தண்டியலங்காரம்
தமிழில் ஐவகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவற்றில் அணி இலக்கணம் இல்லாமல் எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும். காவியதர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி இது எழுதப்பட்டது. இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார். இது உரைதருநூல்களில் ஒன்று ஆகும். இலக்கணம் இயற்றிய ஆசிரியரே இலக்கணத்துக்கு உரை மேற்கோள்களாகத் தாமே பாடல்களையும் இயற்றி உரையுடன் இணைத்துள்ளார்.
தமிழ்த் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் கி.பி.946 முதல் 1070 வரை இருக்கலாம்.
பின்வருநிலையணி
42. | முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற்
பின்வரு மென்னிற் பின்வரு நிலையே. |
முன்னவிலக்கணி
43. | முன்னத்தின் மருப்பினது முன்ன விலக்கே
மூவகை காலமு மேவிய தாகும். |
44. | அதுவே, பொருள்குணங் காரணங் காரியம் புணரும். |
45. | வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி துணைசெயல் முயற்சி பரவச முபாயம் கையற லுடன்படல் வெகுளி யிரங்கல் ஐய மென்றாங் கறிந்தனர் கொளலே. |
இதுவுமது
46. | வேற்றுப்பொருள் சிலேடை யேதுவென் றின்னவை
மேற்கூ றியற்கையின் விளங்கித் தோன்றும. |
வேற்றுப்பொருள் வைப்பணி
47. | முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப்
பின்னொரு பொருளை யுலகறி பெற்றி ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே. |
48. | முழுவதுஞ் சேற லொருவழிச் சேறல்
முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல் கூடா வியற்கை கூடு மியற்கை இருமை யியற்கை விபரீதப் படுத்தலென் றின்னவை யெட்டு மதன தியல்பே. |
வேற்றுமையணி
49. | கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே. |
50. | அதுவே, குணம்பொருள் சாதி தொழிலொடும் புணரும். |
விபாவனையணி
51. | உலகறி காரண மொழித்தொன் றுரைப்புழி வேறொரு காரண மியல்பு குறிப்பின் வெளிப்பட உரைப்பது விபாவனை யாகும். |
ஒட்டணி
52. | கருதிய பொருடொத் ததுபுலப் படுத்தற்
கொத்ததொன் றுரைப்பினஃ தொட்டென மொழிப. |
ஒட்டணி வகை
53. | அடையும் பொருளு மயல்பட மொழிதலும்
அடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும் விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும் எனநால் வகையினு மியலு மென்ப. |
அதிசயவணி
54. | மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி உலகுவரம் பிறவா நிலைமைத் தாகி ஆன்றோர் வியப்ப தோன்றுவ ததிசயம். |
அதிசயவணி வகை
55. | அதுதான், பொருள்குணந் தொழிலைந் துணிவே திரிபெனத் தெருளுறத் தோன்று நிலைமைய தென்ப. |
தற்குறிப்பேற்றவணி
56. | பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினும்
இயல்பின் விளைதிற னன்றி யயலொன்று தான்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம். |
57. | அன்ன போலெனு மவைமுத லாகிய
சொன்னிலை விளக்குந் தோற்றமு முடைத்தே. |
ஏதுவணி
58. | யாதன் திறத்தினு மிதனினிது விளைந்தென்
றேதுவிதந் துரைப்ப தேது வதுதான் காரக ஞாபக மெனவிரு திறப்படும். |
59. | முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியும்
ஏற்பது நீக்கமு மெனவிவை காரகம். |
ஞாபகவேது
60. | அவையல பிறவி னறிவது ஞாபகம். |
அபாவவேது
61. | அபாவந் தானு மதன்பாற் படுமெ. |
62. | என்று மபாவமு மின்மய தபாவமும் ஒன்றினொன் றபாவமு முள்ளத னபாவமும் அழிவுபாட் டபாவமு மெனவைந் தபாவம். |
சித்திரவேது
63. | தூர காரியமு மொருங்குடன் றோற்றமும்
காரண முந்துறூஉங் காரிய நிலையும் யுத்தமு மயுத்தமு முத்தையோ டியலும். |
நுட்பவணி
64. | தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினும் அரிதுணர் வினைத்திற நுட்ப மாகும். |
இலேசவணி
65. | குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின் மறைத்துரை யாட லிலேச மாகும். |
இதுவுமது
66. | புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும் அவையு மன்னதென் றறைகுந ருளரே. |
நிரனிறையணி
67. | நிரனிருத் தியற்றுத னிரனிறை யணியே. |
ஆர்வமொழியணி
68. | ஆர்வ மொழிமிகுப்ப தார்வ மொழியே. |
சுவையணி
69. | உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற எண்வகை மெய்ப்பாட்டி னியல்வது சுவையே. |
70. | அவைதாம்,
வீர மச்ச மிழிப்பொடு வியப்பே காம மவல முருத்திர நகையே. |
தன்மேம்பாட்டுரையணி
71. | தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை. |
பரியாயவணி
72. | கருதியது கிளவா தப்பொரு டோ ன்றற்
பிரிதொன் றுரைப்பது பரியா யம்மே. |
சமாகிதவணி
73. | முந்துதான் முயல்வுறூஉந் தொழிற்பயன் பிறிதொன்று
தந்ததா முடிப்பது சமாகித மாகும். |
உதாத்தவணி
74. | வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப துதாத்த மாகும். |
அவநுதியணி
75. | சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை
மறுத்துப் பிறிதுரைப்ப தவநுதி யாகும். |
சிலேடையணி
76. | ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும். |
77. | அதுவே, செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும். |
78. | ஒருவினை பலவினை முரண்வினை நியமம் நியம விலக்கு விரோத மவிரோதம் எனவெழு வகையினு மியலு மென்ப. |
விசேடவணி
79. | குணந்தொழின் முதலிய குறைபடு தன்மையின் மேம்பட வொருபொருள் விளம்புதல் விசேடம். |
ஒப்புமைக்கூட்டவணி
80. | கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத் தொருபொரு ளுரைப்ப தொப்புமைக் கூட்டம். |
81. | புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தண்டியலங்காரம், Thandi Alangaram, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்