தண்டியலங்காரம்
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணம் இல்லாமல் எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும். காவியதர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி இது எழுதப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்களில் ஒன்று ஆகும். இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார்.
தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் கி.பி.946 முதல் 1070 வரை இருக்கலாம்.
விரோதவணி
82. | மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை
விளைவுதர வுரைப்பது விரோத மாகும். |
மாறுபடுபுகழ்நிலைவணி
83. | கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு
வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை. |
புகழாப் புகழ்ச்சியணி
84. | பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி. |
நிதரிசனவணி
85. | ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப்
புகழ்மை தீமை யென்றிவை புலப்பட நிகழ்வ தாயி னிதரிசன மதுவே. |
புணர்நிலையணி
86. | வினைபண் பெனவிவை யிருபொருட் கொன்றே புணர மொழிவது புணர்நிலை யாகும். |
பரிவருத்தனையணி
87. | பொருள் பரிமாறுதல் பரிவருத் தனையே. |
வாழ்த்தணி
88. | இன்னார்க் கின்ன தியைக வென்றுதா
முன்னியது கிளத்தல் வாழ்தென மொழிய. |
சங்கீரணவணி
89. | மொழியப் பட்ட வணிபல தம்முள்
டழுவ வுரைப்பது சங்கீ ரணமே. |
உவமை உருவகங்கட்கு புறநடை
90. | ஒப்புமை யில்லது மையமு முவமையிற்
செப்பிய திறமு முவமை யுருவகமும் உருவகத் தடக்கலு முணர்ந்தனர் கொளலே. |
பாவிகவணி
91. | பாவிக மென்பது காப்பியப் பண்பே. |
3. சொல்லணியியல்
92. | எழுத்தின் கூட்ட மிடைபிறி தின்றியும்
பெயர்த்தும்வேறு பொருடரின் மடக்கெனும் பெயர்த்தே. |
93. | அதுதான், ஓரடி முதலா நான்கடி காறும் சேரு மென்ப தெளிந்திசி னோரே. |
94. | ஆதி யிடைகடை யாதியோ டிடைகடை இடையொடு கடைமுழு தெனவெழு வகைத்தே. |
95. | ஓரடி யொழிந்தன தேருங் காலை இணைமுதல் விகற்ப மேழு நான்கும் அடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும். |
96. | அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே. |
97. | ஓரெழுத்து மடக்கலு முரித்தென மொழிப. |
சித்திர கவி வறுமாறு
98. | கோமூத் திரியே கூட சதுக்கம் மாலை மாற்றே யெழுத்து வருத்தனம் நாக பந்தம் வினாவுத் தரமே காதை கரப்பே கரந்துரைச் செய்யுள் சக்கரஞ் சுழிகுளஞ் சருப்பதோ பத்திரம் அக்கரச் சுதகமு மவற்றின் பால. |
வழுக்களின் வகைகள்
99. | பிரிபொருட் சொற்றொடர் மாறுபடு பொருண்மொழி மொழிந்தது மொழிவே கவர்படு பொருண்மொழி நிரனிறை வழுவே சொல்வழு யதிவழு செய்யுள் வழுவொடு சந்தி வழுவென வெய்திய வொன்பது மிடனே காலம் கலையே யுலக நியாய மாகம மலைவுமுள் ளுறுத்தவும் வரைந்தனர் புலவர். |
பிறன்கோட்கூறி மறுத்தல்
100. | மேற்கோ ளேது வெடுத்துக் காட்டென ஆற்றுளிக் கிளக்கு மவற்றது வழுநிலை நிரம்ப வுணர்த்த வரம்பில வென்ப. |
பிரிபொருட் சொற்றொடர்
101. | அவற்றுள், பிரிபொருட் சொற்றொடர் செய்யுண் முழுவதும் ஒருபொருள் பயவா தொரீஇத் தோன்றும். |
இதற்குச் சிறப்பு விதி
102. | களியினும் பித்தினுங் கடிவரை யின்றே. |
மாறுபடு பொருண் மொழி
103. | மாறுபடு பொருண் மொழி முன்மொழிந் ததற்கு மாறுபடத் தோன்றி வருமொழித் தாகும். |
சிறப்பு விதி
104. | காமமு மச்சமுங் கைம்மிகி னுரித்தே. |
மொழிந்தது மொழிவு
105. | மொழிந்தது மொழிவே கூறியது கூறி
வேறுபட வொருபொருள் விளங்கா தாகும். |
சிறப்பு விதி
106. | விரைவினுஞ் சிறப்பிணும் வரைவின் றதுவே. |
கவர்படு பொருண்மொழி
107. | ஒருபொரு டுணிய வுரைக்க லுற்றசொல் இருபொருட் கியைவது கவர்படு பொருண்மொழி. |
சிறப்பு விதி
108. | வழூஉப்பட லில்வழி வரைவின் றதுவே. |
நிரனிறை வழு
109. | ஒருநிரன் முன்வைத் ததன்பின் வைக்கும்
நிரனிறை பிறழ்வது நிரனிறை வழுவே. |
சிறப்பு விதி
110. | உய்த்துணர வரும்வழி யவவாறு முரித்தே. |
சொல் வழு
111. | சொல்வழு வென்பது சொல்லிலக் கணத்தொடு புல்லா தாகிய புகர்படு மொழியே. |
சிறப்பு விதி
112. | வழக்கா றாயின் வழுவின் றதுவெ. |
யதி வழு
113. | யதிவழு வென்ப தோசை யறுவழி
நெறிப்பட வாரா நிலைமைய தென்ப. |
சிறப்பு விதி
114. | வகையுளி யுரைப்புழி வரைவின் றதுவே. |
செய்யுள் வழு
115. | செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ டெய்த லில்லா வியல்பிற் றாகும். |
சிறப்பு விதி
116. | ஆரிடத் துள்ளு மவைபோல் பவற்றுளு நேரு மென்ப நெறியுணர்ந் தோரே. |
சந்தி வழு
117. | சந்தி வழுவே யெழுத்திலக் கணத்துச்
சந்தியொடு முடியாத் தன்மைத் தாகும். |
சிறப்பு விதி
118. | இரண்டாம் வேற்றுமைக் கெதிர்மறுத்தும் வருமே. |
மலைவு
இடமலைவு
119. | இடமென படுபவ மலைநாடி யாறே. |
கால மலைவு
120. | காலம் பொழுதொடு பருவமென் றிரண்டே. |
கலை மலைவு
121. | கலையெனப் படுபவை காண்டக விரிப்பிற் காமமும் பொருளு மேமுறத் தழுவி மறுவறக் கிளத்த வறுபத்து நான்கே. |
உலக மலைவு
122. | உலகெனப் படுவதீண் டொழிக்கின் மேற்றே. |
நியாய மலைவு
123. | நியாய மென்பது நெறியுறக் கிளக்கின்
அளவயிற் றெளிக்கும் விளைபொருட் டிறமே. |
ஆகம மலைவு
124. | ஆகம மென்பன மநுமுத லாகிய அறனொடு புணர்ந்த திறனறி நூலே. |
இடமலைவு முதலியவற்றிற்கு சிறப்பு விதி
125. | கூறிய நெறியி னாறுவகை மலைவு
நாடக வழக்கி னாட்டுதற் குரிய. |
புறநடை
126. | மெய்பெற விரித்த செய்யுட் டிறனு மெய்திய நெறியு மீரைங் குணனும் ஐயெழு வகையி னறிவுறு மணிய மடியினுஞ் சொல்லினு மெழுத்தினு மியன்று முடிய வந்த மூவகை மடக்கும் கோமூத் திரிமுதற் குன்றா மரபி னேமுற மொழிமிறைக் கவியீ ராறு மிவ்வகை யியற்றுதல் குற்ற மிவ்வகை யெய்த வியம்புத லியல்பென மொழிந்த வைவகை முத்திறத் தாங்கவை யுளப்பட மொழிந்த நெறியி னொழிந்தவுங் கோட லான்ற காட்சிச் சான்றோர் கடனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தண்டியலங்காரம், Thandi Alangaram, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்