நேமிநாதம்
நேமிநாதம் என்பது தமிழின் இலக்கண நூல்களில் ஒன்று ஆகும். 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பழைய இலக்கண நூல்களைப் போலன்றி சுருக்கமாக எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர் ஆவார். சமண சமயத்தைச் சேர்ந்தவரான இவர், 22 ஆவது நேமிநாதர் எனும் தீர்த்தங்கரர் மீது பக்தி கொண்டவர் இதனால் தனது நூலுக்கு நேமிநாதம் எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகின்றது. சுருக்கமான நூல் ஆதலால் சின்னூல் என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.
பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் - ஓங்கிய கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால் ஒள்ளிழையாய் தோன்றலு முண்டு. | 36 |
ஆய்ந்த வுயர்திணைபேர் ஆவோவாஞ் செய்யுளிடை
ஏய்ந்தநிகழ் காலத் தியல்வினையால் - வாய்ந்த உயர்திணைப் பாலொருமை தோன்றும்விர வுப்பேர் இயலும் வழக்கி னிடத்து. | 37 |
2.6. வினை மரபு
இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்க ளேற்றுங்
குறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய் முற்றெச்சம் என்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து. | 38 |
அம்மாமெம் மேமுங் கடதறமேல் ஆங்கணைந்த
உம்மும் உளப்பாட்டுத் தன்மையாந் - தம்மொடு புல்லுங் குடுதுறவும் என்னேனும் பொற்றொடியாய் அல்லுந் தனித்தன்மை யாம். | 39 |
ஆங்குரைத்த அன்னானும் அள்ளாலும் அர்ஆர்ப
பாங்குடைய முப்பாற் படர்கையாந் - தேங்குழலாய் யாரேனுஞ்சொன் முப்பாற்கு மெய்தும் ஒருவரென்ப தோரு மிருபாற் குறித்து. | 40 |
சொன்னஅ ஆவத் துடுறுவும் அஃறிணையின்
பன்மை பெருமைப் படர்க்கையாம் - பின்னை யெவென்ன வினாவவ் விருபாற் பொருட்குஞ் சிவணுதலாந் தொன்னூல் தௌிவு. | 41 |
மின்னும்இர் ஈரும் விளம்பும் இருதிணையின்
முன்னிலை பன்மைக்காம் மொய்குழலாய் - சொன்ன ஒருமைக்கண் முன்னிலையாம் இஐஆய் உண்சேர் பொருவென் பனவும் புகல். | 42 |
செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்
செய்பு செயின்செயற் கென்பனவும்- மொய்குழலாய் பின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச் சொன்முன் வகுத்தோர் துணிவு. | 43 |
ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
வேறில்லை யுண்டு வியங்கோளுந் தேறும் இடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும் உடனொன்றிச் சேறலு முண்டு. | 44 |
சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாமடுக்கித்
தேற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் - ஏற்றபொருள் குன்றாச் சிலசொல் லிடைவந்து கூடியுடன் இன்றாதன் மெய்ந்நூ னெறி. | 45 |
நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
கடியன் மதத்தன் கரியன் - தொடியனென ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணியுயிர் திணையின் நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு. | 46 |
கரிதரிது தீது கடிது நெடிது
பெரிதுடைத்து வெய்து பிறிது - பரிதென்ப ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின் மேய வினைகுறிப்பா மிக்கு. | 47 |
சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்
அன்றியா வோவாகி யாயோயாய் - நின்றனவும் மொய்குழலாய் முன்னிலைமுன் ஈஏயும் எண்டொகையும் மெய்தும் கடப்பாட் டின. | 48 |
இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
வசையிலா மூன்று வரம்பாம் - அசைநிலை ஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம்பிரியா வேந்திரட்டைச் சொற்க ளிரட்டு. | 49 |
2. 7. இடைச்சொல் மரபு
சாரியையா யொன்றல் உருபாதல் தங்குறிப்பி
னேரும் பொருளாத னின்றசையாய்ப் - பேர்தல் வினைச்சொற்கு ஈறாதல் இசைநிறைத்து மேவல் அனைத்தே இடைச்சொ லளவு. | 50 |
தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்சம் முற்றெண்
ணரிதா மெதிர்மறையே யையந் - தருமும்மை தேற்றம் வின்வெண் ணெதிர்மறையுந் தேமொழியாய் ஈற்றசையும் ஏகார மென். | 51 |
காண்டகுமன் னுாக்கங் கழிவே யொழியிசைகொன்
னாண்டறிகா லம்பெருமை யச்சமே - நீண்ட பயநின்மை தில்லை பருவம் விழைவு நயனில் ஒழியிசைபு நாட்டு. | 52 |
வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
எனவென் றிரண்டு மியலும் - நினையுங்கான் மன்றவெனுஞ் சொற்றேற்றந் தஞ்சம் எளிமையாம் என்றா எனாவிரண்டு மெண். | 53 |
சிறப்பும் வினாவுந் தெரிநிலையும் எண்ணும்
உருப்பி னெதிர்மறையி னோடும் - வெறுத்த வொழியிசையும் ஈற்றசையும் ஓகாரஞ் சொல்லா வொழிபொருளுஞ் சார்த்தி யுணர். | 54 |
2.8. உரிச்சொல் மரபு
ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை
பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர் பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான் பலபொருட் கேற்றவும் பட்டு. | 55 |
கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம்
நம்பொடு மேவு நசையாகும் - வம்பு நிலையின்மை பொன்மை னிறம்பசலை என்ப விலைநொடை வாளொளியாம் வேறு. | 56 |
விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர் கரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந் தெரிக்கிற் கடிசொற் றிறம். | 57 |
வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
யைம்மையெய் யாமை யறியாமை - கொம்மை யிளமை நளிசெறிவாம் ஏயேற்றம் மல்லல் வளமை வயம்வலியாம் வந்து. | 58 |
புரையுயர் பாகும் புனிறீன் றணிமை
விரைவாங் கதழ்வுந் துனைவுங் - குரையொலியாஞ் சொல்லுங் கமமுந் துவன்று நிறைவாகும் எல்லும் விளக்க மெனல். | 59 |
2.9 எச்ச மரபு
வேற்றுமை யும்மை வினைபண் புவமையுந்
தோற்றிய வன்மொழியுந் தொக்கவிடத் - தேற்ற இருசொல்லும் ஒன்றாம் இலக்கணத்தாற் பல்சொல் ஒருசொல்லாய் சேரலு முண்டு. | 60 |
உருபுவமை யும்மை விரியி னடைவே
யுருபுவமை யும்மைத் தொகையாம் - ஒருகாலந் தோன்றின் வினைத்தொகையாம் பண்புமிரு பேரொட்டுந் தோன்றுமேற் பண்புத்தொகை. | 61 |
ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண்
ஆன பெயர்தோன்றின் அன்மொழியாம் - மானனையாய் செய்யுமெனும் பேரெச்சத் தீற்றின்மிசைச் சில்லுகர மெய்யொடும்போம் ஒற்றொடும்போம் வேறு. | 62 |
முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும்
அன்மொழியு மென்றிவற்றில் ஆம்பொருள்கண் - முன்மொழிதான் கால மிடத்தாற் கருத்தோடுஞ் சேர்த்தறிதன் மேலையோர் கண்ட விதி. | 63 |
உலவி லுயிர்திணைமே லும்மைத் தொகைதான்
பலர்சொன் னடைத்தாய்ப் பயிலுஞ் - சிலைநுதலாய் முற்றும்மை யெச்சப் படுதலுமுண் டாமிடைச்சொன் நிற்றலுமுண் டிறு திரிந்து. | 64 |
இன்னரென முன்னத்தாற் சொல்லுத லென்றசென்ற
வென்னு மவையன்றி யிட்டுரைத்த - தன்வினையாற் செய்யப் படும்பொருளைச் செய்ததெனச் சொல்லுதலும் எய்தப் படும்வழக்கிற்கு கீங்கு. | 65 |
மெலித்தல்குறுக்கல் விரித்தல் தொகுத்தல்
வலித்தலே நீட்டல் வரினும் - ஒலிக்கும் வரிவளாய் தொல்குறைச்சொல் வந்திடினும் உண்மை தெரிதலாங் கற்றோர் செயல். | 66 |
அடிமொழி சுண்ண நிரனிறை விற்பூட்
டடிமறி யாற்று வரவுந் - துடியடையாய் தாப்பிசை தாவின் மொழிமாற் றளைமறி பாப்புப் பொருளொடொன் பான். | 67 |
சொல்லாற் றெரிதல் குறிப்பினாற் றோன்றுதலென்
றெல்லாப் பொருளு மிரண்டாகும் - மெல்லியலாய் தொன்மொழியுன் மந்திரமுஞ் சொற்பொருள் தோன்றுதலின் இன்மையு முண்மையுமா மீங்கு. | 68 |
முந்துரைத்த காலங்கண் முன்று மயங்கிடினும்
வந்தொருமை பன்மை மயங்கினும் - பைந்தொடியாய் சான்றோர் வழக்கினையுஞ் செய்யுளுஞ் சார்ந்தியலின் ஆன்ற மரபா மது. | 69 |
புல்லா வெழுத்தின் கிளவிப் பொருள்படினும்
இல்லா இலக்கணத்த தென்றொழிக - நல்லாய் மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியா தொழிந்தனவுஞ் சார்த்தி யுரை. | 70 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேமிநாதம், Neminatham, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்