தண்டியலங்காரம்
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணம் இல்லாமல் எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும். காவியதர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி இது எழுதப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்களில் ஒன்று ஆகும். இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார்.
தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் கி.பி.946 முதல் 1070 வரை இருக்கலாம்.
1. பொதுவணியியல்
தற்சிறப்புப் பாயிரம்
1. | சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியே. |
நூல்
செய்யுள்வகை
2. | செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின் முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென எத்திறத் தனவு மீரிண் டாகும். |
முத்தகச்செய்யுள்
3. | அவற்றுள், முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும். |
குளகச் செய்யுள்
4. | குளகம் பலபாட் டொருவினை கொள்ளும். |
தொகைநிலைச் செய்யுள்
5. | தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின் ஒருவ ருரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருளிடங் காலந் தொழிலென நான்கினும் பாட்டினு மளவினுங் கூட்டிய வாகும். |
தொடர்நிலைச் செய்யுள்
6. | பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை |
பொருள்தொடர்நிலைச் செய்யுளின் பகுப்பு
7. | பெருங்காப் பியமே காப்பிய மென்றாங் கிரண்டா யியலும் பொருள்தொடர் நிலையே. |
பெருங்காப்பியம்
8. | அவற்றுள்,
பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன் றேற்புடைத் தாகி முன்வர வியன்று நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் - 5 தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்ததாய் மலைகட னாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றமேன் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல் - 10 தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரத் தூது செலவிகல் வென்றி சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம் - 15 பரிசசேத மென்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப. |
பெருங்காப்பிய இலக்கணத்திற்கு ஓரு புறநடை
9. | கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும் வேறுபா டின்றென விளம்பினர் புலவர். |
காப்பியம்
10. | அறமுத னான்கினுங் குறைபா டுடையது காப்பிய மென்று கருதப் படுமே. |
காப்பியங்கட்கோர் இலக்கணம்
11. | அவைதாம், ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையம் பாடையும் விரவியும் வருமே. |
சொற்றொடர்நிலைச் செய்யுள்
12. | செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே. |
செய்யுள்நெறி
13. | மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு வைதருப் பம்மே கெளட மென்றாங் கெய்திய நெறிதா மிருவகைப் படுமே. |
வைதருப்பநெறி
14. | செறிவே தெளிவே சமநிலை யின்பம் ஒழுகிசை யுதார முய்த்தலில் பொருண்மை காந்தம் வலியே சமாதி யென்றாங் காய்ந்த வீரைங் குணனு முயிரா வாய்ந்த வென்ப வைதருப் பம்மே. |
கெளடநெறி
15. | கெளட மென்பது கருதிய பத்தொடும் கூடா தியலுங் கொள்கைத் தென்ப. |
16. | செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை. |
தெளிவு
17. | தெளிவெனப் படுவது பொருள் புலப்பாடே. |
சமநிலை
18. | விரவத் தொடுப்பது சமநிலை யாகும். |
இன்பம்
19. | சொல்லினும் பொருளினும் சுவைபட லின்பம். |
ஒழுகிசை
20. | ஒழுகிசை யென்பது வெறுத்திசை யின்மை. |
உதாரம்
21. | உதார மென்ப தோதிய செய்யுளிற் குறிப்பி னொருபொரு ணெறிப்படத் தோன்றல் |
உய்த்தலில் பொருண்மை
22. | கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற் குரியசொல் லுடைய துய்த்தலில் பொருண்மை. |
காந்தம்
23. | உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம் |
வலி
24. | வலியெனப் படுவது தொகைமிக வருதல். |
சமாதி
25. | உரியபொரு ளின்றி யொப்புடைப் பொருண்மேற் றரும்வினைப் புணர்ப்பது சமாதியாகும். |
இவ்வியலுக்குப் புறநடை
26. | ஏற்ற செய்யுட் கியன்ற வணியெலாம் முற்ற வுணர்த்தும் பெற்றிய தருமையிற் காட்டிய நடைநெறி கடைபிடித் திவற்றொடு கூட்டி யுணர்த லான்றோர் கடனே. |
2. பொருளணியில்
காப்பு
27. | என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கும்
அன்னை யுடைய வடித்தளிர்கள் - இன்னளிசூழ் மென்மலர்க்கே கன்று மெனவுரைப்பர் மெய்யிலா வன்மனத்தே தங்குமோ வந்து. |
பொருளணிகள்
28. | தன்மை யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பே வேற்றுமை விபாவனை ஒட்டே யதிசயந் தற்குறிப் பேற்றம் ஏது நுட்ப மிலேச நிரனிரை ஆர்வ மொழிசுவை தன்மேம் பாட்டுரை பரியா யம்மே சமாயித முதாத்தம் அரிதுண ரவநுதி சிலேடை விசேடம் ஒப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோதம் மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி நிதரிசனம் புணர்நிலை பரிவருத் தனையே வாழ்த்தொடு சங்கீ ரணம்பா விகமிவை ஏற்ற செய்யுட் கணியே ழைந்தே. |
தன்மையணி
29. | எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்கும் சொன்முறை தொடுப்பது தன்மை யாகும். |
30. | அதுவே, பொருள்குணஞ் சாதி தொழிலொடு புலனாம். |
உவமையணி
31. | பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த் தொப்புமை தோன்றச் செப்புவ துவமை. |
உவமை வகை
32. | அதுவே, விரியே தொகையே யிதர விதரம் உரைபெரு சமுச்சய முண்மை மறுபொருள் புகழ்த னிந்தை நியம மநியமம் ஐயந் தெரிதரு தேற்ற மின்சொல் எய்திய விபரீத மியம்புதல் வேட்கை பலபொருள் விகார மோக மபூதம் பலவயிற் போலி யொருவயிற் போலி கூடா வுவமை பொதுநீங் குவமை மாலை யென்னும் பால தாகும். |
33. | அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்
ஒப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம் விலக்கே யேதுவென வேண்டவும் படுமே. |
34. | மிகுதலுங் குறைதலுங் தாழ்தலுந் முயர்தலும்
பான்மாறு படுதலும் பாகுபா டுடைய. |
35. | போல மான புரையப் பொருவ நேரக் கடுப்ப நகர நகர்ப்ப ஏர வேய மலைய வியைய ஒப்ப வெள்ள வுறழ வேர்ப்ப அன்ன வனைய வமர வாங்க என்ன விகல விழைய வெதிரத் துணைதூக் காண்டாங்கு மிகுதகை வீழ இணைசிவண் கேழற்றுச் செத்தொடு பிறவு நவைதீர் பான்மை யுவமைச் சொல்லே. |
உருவகவணி
36. | உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித் தொன்றன மாட்டினஃ துருவக மாகும். |
37. | தொகையே விரியே தொகைவிரி யெனாஅ இயைபே யியைபிலி வியநிலை யெனாஅச் சிறப்பே விரூபகஞ் சமாதா னமெனாஅ உருவக மேக மநேகாங் கமெனாஅ முற்றே யவயவ மவயவி யெனாஅச் சொற்றவைம் மூன்று மற்றதன் விரியே. |
38. | உவமை யேது வேற்றுமை விலக்கே அவநுதி சிலேடையென் றவற்றொடும் வருமே. |
புறநடை
39. | உருவக முவமை யெனவிரு திறத்தவும் நிறம்ப வுணர்த்தும் வரம்புதமக் கின்மையிற் கூறிய நெறியின் வேறுபட வருபவை தேறினர் கோடல் தெள்ளியோர் கடனே. |
தீவகவணி
40. | குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல் ஒருவயி னின்றும் பலவயிற் பொருடரிற் றீவகஞ் செய்யுண் மூவிடத் தியலும். |
41. | அதுவே, மாலை விருத்த மொருபொருள் சிலேடையென நால்வகை யானு நடைபெறு மென்ப. |
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தண்டியலங்காரம், Thandi Alangaram, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்