வடமலை நிகண்டு
வடமலை நிகண்டு, 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் ஈசுர பாரதியார் ஆவார். இறையூர் வடமலை நிகண்டு, பல்பொருட் சூடாமணி என்ற பெயர்களைப் பெற்றிருந்த இது, மூன்று பகுதிகளாக இருந்தது. இருப்பினும், இரண்டாவது பகுதியே தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ. வே. சாமிநாத அய்யர் என்பவரால் ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு உ.வே.சா. நூல் நிலைய வெளியீடாக,. இரா. நாகசாமி அவர்கள் அதனைப் பதிப்பித்தார்.
இதில் 10 வருக்கத் தொகுதிகளும், அதில் 93 வருக்கங்களும் உள்ளன. அவ்வருக்கங்களில் மொத்தம் 1452 சூத்திரங்களும் அடங்கியுள்ளன.
சகர எகர வருக்கம்
செவ்வி யெனும்பெயர் பொழுதும் பருவமும். | 751 |
செல்லெனும் பெயரே யிடியு மேகமும் முன்னிலை யேவலுஞ் சிதலு மொழிந்தனர். | 752 |
செந்தெனும் பெயரே சீவனுஞ் சிவப்பும் ஓரியு மணுவும் நரகத்தி லொன்றுமாம். | 753 |
செப்ப மெனும்பெயர் நடுநிலைப் பெயரும் தெருவுஞ் செவ்வையு நெஞ்சமுஞ் செப்புவர். | 754 |
செம்புல மெனும்பெயர் வன்பாலை நிலமும் பொருக ளமுமெனப் புகன்றனர் புலவர். | 755 |
செய்ய லெனும்பெயர் சேறு மொழுக்கமும் காவலு மெனவே கருதப் பெறுமே. | 756 |
செம்ம லெனும்பெயர் சீவனும் செயினனும் தலைவனுஞ் சிறுவனும் வீரனும் பெருமையும் பழம்பூ வுமெனப் பகர்ந்தனர் புலவர். | 757 |
செவிலி யெனும்பெயர் முன்பிறந் தாளும் வளர்ந்த கைத்தாயும் வகுத்தனர் புலவர். | 758 |
செழுமை யெனும்பெயர் வளமையும் கொழுப்பும் வனப்பு மாட்சிமையும் வழங்குவர் புலவர். | 759 |
செடியெனும் பெயரே யொளியுஞ் செறிவும் பாவமுங் குணமின் மைப்பெயரும் பகர்ந்தனர். | 760 |
செத்தெனும் பெயரே செம்மையு முவமையும் அசைச்சொலு முறுப்புங் கருத்துஞ் சந்தேகமும். | 761 |
செட்டி யெனும்பெயர் முருகன் பெயரும் வணிகனு மெனவே வழங்கப் பெறுமே. | 762 |
செச்சை யெனும்பெயர் வெள்ளாட் டேறொடு வெட்சி செஞ்சாத்தும் விளம்புவர் புலவர். | 763 |
செவியெனும் பெயரே கேள்வியுங் காதுமாம். | 764 |
செம்மை யெனும்பெயர் சிவப்புஞ் செவ்வையும். | 765 |
செப்பெணும் பெயர்பணிச் செப்புஞ் செப்பலும். | 766 |
செய்யெனும் பெயரே செய்தொழிற் பெயரும் ஒழுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. | 767 |
செயிரெனும் பெயரே சினமும் குற்றமும். | 768 |
சகர எகர வருக்கம் முற்றும்.
சகர ஏகார வருக்கம்
சேயெனும் பெயரே சிவப்புஞ் செவ்வேளும் செவ்வாய்க் கிரகமும் சிறுவனு நீளமும் தூரமு மிளமையுஞ் சொல்லுவர் புலவர். | 769 |
சேடி யெனும்பெயர் விஞ்சையர் நகரமும் சிலதியு மெனவே செப்பப் பெறுமே. | 770 |
சேக்கை யெனும்பெயர் முலையும் சயனமும் விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். | 771 |
சேடனெ னும்பெயர் அனந்தனும் பாங்கனும் இளையோன் பெயருட னடிமையு மியம்புவர். | 772 |
சேணுனும் பெயரே யகலமு நீளமும் உயரமு மெனவே யுரைக்கப் பெறுமே. | 773 |
சேடெனும் பெயரே சிறப்பு நன்மையும் அழகுந் திரட்சியு மிளமையு மாமே. | 774 |
சேதக மெனும்பெயர் சேறு செந்நிறமுமாம். | 775 |
சேவ லெனும்பெயர் புள்ளி னாண்பாலும் காவலுஞ் சேறுஞ் சாவலும் கருதுவர். | 776 |
சேவக மெனும்பெயர் யானை துயிலிடமும் வீரமு மெனவே விளம்புவர் புலவர். | 777 |
சேதார மெனப்பெயர் தேமாவும் வெட்சியும் பொன்னின் பெயரும் புகன்றனர் புலவர். | 778 |
சகர ஏகார வருக்கம் முற்றும்.
சகர ஐகார வருக்கம்
சைவ மெனும்பெயர் புராணத்தி லொன்றும் சிவசம யத்தின் விகற்பமும் செப்புவர். | 779 |
சகர ஐகார வருக்கம் முற்றும்.
சகர ஒகர வருக்கம்
சொல்லெனும் பெயரே கீர்த்தியும் வார்த்தையும் நெல்லும் பல்கலைப் பெயரு நிகழ்த்துவர். | 780 |
சொர்க்க மெனும்பெயர் சுவர்க்கமு முலையுமாம். | 781 |
சகர ஒகர வருக்கம் முற்றும்.
சகர ஓகார வருக்கம்
சோதி யெனும்பெய ரொருநாள் மீனும் அருகனும் அரனும் ஆதித்தனும் விளக்கும் தாரா கணமும் விளம்புவர் புலவர். | 782 |
சகர ஓகார வருக்கம் முற்றும்.
சகர ஒளகார வருக்கம்
செளரி யெனும்பெயர் சளியுங் கன்னனும் இமயனுங் கண்ணனும் யமுனை நதியுமாம். | 783 |
செளரிய மெனும்பெயர் வீரமும் களவுமாம் | 784 |
சகர ஒளகார வருக்கம் முற்றும்.
சகர வருக்கத் தொகுதி முற்றும்.
4 வது ஞகர வருக்கத் தொகுதி
ஞகர அகர வருக்கம்
ஞமலி யெனும்பெயர் நாயும் மயிலும் கள்ளு மெனவே கருதப் பெறுமே. | 785 |
ஞகர அகர வருக்கம் முற்றும்.
ஞகர ஆகார வருக்கம்
ஞாளி யெனும்பெயர் நறவு நாயுமாம். | 786 |
ஞாட்பெனும் பெயரே பாரமும் கூட்டமும் செருவு மெனவே செப்புவர் புலவர். | 787 |
ஞான மெனும்பெயர் கல்வியு மறிவுந் தத்துவ நூலுஞ் சாற்றப் பெறுமே. | 788 |
ஞாங்க ரெனும்பெயர் பக்கமு மேலும் வேலு மெனவே விளம்பப் பெறுமே. | 789 |
ஞகர ஆகார வருக்கம் முற்றும்.
ஞகர எகர வருக்கம்
ஞெள்ள லெனும்பெயர் தெருவு மேன்மையும் பள்ளமு மெனவே பகர்ந்தனர் புலவர். | 790 |
ஞெரே லெனும்பெயர் விரைவு மொலியுமாம். | 791 |
ஞெமிர்த லெனும்பெயர் முறிதலும் பரத்தலும். | 792 |
ஞெகிழி யெனும்பெயர் நெருப்புறு விறகும் தீயுடன் அனற்பொறி சிலம்பு மாமே. | 793 |
ஞகர எகர வருக்கம் முற்றும்.
ஞகர ஒகர வருக்கம்
ஞொள்க லெனும்பெயர் நொய்படு வனவும் இளைத்தலு மச்சக் குறிப்போடு சோம்புமாம். | 794 |
ஞகர ஒகர வருக்கம் முற்றும். ஞகர வருக்கத் தொகுதி முற்றும். |
5 வது தகர வருக்கத் தொகுதி
தகர அகர வருக்கம்
தரணி யெனும்பெயர் தருகதிர் இரவியும் நிலமுஞ் சயிலமு நிகழ்த்துவர் புலவர். | 795 |
தமமெனும் பெயரே ராகுவு மிருளுமாம். | 796 |
தண்டெனும் பெயரே தடியு மிதுனமுஞ் சிவிகையின் பெயரும் செருமிகு தானையும் வரம்பும் வீணையுங் குழாயும் வழங்குவர். | 797 |
தழலெனும் பெயரே கிளிகடி கருவியும் நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். | 798 |
தண்ணடை யெனும்பெயர் மருத நிலவூரும் நாடு மெனவே நவிலப் பெறுமே. | 799 |
தண்ட மெனும்பெயர் தண்டா யுதமும் சேனையும் யானை செல்வழியுந் தெண்டித்தலும். | 800 |
தடமெனும் பெயரே மலையும் பொய்கையும் பெருமையு மகலமு மலையடி வழியும் வளைவுங் குளக்கரைப் பெயரும் வழங்குவர். | 801 |
தடியெனும் பெயரே தனுவு முலக்கையும் தசையு முடும்புந் தண்டா யுதமும் வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர். | 802 |
தனஞ்செய னெனும்பெயர் சவ்விய சாசியும் மெய்யின் மாருத விகற்பத்தி னொன்றும் நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். | 803 |
தளிம மெனும்பெயர் சயனமு மெத்தையும் அழகின் பெயரு மாகு மென்ப. | 804 |
தத்தை யெனும்பெயர் முன்பிறந் தாளும் கிளியு மெனவே கிளத்துவர் புலவர். | 805 |
தனுவெனும் பெயரே சடமும் சிறுமையும் வில்லின் பெயரு மோரிராசியும் விளம்புவர். | 806 |
தளையெனும் பெயரே தமிழ்நூற் பாதமு மலர்முகை முறுக்கு மாண்பான் மயிரும் தொடரொடு சிலம்புந் தொடையலுஞ் சொல்லுவர். | 807 |
தனமெனும் பெயர்சந் தனமும் பொன்னும் முத்திறப் பொருளு முலையுமான் கன்றுமாம். | 808 |
தவிசெனும் பெயரே மெத்தையுந் தடுக்கும் பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர். | 809 |
தளமெனும் பெயரே தாழியும் சாந்தமும் படையும் பூவிதழ்ப் பெயரும் பகர்ந்தனர். | 810 |
தண்ண மெனும்பெயர் தரித்தடா மழுவும் ஒருகட் பறையு முரைக்கப் பெறுமே. | 811 |
தட்டை யெனும்பெயர் கரடிகைப் பறையும் கிளிகடி குருவியுந் தினைத்தாளு முண்டமும் மூங்கிலு மெனவே மொழிந்தனர் புலவர். | 812 |
தம்ப மெனும்பெயர் மெய்புகு கருவியும் கம்பமும் பற்றுக் கோடுங் கருதுவர். | 813 |
தண்மை யெனும்பெயர் தாழ்வும் எளிமையும் குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே. | 814 |
தகடெனும் பெயரே ஐமை வடிவும் இலையு மெனவே யியம்புவர் புலவர். | 815 |
தராவெனும் பெயரே சங்கும் மதுகமும். | 816 |
தரும ராச னெனும்பெயர் யமனும் அருகனும் புத்தனும் பாண்டு மைந்தனுமாம். | 817 |
தட்டெனும் பெயரே நடுவட் டேரும் திரிகையும் பரிசையும் பகுத்தலும் தடுத்தலும் வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும். | 818 |
தன்மை யெனும்பெயர் தன்மை யினிடமும் இயல்பு மெனவே இயம்புவர் புலவர். | 819 |
தளியெனும் பெயரே துளியும் கோயிலும் தளநடத் தியசமர்த் தலமும் புகலுவர். | 820 |
தகையெனும் பெயரே பெருமையு மழகும் அன்பும் பண்பு மியல்பு மாமே. | 821 |
தபுத லெனும்பெயர் சாதலும் கேடுமாம். | 822 |
தமிழெனும் பெயரே தமிழின் விகற்பமும் நீர்மையு மினிமையு நிகழ்த்தினர் புலவர். | 823 |
தன்ன மெனும்பெயர் சிறுமையான் கன்றுமாம். | 824 |
தபன னெனும்பெயர் தழலு மருக்கனும். | 825 |
தலமெனும் பெயரே பச்சை நிறமும் இலையும் புவியும் இயம்புவர் புலவர். | 826 |
தசும்பெனும் பெயரே குடமு மிடாவுமாம். | 827 |
தட்ட லென்பெய ரொத்தறுத்த லினுடனே தடுத்தலின் பெயருஞ் சாற்றப் பெறுமே. | 828 |
தலையெனும் பெயரே இடமும் சென்னியும் விசும்பு முதன்மையும் விளம்பப் பெறுமே. | 829 |
தவவெனும் பெயரே மிகுதியும் குறைவுமாம். | 830 |
தந்தெனும் பெயரே சாத்திரப் பெயரும் நூலின் பெயரு நுவலப் பெறுமே. | 831 |
தகைமை யெனும்பெயர் அழகும் பெருமையும் இயல்பு மெனவே யியம்பப் பெறுமே. | 832 |
தனியெனும் பெயரொப் பின்மைப் பெயருந் தனிமையின் பெயருஞ் சாற்றப் பெறுமே. | 833 |
தன்னை யெனும்பெயர் முன்பிறந் தானும் அன்னையும் செவிலியு மாகு மென்ப. | 834 |
தகர அகர வருக்கம் முற்றும்.
தகர ஆகார வருக்கம்
தாணு வெனும்பெயர் சங்கரன் பெயரும் தூணு மலையு நிலையுஞ் சொல்லிய ஆவு ரிஞ்சுதறிப் பெயரு மாவே. | 835 |
தாதி யெனும்பெயர் அடிமையும் பரணியும். | 836 |
தால மெனும்பெயர் கூத்தற் கமுகொடு ஞாலமும் பனையு முண்கலமு நாவுமாம். | 837 |
தாரை யெனும்பெயர் வழியும் விழியும் ஒழுங்குஞ் சின்னமு முரைக்கப் பெறுமே. | 838 |
தாம மெனும்பெயர் தாரும் பூவும் மணிவடப் பெயரு நகரமுங் கயிறும் ஒளியுங் கொன்றையு மிருப்பிடப் பொதுவுமாம். | 839 |
தார மெனும்பெயர் தராவும் நாவும் வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் அரும்பண்டப் பெயரும் யாழ்நரம்பி லொன்றும் வெள்ளியு மெனவே விளம்பப் பெறுமே. | 840 |
தானை யெனும்பெயர் சேனையுந் துகிலும் ஆயுதப் பொதுவு மாகு மென்ப. | 841 |
தாரெனும் பெயர்பூந் தாமமு மலரும் மாவினுக் கணியுங் கிண்கிணி மாலையும் ஒழுங்கோடு தூசிப் படையையு முரைப்பர். | 842 |
தாழெனும் பெயரே கதவிடு தாழும் பதமு முயற்சியும் பகரப் பெறுமே. | 843 |
தாறுனும் பெயர்மரக் குலையு மளவும் விற்குதைப் பெயரு முட்கோலும் விளம்புவர். | 844 |
தாதெனும் பெயரே யெழுவகைத் தாதும் பொன்முத லேழும் புவிமுத லைந்தும் காவிக் கல்லுங் கருதப் பெறுமே. | 845 |
தாண்டவ மெனும்பெயர் தாவலும் கூத்துமாம். | 846 |
தான மெனுபெயர் தருமக் கொடையும் பல்வகை யுதவியு மதமு நீராடலுஞ் சுவர்க்கமும் புலவோர் சொல்லப் பெறுமே. | 847 |
தாழை யெனும்பெயர் நாளி கேரமும் கைதையின் பெயருங் கருதப் பெறுமே. | 848 |
தாவெனும் பெயரே பகையும் கெடுதலும் பெலமும் வருத்தமும் தாண்டுதற் பெயருமாம். | 849 |
தாம்பெனும் பெயரே தாமணிக் கயிறுமாம். | 850 |
தாபர மெனும்பெயர் மரமுடன் மலைபோல் நிற்பன யாவையு முடம்பு நிகழ்த்துவர். | 851 |
தாசி யெனும்பெய ரியம னாளும் தொழும்பு செய்பெண்ணின் பெயருஞ் சொல்வர். | 852 |
தாடெனும் பெயரே தலைமையும் வலியுமாம். | 853 |
தாளி யெனும்பெயர் தாளிப் புதலும் பனையு மெனவே பகர்ந்தனர் புலவர். | 854 |
தகர ஆகார வருக்கம் முற்றும்.
தகர இகர வருக்கம்
திங்க ளெனும்பெயர் மதியு மாதமுமாம். | 855 |
திகையெனும் பெயரே திசையுஞ் சுணங்குமாம். | 856 |
திதியெனும் பெயர்நிலை பேறும் பக்கமும் காத்தலு மெனவே கருதுவர் புலவர். | 857 |
திணையெனும் பெயரே குலமும் ஒழுக்கமும் ஐந்திணைப் பெயரு மாகு மென்ப. | 858 |
திட்டை யெனும்பெயர் திண்ணையு முரலும் மேடு மெனவே விளம்புவர் புலவர். | 859 |
திகிரி யெனும்பெயர் தேருந் தேராழியும் மலையு மூங்கிலும் வட்ட வடிவும் சக்கரமு நேமிப் புள்ளும் சாற்றுவர். | 860 |
திலமெனும் பெயரே யெள்ளு மஞ்சாடியும். | 861 |
திருவெனும் பெயரே சிறப்பும் செல்வமும் கமலையு மெனவே கருதப் பெறுமே. | 862 |
திரிதல் எனும்பெய ருலாவுங் கெடலுமாம். | 863 |
திளைத் தலெனுபெய ரனுபவப் பெயரும் நிறைவின் பெயரும் நெருங்குதற் பெயருமாம். | 864 |
தகர இகர வருக்கம் முற்றும்.
தகர ஈகார வருக்கம்
தீயெனும் பெயரே தீமையும் கனலும் நரகமும் எனவே நவிலப் பெறுமே. | 865 |
தீவினை எனும்பெயர் பாவமும் கொடுமையும் | 866 |
தீர்த்த மெனும்பெயர் திருவிழா வுடனே புண்ணிய தீர்த்தப் பெயரும் புகலுவர். | 867 |
தீர்த்த னெனும்பெயர் தேவனும் குருவுமாம். | 868 |
தகர ஈகார வருக்கம் முற்றும்.
தகர உகர வருக்கம்
துணங்கற லென்னும் பெயர்திரு விழாவும் இருளு மெனவே யியம்புவர் புலவர். | 869 |
துடியெனும் பெயரே கால நுட்பமும் சிற்றேல முமேழ் மாதர் நிருத்தமும் சிறுபறை யுங்கூ தாளமும் செப்புவர். | 870 |
துத்தி யெனும்பெயர் முலையின் சுணங்கும் பாம்பின் படத்தின் பொறியுமோர் புதலுமாம். | 871 |
துண்ட மெனும்பெயர் சாரைப் பாம்பும் கண்டமு முகமு மூக்குங் கருதவர். | 872 |
துருத்தி யெனும்பெயர் ஆற்றிடைக் குறையும் சருமமு மெனவே சாற்றுவர் புலவர். | 873 |
துகளெனும் பெயர்நுண் பொடியுங் குற்றமும். | 874 |
துவக்கெனும் பெயரே தோலும் பிணக்குமாம். | 875 |
துத்த மெனும்பெயர் யாழி னரம்பும் எழுவகை யினோர்வி கற்பமும் வயிறும் பாலுமோர் மருந்தும் பகரப் பெறுமே. | 876 |
துப்பெனும் பெயரே துணைக்கா ரணமும் அரக்கு மாயுதமும் பெலமும் பவளமும் நெய்யும் பொலிவும் அனுபவப் பெயருமாம். | 877 |
துரோண மெனும்பெயர் தும்பையுஞ் சிம்புளும் பதக்கொடு காகமுஞ் சிலையும் பகருவர். | 878 |
துணியெனும் பெயரே துண்டமுஞ் சீரையும் சோதிநாட் பெயரும் சொல்லுவர் புலவர். | 879 |
தும்பி யெனும்பெயர் சுரையும் யானையும் வண்டு மதுவும் வழங்கப் பெறுமே. | 880 |
துளியெனும் பெயர்மழைத் துளிபெண் ணாமையாம். | 881 |
துஞ்ச லெனப்பெயர் நிலைபேறு முறக்கமும் மரணமு மெனவே வழங்கப் பெறுமே. | 882 |
துணையெனும் பெயரே யுழவும் சகாயமும் உவமையு முவமையும் உரைத்தனர் புலவர். | 883 |
தும்பெனும் பெயரே தோடுஞ் சிம்புளும். | 884 |
துவையெனும் பெயர்பிண் ணாக்கும் இறைச்சியும் பருகுவ புளிங்கறிப் பெயரும் பகருவர். | 885 |
துனியெனும் பெயரே புலவி நீடுதலும் கோபமும் வரியுங் கூறுவர் புலவர். | 886 |
துன்ன லெனும்பெயர் குறுகலுஞ் செறிவுமாம். | 887 |
துணங்கை யெனும்பெயர் திருவிழா வுடனே மெய்க்கூத் தெனவும் விளம்புவர் புலவர். | 888 |
துளும்ப லெனும்பெய ரலைதலுந் திமிறலும். | 889 |
துணித லெனும்பெயர் துணிபடற் பெயரும் தெளிவு மெனவே செப்பப் பெறுமே. | 890 |
தகர உகர வருக்கம் முற்றும்.
தகர ஊகார வருக்கம்
தூம்பெனும் பெயரே யுட்டுளை வடிவும் நீர்நுழை யிடமு மரக்காலு மூங்கிலும். | 891 |
தூசெனும் பெயரே தூசிப் படையும் புரோசைக் கயிறும் புடவையு மியானையும். | 892 |
தூவெனும் பெயரே சுசியு மிறைச்சியும் பற்றுக் கோடும் பகரப் பெறுமே. | 893 |
தூரிய மெனும்பெயர் பேரெரு துடனே முரசமு மெனவே மொழியப் பெறுமே. | 894 |
தூக்கெனும் பெயரே யுறியுந் துலாமும் கூத்து மாராய்தலுங் கூறுசொற் கலையுமாம். | 895 |
தூங்க லெனும்பெயர் துயிலும் சோம்புங் குறைவுந் தந்தியுங் கூத்தின் பெயருமாம். | 896 |
தகா ஊகார வருக்கம் முற்றும்.
தகர எகர வருக்கம்
தெய்வெனும் பெயரே கொலையுந் தெய்வமும். | 897 |
தென்னெனும் பெயரே தெற்கு மழகும் கற்புட னிசையு மிலாங்கலிப் பெயருமாம். | 898 |
தெவ்வெனும் பெயரே பகையுஞ் சமருமாம். | 899 |
தெவிட்ட லெனும்பெயர் நிறைதலு மொலியும் கான்றலு மடைத்திடற் பெயருங் கருதுவர். | 900 |
தெய்வ மெனும்பெயர் புத்தேளும் வாசமும். | 901 |
தகர எகர வருக்கம் முற்றும்.
தகர ஏகார வருக்கம்
தேளெனும் பெயரே தெருக்கா லுடனே விருச்சிக ராசியும் அனுடமும் விளம்புவர். | 902 |
தேசிக னெனும்பெயர் குருவும் வணிகனும் தேசாந் திரியையுஞ் செப்பப் பெறுமே. | 903 |
தேமெனும் பெயரே தித்திப்பும் வாசமும் தேசமுந் திசையு மிடமுஞ் செப்புவர். | 904 |
தேசிக மெனும்பெயர் திசைச்சொல்லு மொளியும் அரும் பொன்னுங் கூத்தின் விகற்பும் அழகுமாம். | 905 |
தேர்தல் எனும்பெயர் கொள்கையின் பெயரும் ஆராய் தலுமே யாகும் என்ப. | 906 |
தேனெனும் பெயரே வண்டு மதுவுமாம். | 907 |
தகர ஏகார வருக்கம் முற்றும்.
தகர ஐகார வருக்கம்
தைத்த லெனும்பெயர் துன்னத்தின் பெயரும் தைத்திடு தொழிலுஞ் சாற்றப் பெறுமே. | 908 |
தைய லெனும்பெயர் பெண்ணுட னழகுமாம். | 909 |
தையெனும் பெயரே பூச நாளும் மகர மாதத்தின் பெயரும் வழங்கும். | 910 |
தகர ஐகார வருக்கம் முற்றும்.
தகர ஒகர வருக்கம்
தொழுவெனும் பெயரே யிரேவதி நாளும் உழலைத் தொழுவு முரைத்தனர் புலவர். | 911 |
தொடுவெனும் பெயரே தோட்டமும் வஞ்சமும் மருத நிலமும் வழங்கப் பெறுமே. | 912 |
தொய்யி லெனும்பெயர் சேறும் இன்பமும் துயிரு முலைமேற் றொய்யிலு முழுவுமாம். | 913 |
தொத்தெனும் பெயர்பூங் கொத்துந் தொழும்புமாம் | 914 |
தொறுவெனும் பெயரே தோழமு நிரையும் தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். | 915 |
தொடியெனும் பெயர்கை வளையு மோர்பலமும் கங்கணப் பெயருங் கருதப் பெறுமே. | 916 |
தொங்க லெனும் பெயர்பீலிக் குஞ்சமும் வெண்குடைப் பெயரு மாலையுந் தூக்கமும். | 917 |
தொண்டை யெனும்பெயர் யானைத் துதிக்கையும் ஆதொண்டை யினொடு கோவையு மாமே. | 918 |
தொண்டெனும் பெயரே தொழும்பும் பழமையும் ஒன்பது நுழைவழிப் பெயரு மோதுவர். | 919 |
தொட்ட லெனும்பெயர் தோண்டுதற் பெயரும் தொடுதற் பெயரும் உணவும் சொல்லுவர். | 920 |
தொடுத்தல் எனும்பெயர் பிணித்தலும் வளைத்தலும் பற்றுத லெனவும் பகரப் பெறுமே. | 921 |
தொழுதி யெனும்பெயர் புள்ளொலியுங் கூட்டமும் | 922 |
தகர ஒகர வருக்கம் முற்றும்.
தகர ஓகார வருக்கம்
தோணி யெனும்பெயரி ரேவதி நாளும் நீருஞ் சேறு மெயில துறுப்பும் தெப்பமு மோடமும் பகழியுஞ் செப்புவர். | 923 |
தோட்டி யெனும்பெயர் அங்குசப் படையும் கதவு மென கருதப் பெறுமே. | 924 |
தோன்ற லெனும்பெயர் சுதனு நாதனுமாம். | 925 |
தோலெனும் பெயரே தோல்வியும் யானையும் கேடகப் பலகையுங் கிளத்திடு சருமமும் இயாப்பினோர் வனப்பும் இயம்புவர் புலவர். | 926 |
தோற்ற மெனும்பெயர் ஏற்றமும் பிறப்பும் ஆற்றலும் உண்டாக் குதலும் உயர்ச்சியுந் தோன்றுதற் பெயரும் சொல்லப் பெறுமே. | 927 |
தோடெனும் பெயரே பனைமடல் போலவும் பூவி னிதழும் தொகுதியும் புகலுவர். | 928 |
தோளெனும் பெயரே துணையும் புயமுமாம். | 929 |
தோரை யெனும்பெயர் மூங்கி லரிசியும் கைவரை யோடுநெல் விகற்பமும் கருதுவர். | 930 |
தகர ஓகார வருக்கம் முற்றும்.
தகர ஒளகார வருக்கம்
தெளவை யெனும்பெயர் தாயுமுன் பிறந்தாளு மூதேவியுஞ் சாற்றப் பெறுமே. | 931 |
தகர ஒளகார வருக்கம் முற்றும்.
தகர வருக்கத் தொகுதி முற்றும்.
6 வது நகர வருக்கத் தொகுதி
நகர அகர வருக்கம்
நந்தி யெனும் பெயர் ஈசனு மிடபமும் சிறுபே ரிகையொடு செக்கான் பெயருமாம். | 932 |
நலமெனும் பெயரே நல்லுப காரமும் சுகமும் விருச்சிக ராசியும் சொல்லுவர். | 933 |
நவமெனும் பெயரே யொன்பதுங் கேண்மையும் புதுமையுங் கார்கா லமுமெனப் புகலுவர். | 934 |
நடையெனும் பெயரே வழியு மொழுக்கமும். | 935 |
நகமெனும் பெயரே மரப்பொதுப் பெயரும் உசிரு மலையும் உரைக்கப் பெறுமே. | 936 |
நவிர மெனும்பெயர் மலையி னுச்சியும் மலையும் புன்மையும் வகுத்தனர் புலவர். | 937 |
நயந்தோ னெனும்பெயர் நட்புடை யோனும் கணவனு மெனவே கருதப் பெறுமே. | 938 |
நகையெனும் பெயரே மகிழ்ச்சியும் ஒளியும் எயிறும் சிரிப்பும் இயம்புவர் புலவர். | 939 |
நவிரெனும் பெயரே யாண்பான் மயிரும் தக்கேசி யிசையு மருதயாழ்த் திறமும் வாளா யுதமும் வழங்கப் பெறுமே. | 940 |
நனையெனும் பெயரே பூவின் முகையும் நறவு மெனவே நவிலுவர் புலவர். | 941 |
நவிய மெனும்பெயர் மழுவும் குடாரியும். | 942 |
நயமெனும் பெயரே நன்மையுஞ் சுகமுமாம். | 943 |
நரையெனும் பெயரே ஆனி னேறும் வெண்ணிறக் குதிரையு மிகுபெறு நாரையும் கவரியுந் தவள நிறமும் கருதுவர். | 944 |
நளியெனும் பெயரே சீதமுஞ் செறிவும் பெருமையு முரைப்பர் பெரிது ணர்ந்தேரே. | 945 |
நரந்த மெனும்பெயர் நாரத்தை மரமும் கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே. | 946 |
நந்தெனும் பெயரே நத்தையுஞ் சங்குமாம். | 947 |
நடலை யெனும்பெயர் வஞ்சமும் பொய்யுமாம். | 948 |
நந்த லெனும்பெயர் ஆக்கமும் கேடுமாம். | 949 |
நகரெனும் பெயரே நகரமும் வீடுமாம். | 950 |
நத்த மெனும்பெயர் நகரின் கெடுதியும் இரவும் பணிலமு மிருளும் இயம்புவர். | 951 |
நன்றெனும் பெயரே நன்மையும் பெரிதுமாம். | 952 |
நட்ட மெனும்பெயர் நடனமும் கேடுமாம். | 953 |
நவிலல் எனும்பெயர் பண்ணுதல் சொல்லுதல். | 954 |
நக்க லெனும்பெயர் நகையுந் தின்றலும். | 955 |
நக்க னெனும்பெயர் சிவனும் அருக்கனும் நின்மா ணியுமென நிகழ்த்துவர் புலவர். | 956 |
நன்பெனும் பெயரே அகலமுந் தெளிவுமாம். | 957 |
நயனெனும் பெயரே இன்பமும் மகிழ்வும் பயனு நன்மையும் பகரப் பெறுமே. | 958 |
நகர அகர வருக்கம் முற்றும்.
நகர ஆகார வருக்கம்
நாழி யெனும்பெயர் உட்டுளை வடிவும் அளக்கு நாழியும் பூரட் டாதியும் நாழிகைப் பெயரு நவின்றனர் புலவர். | 959 |
நாக மெனும்பெயர் நன்மத யானையும் வெற்புங் கடவுள ருலகுங் காரியமும் ஒருமரப் பெயரும் குரங்கும் பாம்பும் நற்றூசும் புன்னைப் பெயரு நவிலுவர். | 960 |
நாவிதன் எனும்பெயர் பூர நாளும் கார்த்திகை நாளு மயிர்வினை ஞனுமாம். | 961 |
நாஞ்சில் எனும்பெயர் கலப்பைப் படையும் எயிலு றுப்புமென வியம்பப் பெறுமே. | 962 |
நாட்ட மெனும்பெயர் நயனமும் வாளும் பண்ணின் விகற்பமும் பகரப் பெறுமே. | 963 |
நாரி யெனும்பெயர் நறவும் பன்னாடையும் பெண்ணுஞ் சிலைநாண் பெயரும் பேசுவர். | 964 |
நாப்பண் எனும்பெயர் நடுவட் டேரும் நடுவு மெனவே நவிலப் பெறுமே. | 965 |
நான மெனும்பெயர் ஞானமும் பாசமும் பூசு வனவும் புனலா டுதலும் கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே. | 966 |
நாடி யெனும்பெயர் நாழிகை நரம்புமாம். | 967 |
நாகெனும் பெயரே யீனா விளமையும் இளமரக் கன்றும் சங்கும் நத்தையும் ஒருசார் விலங்கின் பெண்பாலு மோதுவர். | 968 |
நாணுனும் பெயரே மாதர் மங்கலமும் பூணு மிலச்சையுங் கயிறும் புகலுவர். | 969 |
நாரெனும் பெயரே அன்பும் கயிறுமாம். | 970 |
நாறுதல் எனும்பெயர் உண்டாதல் மணமுமாம். | 971 |
நான்முகன் எனும்பெயர் அருகனும் பிரமனும். | 972 |
நகர ஆகார வருக்கம் முற்றும்.
நகர இகர வருக்கம்
நிறையெனும் பெயர்துலா ராசிப் பெயரும் துலையு நீர்ச்சாலு மழியா நிலைமையும். | 973 |
நிசியெனும் பெயரே கங்குற் பொழுதும் மஞ்சளும் பொன்னும் வகுக்கப் பெறுமே. | 974 |
நிதம்ப மெனும்பெயர் மலையின் பக்கமும் அல்குலின் பெயரு மாகு மென்ப. | 975 |
நியமம் எனும்பெயர் நியதியு நகரமும் தெருவும் அங்காடியுந் தேவரா லையமும் நிச்சயப் பெயரும் நிகழ்த்துவர் புலவர். | 976 |
நிருமித்த லென்னும் பெயரா ராய்தலும் படைத்தலு மெனவே பகர்ந்தனர் புலவர். | 977 |
நிறமெனும் பெயரே நிறங்களு மார்பும் காந்தியு மெனவே கருதுவர் புலவர். | 978 |
நிரப்பு எனும்பெயர் குறைபாடும் வறுமையும். | 979 |
நிழற்ற லெனும்பெயர் நிழற்செய லுடனே நுணுக்க மெனவே நுவன்றனர் புலவர். | 980 |
நகர இகர வருக்கம் முற்றும்.
நகர ஈகார வருக்கம்
நீலி யெனும்பெயர் பாலைக் கிழத்தியும் கருநிற முமொரு புதலுங் கருதுவர். | 981 |
நீரெனும் பெயரே நீர்மையும் புனலும் பூராட நாளும் புகலப் பெறுமே. | 982 |
நீப மெனும்பெயர் உத்திரட் டாதியும் நிமித்தமும் கடம்பு நிகழ்த்துவர் புலவர். | 983 |
நீவி யெனும்பெயர் ஆடையுந் துடைத்தலும் நெருங்கிய கொய்சகப் பெயரு நிகழ்த்துவர். | 984 |
நகர ஈகார வருக்கம் முற்றும்.
நகர உகர வருக்கம்
நுதலெனும் பெயரே நெற்றியும் புருவமும். | 985 |
நுணங்க லெனும்பெயர் நுண்மையுந் தேமலும். | 986 |
நுனியெனும் பெயரே நுண்மையும் நுனியுமாம். | 987 |
நுணவை யெனும்பெயர் நுண்பிண் டியினுடன் எண்ணோ லையுமென இயம்பப் பெறுமே. | 988 |
நுவணை யெனும் பெயர் தினையின் பிண்டியும் நூலு நுண்மையு நுவன்றனர் புலவர். | 989 |
நகர உகர வருக்கம் முற்றும்.
நகர ஊகார வருக்கம்
நூலோ ரெனும்பெய ரந்தண ருடனே மந்திரி யர்பெயர் புலவோரும் வழங்குவர். | 990 |
நூழி லெனும்பெயர் யானையுங் கோறலும் கொடியின் பெயரும் கொடிக்கொற் றானும் பொடியின் பெயரும் புகன்றனர் புலவர். | 991 |
நூலெனும் பெயரே வேத நூலொடு சாத்திர விகற்பமும் தந்தும் பேசுவர். | 992 |
நூண மெனும்பெயர் குறைவு நிச்சயமுமாம். | 993 |
நகர ஊகார வருக்கம் முற்றும்.
நகர எகர வருக்கம்
நெறியெனும் பெயரே நீதியும் வழியுமாம். | 994 |
நெற்றி யெனும்பெயர் நெடும்படை யுறுப்பும் நுதலு மெனவே நுவன்றனர் புலவர். | 995 |
நெய்தலின் பெயரோர் நிலமும் கடலும் நெய்தற் பூவொடு சாப்பறை நிகழ்த்துவர். | 996 |
நகர எகர வருக்கம் முற்றும்.
நகர ஏகார வருக்கம்
நேத்திர மெனப்பெயர் பட்டின் விகற்பமும் கண்ணு மெனவே கருதப் பெறுமே. | 997 |
நேய மெனும்பெயர் நெய்யும் எண்ணெயும் அன்பின் பெயரு மாமென வுரைப்பர். | 998 |
நேமி யெனும்பெயர் திகிரியும் வண்டிலும் பூமியும் புணரியும் புகலப் பெறுமே. | 999 |
நேரெனும் பெயரே கொடுத்தலும் பாதியும் தனிமையும் நிகரும் நுட்பமுடன் பரஞ்சமமு மிகுதியுந் தலைப்படல் விலையு மாமே. | 1000 |
நகர ஏகார வருக்கம் முற்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வடமலை நிகண்டு, Vadamalai Nigandu, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்