாடையு முந்நீரும் மனைவி பெயருமோர் வள்ளலு மாமே. | 1092 |
பாடி யெனும்பெயர் ஊரு நாடும் நகர மும்படை வீடு நவிலுவர். | 1093 |
பானல் எனும்பெயர் கருநிறக் குவளையும் மருத நிலமும் வயலும் வழங்கும். | 1094 |
பாத்தி யெனும்பெயர் பகுத்தலும் வீடும் சிறுசெய்யு மென்னச் செப்புவர் புலவர். | 1095 |
பாழி யெனும்பெயர் தவத்தோர் சாலையும் நகரமும் பெலமும் நண்ணல ரூரும் படுக்கையும் பாயலும் பாழ்படு பொருளும் மலைமுழை விலங்கு துயிலிடமு மாமே. | 1096 |
பாலெனும் பெயரே பகுத்தலும் பக்கமும் கீரமும் இயல்பும் இடமுங் கிளத்துவர். | 1097 |
பாசன மெனும்பெயர் பாண்டமுஞ் சுற்றமும் உண்கலப் பெயரும் உரைக்கப் பெறுமே. | 1098 |
பாடெனும் பெயரே பக்கமும் படுதலும் பெருமையுஞ் சத்த வொலியும் பேசுவர். | 1099 |
பாலிகை யெனும்பெயர் பட்டவாள் முட்டும் அதரமும் வட்டப் பெயரு மாமே. | 1100 |
பாகெனும் பெயரே பாக்கின் பெயரும் பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும் சருக்கரைப் பெயருஞ் சாற்றப் பெறுமே. | 1101 |
பாளித மெனும் பெயர் கண்ட சர்க்கரையும் குழம்பும் பட்டா டையுமே கூறுவர். | 1102 |
பாணமெனும் பெயர் பட்டின் விகற்பமும் அம்பும் பவள வண்ணக் குறிஞ்சியுமாம். | 1103 |
பாக மெனும்பெயர் பாதியும் பிச்சையும் நாவலர் கவிதைப் பாகமும் நவிலுவர். | 1104 |
பாக லெனும்பெயர் பலாவின் தருவும் ழூவகைக் கார வல்லியு மொழிகுவர். | 1105 |
பாதிரி யெனும்பெயர் பாதிரி மரமும் மூங்கிலு மெனவே மொழியப் பெறுமே. | 1106 |
பால மெனுலெனும் பெயர் நெற்றியு மழுவும் நீரிடைப் பரப்புகற் பாலமு நிகழ்த்துவர். | 1107 |
பாவ மெனும்பெயர் பாவகப் பெயருந் தீவினைப் பெயரும் செப்பப் பெறுமே. | 1108 |
பாய்மா வெனும்பெயர் பரியொடு புலியுமாம். | 1109 |
பாக்கெனும் பெயர்செம் பழுக்காய்ப் பெயரும் எதிர்கா லத்தைப் பகரிடைச் சொல்லுமாம். | 1110 |
பாடல மெனும்பெயர் சிவப்பும் பாதிரியும் குதிரையு மெனவே கூறப் பெறுமே. | 1111 |
பாத்தெனும் பெயரே பருத்தூண் பெயரும் அடிசிற் பெயரொடு கஞ்சியு மாமே. | 1112 |
பார மெனும்பெயர் கவசமும் பொறையும் கலனையும் பாரும் நீரின் கரையும் வன்பா ரமுமரக் கலமும் வழங்கும். | 1113 |
பாவெனும் பெயரே பரத்தலும் பனுவலும். | 1114 |
பாலை யெனும்பெயர் பாலை நிலமும் அந்நிலப் பாடலும் பிரிவ துரைத்தலும் பொருண்மேற் பிரிதலும் புணர்ந்துடன் போதலும் புனர்பூ சமுமோர் மரமும் புகலுவர். | 1115 |
பார்த்த லென்னும் பெயர்பரப் புதலும் தோற்றுதற் பெயருஞ் சொல்லப் பெறுமே. | 1116 |
பாவை யெனும்பெயர் சித்திரப் பாவையும் திருமக ளாடலுஞ் செப்புவர் புலவர். | 1117 |
பாயச மெனும்பெயர் பாற்சோற் றினுடனே பாற்குறண் டியென் பெயர்தானும் பகருவர். | 1118 |
பகர ஆகார வருக்கம் முற்றும்.
பகர இகர வருக்கம்
பிள்ளை யெனும்பெயர் வடுகக் கடவுளுங் காரிப் புள்ளுட னிளமரக் கன்றும் மகவின் பெயரும் வகுத்துரைத் தனரே. | 1119 |
பிதா வெனும்பெயர் சிவபெருமான் பெயரும் பிரமன் பெயரும் தாதைதன் பெயரும் பெருநா ரைப்புட் பெயரும் பேசுவர். | 1120 |
பிசித மெனும்பெயர் நீறும் புலாலும் வேம்பின் பெயரும் விளம்புவர் புலவர். | 1121 |
பிச்ச மெனும்பெயர் பீலிக் குடையும் ஆண்பான் மயிரும் வெண்குடையு மாமே. | 1122 |
பிசியெனும் பெயரே பேசுதற் பொருளும் பொய்யுஞ் சோறும் புகலப் பெறுமே. | 1123 |
பிண்டி யெனும்பெயர் நென்மா முதலவும் அசோக மரமும் பிண்ணாக்கு மாமே. | 1124 |
பிரச மெனும்பெயர் தேனீப் பெயரும் தேனின் பெயரு மிறாலுஞ் செப்புவர். | 1125 |
பிறங்க லெனும்பெயர் பெருமையு நிறைவும் மலையு முயரமும் வகுக்கப் பெறுமே. | 1126 |
பிணையெனும் பெயரே விலங்கின் பெண்பாலும் விருப்பமு மானும் விளம்புவர் புலவர். | 1127 |
பிணிமுக மெனும்பெயர் புட்பொதுப் பெயருடன் மயிலு மன்னமும் வகுத்து ரைத்தனரே. | 1128 |
பிங்கல மெனும்பெயர் செங்கன கத்தொடு பொன்னி னிறமும் புகன்றனர் புலவர். | 1129 |
பின்னை யெனும்பெயர் பிற்றைப் பொழுதும் தங்கையுங் கண்ணன் மனைவியுஞ் சாற்றுவர். | 1130 |
பிண்ட மெனும்பெயர் பிச்சையுந் திரட்சியும் தேகமு மென்னச் செப்புவர் புலவர். | 1131 |
பிரம மெனும்பெயர் சிவனு மாயனும் பிரமனும் இரவியு மதியுங் கனலும் மந்திரமும் வேதமும் முத்தித் தருமமும் வேள்வியு முனிவரும் விளம்பப் பெறுமே. | 1132 |
பிப்பில மெனும்பெயர் திப்பிலி அரசுமாம். | 1133 |
பிலவங்க மென்பெயர் தேரையுங் குரங்குமாம். | 1134 |
பிதிரெனும் பெயரே தென்புலத் தெய்வமும் நொடித்தலும் திவலையுங் கிளியின் விகற்பமும் கதையு மெனவே கருதப் பெறுமே. | 1135 |
பித்திகை யெனும்பெயர் கவர்த்த லத்துடனே கொத்தவிழ் கருமுகைப் பெயருங் கூறுவர். | 1136 |
பிறழ்த லெனும்பெயர் பெயர்தலும் ஒளிர்தலும். | 1137 |
பிசின மெனும்பெயர் பொய்யனுங் கோளனும். | 1138 |
பகர இகர வருக்கம் முற்றும்.
பகர ஐகார வருக்கம்
பையெனும் பெயரே பசுமை நிறமும் பாம்பின் படமும் கூறையின் விகற்புமாம். | 1139 |
பையுள் எனும்பெயர் நோயும் சிறுமையும். | 1140 |
பைத்த லெனும்பெயர் பசுத்தலு முனிவுமாம். | 1141 |
பகர ஐகார வருக்கம் முற்றும்.
பகர ஒகர வருக்கம்
பொறியெனும் பெயரே பொடித்தெழு நுண் சிறுகல னோடு மரக்கலம் செல்வம் இலாஞ்சினை திருவும் ஐம்புலனு மோதிரமு மெழுத்துமாம். | 1142 |
பொன்னெனும் பெயரே பொறியுங் கனகமும் அழகும் வியாழமும் திருவுங் குபேரனும் இரும்பு மெனவே யியம்புவர் புலவர். | 1143 |
பொழிலெனும் பெயரே யுலகமுஞ் சோலையும் பெருமையு மெனவே பேசப் பெறுமே. | 1144 |
பொறையெனும் பெயரே பூமியும் பொறுமையும் துறுகல் லுடனே மலையுஞ் சொல்லுவர். | 1145 |
பொங்க ரெனும்பெயர் மரத்தின் கோடும் பொருப்பும் இலவ மரமும் புகலுவர். | 1146 |
பொருட்டெனும் பெயரே பொருப்பு மொக்குளும் பங்கயப் பொன்னிறக் கொட்டையும் பகருவர். | 1147 |
பொருந ரெனும்பெயர் பொருபடை வீரரும் கொற்றவர் பெயரும் கூத்தர்தம் பெயரும் திண்ணியோர் பெயரும் செப்பப் பெறுமே. | 1148 |
பொகிலெனும் பெயரே புட்பொதுப் பெயரும் கொப்புளு முகையுங் கூறப் பெறுமே. | 1149 |
பொம்ம லெனும்பெயர் பொலிவுஞ் சோறுமாம். | 1150 |
பொங்க லெனும்பெயர் மிகுதியுங் கொதித்தலும். | 1151 |
பொய்த்த லெனும்பெயர் மகளிர் விளையாடலும் பொய்த்திடு சொல்லும் புகலப் பெறுமே. | 1152 |
பொத்தக மெனும்பெயர் சித்திரப் படாமும் திருமுறைப் பெயருஞ் செப்புவர் புலவர். | 1153 |
பொய்யெனும் பெயரே பொந்தும் பொய்மையும். | 1154 |
பொச்சாப் பெனும்பெயர் மறவி பொல்லாங்குமாம் | .1155 |
பகர ஒகர வருக்கம் முற்றும்.
பகர ஓகார வருக்கம்
போகி யெனும்பெயர் புரந்தரன் பெயரும் பாம்பின் பெயரும் பகரப் பெறுமே. | 1156 |
போரெனும் பெயரே நென்முதற் சும்மையும் சதைய நாளொடு சமரு மாமே. | 1157 |
போக்கெனும் பெயரே யினமரக் கன்றும் வழியுங் குற்றமும் போதலும் பொய்யுமாம். | 1158 |
போதக மெனும்பெய ரப்ப வருக்கமும் மதகரிக் கன்றொடு மரத்தின் கன்றும் இளமையும் ஞானமு மியம்பப் பெறுமே. | 1159 |
போக மெனும்பெயர் போக விகற்பமும் பாம்பின துடம்பும் பகரப் பெறுமே. | 1160 |
போர்வை யெனும்பெயர் தோலின் பெயரும் சாலிகைப் பெயரொடு போர்த்தலுஞ் சாற்றுவர். | 1161 |
போத மெனும்பெயர் ஞானமும் தோணியும். | 1162 |
பகர ஓகார வருக்கம் முற்றும்.
பகர ஒளகார வருக்கம்
பெளவ மெனும்பெயர் கடலும் கணுவும். |
பகர ஒளகார வருக்கம் முற்றும்.
பகர வருக்கத் தொகுதி முற்றும்.
8 வது மகர வருக்கத் தொகுதி
மகர அகர வருக்கம்
மன்ன னெனும்பெய ருத்திரட் டாதியும் மன்னவன் பெயரும் வகுத்தனர் புலவர். | 1164 |
மதியெனும் பெயரே முன்னிலை யசைச்சொலும் உடுபதிப் பெயரு முணர்வு மாதமுமாம். | 1165 |
மரக்கா லெனும்பெயர் மாதவ னாடலும் சோதி நாளு மளவையுஞ் சொல்லுவர். | 1166 |
மயிலை யெனும்பெயர் மலரிரு வாட்சியும் மீன ராசியும் மீன்பொதுப் பெயருமாம். | 1167 |
மடங்க லெனும்பெய ரிடியு மறலியும் முடங்கலு நொயுட னூழியுஞ் சிங்கமும். | 1168 |
மறலி யெனும்பெயர் மறப்பு மழுக்காறும் கூற்றனு மெனவே கூறுவர் புலவர். | 1169 |
மருளெனும் பெயரே மயக்கத்தின் பெயரும் குறிஞ்சி யாழ்த்திறமும் பேயுங் கூறுவர். | 1170 |
மஞ்செனும் பெயரே வலிமையு மிளமையும் மேகமும் பணியும் வேழத்தின் முதுகும் எழிலு மெனவே யியம்பினர் புலவர். | 1171 |
மதனெனும் பெயரே மாட்சிமைப் பெயரும் அனங்கனும் பெலமு மழகு மாமே. | 1172 |
மண்டலி யெனும்பெயர் நாயும் பூஞையும் மண்டலி யரவும் வழங்கப் பெறுமே. | 1173 |
மண்டல மெனும்பெயர் நாடுங் குதிரையும் வட்டமுங் குதிரைச் சாரியும் வழங்கும். | 1174 |
மன்ற மென்பெயர் அம்பலமும் வாசமும். | 1175 |
மந்திர மெனும்பெயர் குதிரைப் பந்தியும் கோயிலும் விசாரமு மதவு மில்லமும் இறையவர் நாம வெழுத்து மாமே. | 1176 |
மறவ ரெனும்பெயர் வனசரர் பெயரும் படைவீரர் பெயரும் பகரப் பெறுமே. | 1177 |
மள்ளர் எனும் பெயர் வன்சமர் வீரரும் திண்ணியோர் பெயரு மருதநில மாக்களும். | 1178 |
மதலை யெனும்பெயர் மரக்கலப் பெயரும் புதல்வர் பெயரும் கொடுங்கைப் பாவும் கொன்றையும் தூணும் சார்பின வையுமாம். | 1179 |
மடை யெனும்பெயர் மணிப்பணிப் பூட்டும் புனலின் மடையும் அடிசிலும் புகலுவர். | 1180 |
மட்டெனும் பெயரே யளவு மதுவுமாம். | 1181 |
மனவெனும் பெயரே மணிப்பொதுப் பெயரும் அக்கு மணியின் பெயரு மாமே. | 1182 |
மணியெனும் பெயரே வனப்பு நன்மையும் கருநிற முதவ மணியுங் கண்டையும் இசையு மெனவே யியம்பப் பெறுமே. | 1183 |
மதுக மெனும்பெயர் வண்டுந் தராவும் இருப்பையு மட்டி மதுரமும் இயம்புவர். | 1184 |
மடியெனும் பெயரே வயிறுத் தாழையும் சோம்பும் புடைவையுந் துன்ப நோயுமாம். | 1185 |
மன்ற லெனும்பெயர் மணமும் கல்யாணமும் பாலையாழ்த் திறமும் பகரப் பெறுமே. | 1186 |
மத்திகை யெனும்பெயர் மாலையின் பெயரும் சம்மட்டி யினோடு சுடர்நிலைத் தண்டுமாம். | 1187 |
மல் லெனும்பெயரே மாயோ னாடலும் வளமும் பெலமும் வகுத்துரைத் தனரே. | 1188 |
மல்லிகை யெனும்பெயர் மாலதிப் புதலும் சுடர்நிலைத் தண்டுஞ் சொல்லுவர் புலவர். | 1189 |
மறமெனும் பெயரே பாவமும் கொடுமையும் சினமு மெனவே செப்பப் பெறுமே. | 1190 |
மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும் மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர். | 1191 |
மகர மெனும்பெயர் மலர்ப்பூந் தாதும் கறவு மகர விராசியுஞ் சொல்லுவர். | 1192 |
மந்தார மெனும்பெய ரைந்தரு விலொன்றும் செம்பரத் தையுமெனச் செப்புவர் புலவர். | 1193 |
மத்தெனும் பெயரே தயிர்கடை தறிமுதன் மத்தின் விகற்பமு மத்து முணர்த்துவர். | 1194 |
மல்ல லெனும்பெயர் வலிமையும் வளமுமாம். | 1195 |
மடமெனும் பெயரே முனிவர் வாசமும் அறியாமை யுஞ்சத்திர மனையு மென்மையும். | 1196 |
மகனெனும் பெயரே மைந்தன் பெருமையும் மகிமையிற் சிறந்தோன் பெயரும் வழங்கும். | 1197 |
மணமெனும் பெயரே கல்யாணமும் வாசமும் கூட்டமு மெனவே கூறப் பெறுமே. | 1198 |
மறையெனும் பெயர்மந் திரமும் வேதமும் பரிசையு மறைவும் ராசியப் பெயருமாம். | 1199 |
மகமெனும் பெயர்மக நாளுடன் யாகமாம். | 1200 |
மடலெனும் பெயர்பனை மடல்போல் வனவும் பூவி னிதழு மோர்நூலும் புகலுவர். | 1201 |
மத்தக மெனும்பெயர் நெற்றியுந் தலையுமாம். | 1202 |
மண்ணெனும் பெயரே முழவின் மார்ச்சனையும் அலங்கரித்தலு நல்ல வனியு மாமே. | 1203 |
மதுவெனும் பெயரே வசந்த காலமும் இனிமையு நறவொடு தேனு மியம்புவர். | 1204 |
மரபெனும் பெயரே பழமையும் இயல்புமாம். | 1205 |
மறலெனும் பெயரே மயக்கமும் கூற்றுமாம். | 1206 |
மருமான் எனும்பெயர் வழித்தோன் றலுடனே மருமகன் பெயரும் வழங்கப் பெறுமே. | 1207 |
மயலெனும் பெயரே மயக்கமும் செற்றையும் பேயின் பெயரும் பேசுவர் புலவர். | 1208 |
மலைத லெனும்பெயர் மறுத்தலும் பொருதலும் சூடலு மெனவே சொல்லப் பெறுமே. | 1209 |
மருத மெனும்பெயர் மருத நிலமும் அந்நிலப் பாடலும் வயலுமோர் மரமுமாம். | 1210 |
மங்கு லெனும்பெயர் மேகமும் விசும்பும் இருளு மெனவே இயம்புவர் புலவர். | 1211 |
மன்னெனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும் நிலைபேறு மிகுதிப் பெயரு நிகழ்த்துவர். | 1212 |
மலர்தல் எனும்பெயர் எதிர்தலுந் தோன்றலும் மலர்தலின் பெயரும் வகுத்தனர் புலவர். | 1213 |
மகரந்த மென்னும் பெயர்மலர்த் தேனும் நறவும் பூந்தாது நவிலப் பெறுமே. | 1214 |
மதவெனும் பெயரே வன்மையு மிகுதியும். | 1215 |
மதமெனும் பெயர்கரி மதமும் செருக்குமாம். | 1216 |
மனையெனும் பெயரே மனைவியும் வீடுமாம். | 1217 |
மருந்தெனும் பெயரே மருந்தின் விகற்பமும் அமர ருணவின் பெயரு மாமே. | 1218 |
மந்தி யெனும்பெயர் வண்டும் ஆதித்தனும் குரங்கின் விகற்பமும் கூறப் பெறுமே. | 1219 |
மன்ற வெனும்பெயர் தேற்றமும் இடைச்சொலும் மருவு மெனவே வழங்கப் பெறுமே. | 1220 |
மகர அகர வருக்கம் முற்றும்.
மகர ஆகார வருக்கம்
மாலெனும் பெயர்திரு மாலொடு மதிமகன் காரிநிற வலாரியுங் காற்றொடு சோழனும் கண்குத்திப் பாம்பும் கருமையும் பெருமையும் மயக்கமும் விருப்பும் கண்ணே ணியுமாகும். | 1221 |
மாவெனும் பெயரொரு மரமு மழைத்தலும் திருவுங் குதிரையும் செல்வமும் கறுப்பும் விலங்கின் பொதுவும் விளைநிலமு மழகும் வண்டு மோரிலக்கமும் பெருமை நிறமும் நென்மா முதலவு நிகழ்த்தப் பெறுமே. | 1222 |
மாலை யெனும்பெய ரொழுக்கமு மியல்பும் நதியும் இரவும் மலரான் மணியாற் சொல்லாற் பொன்னாற் றொடுத்திடு தொடையுமாம் | 1223 |
மானெனும் பெயரே மகர விராசியும் விலங்கின் பொதுவுட னுழையையும் விளம்புவர். | 1224 |
மாரி யெனும்பெயர் மழையு மேகமும் வடுகியு மதுவு மரணமும் வழங்கும். | 1225 |
மாதிர மெனும்பெயர் திசையும் யானையும் மலையு மெனவே வழங்கப் பெறுமே. | 1226 |
மாதவ மெனும்பெயர் வளர்தவப் பெயரும் இளவேனிற் பெயரு மதுவு மியம்புவர். | 1227 |
மார்க்க மெனும்பெயர் வழியுந் தெருவும் சமைய விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. | 1228 |
மாட மெனும்பெயர் மனையும் உழுந்துமாம். | 1229 |
மாழை யெனும்பெயரு லோகக் கட்டியும் பொன்னு மழகும் புளிமாவும் ஓலையும் திரண்ட வடிவும் செப்புவர் புலவர். | 1230 |
மாசெனும் பெயரே மேகமும் அழுக்கும் சிறுமையுங் குற்றமும் செப்பப் பெறுமே. | 1231 |
மாத ரெனும்பெய ரிடைச்சொலு மழகும் காதலும் அரிவையர் பெயரும் கருதுவர். | 1232 |
மாந்த லெனும்பெயர் மரித்தலும் குடித்தலும் உண்டலு மெனவே யுரைத்தனர் புலவர். | 1233 |
மாய னெனும்பெயர் மாதவன் பெயரும் கருநிற முடையோன் பெயரும் கருதுவர். | 1234 |
மாய்த லெனும்பெயர் மறைதலும் மரணமும். | 1235 |
மாருதி யெனும்பெயர் அநுமன் பெயரும் வீமன் பிதாவின் பெயரும் விளம்புவர். | 1236 |
மாய மெனும்பெயர் வஞ்சனைப் பெயரும் பொய்யுங் கருநிறப் பெயரும் புகலுவர். | 1237 |
மாயை யெனும்பெயர் மாயமும் சத்தியும். | 1238 |
மாடெனும் பெயரே தனமும் பக்கமும் மணியுஞ் செல்வமு நிரையும் வழங்கும். | 1239 |
மாலிகை யெனும்பெயர் மதுவு மாலியும். | 1240 |
மானுத லெனும்பெயர் மயக்கமு முவமையும் இலச்சையு மெனவே இயம்புவர் புலவர். | 1241 |
மான மெனும்பெயர் லச்சையு மளவும் விமானமுங் குற்றமும் பெருமையும் விளம்புவர். | 1242 |
மகர ஆகார வருக்கம் முற்றும்.
மகர இகர வருக்கம்
மிசையெனும் பெயரே மீமிசைச் சொல்லும் உணவுடன் மேடு முரைக்கப் பெறுமே. | 1243 |
மிச்சை யெனும்பெயர் மிடித்தலும் பொய்த்தலும் அறிவின் மைப்பெயர் தானு மாமே. | 1244 |
மிதவை யெனும்பெயர் தெப்பமுஞ் சோறுமாம். | 1245 |
மகர இகர வருக்கம் முற்றும்.
மகர ஈகார வருக்கம்
மீனெனும் பெயரே வான்மீ னோடு மச்சமும் சித்திரை நாளும் வழங்கும். | 1246 |
மீளி யெனும்பெயர் மிடலும் பெருமையும் தலைவனும் விறலோன் பெயருஞ் சாற்றுவர். | 1247 |
மீக்கூ றெனும்பெயர் சொற்செல வுடனே கீர்த்திப் பெயருங் கிளத்தப் பெறுமே. | 1248 |
மகர ஈகார வருக்கம் முற்றும்.
மகர உகர வருக்கம்
முறமெனும் பெயரே வியாகமுஞ் சுளகுமாம். | 1249 |
முறிகுள மெனும்பெயர் பூராட நாளும் உடைகுளப் பெயரு முரைத்தனர் புலவர். | 1250 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வடமலை நிகண்டு, Vadamalai Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்