நேமிநாதம்
நேமிநாதம் என்பது தமிழின் இலக்கண நூல்களில் ஒன்று ஆகும். 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பழைய இலக்கண நூல்களைப் போலன்றி சுருக்கமாக எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர் ஆவார். சமண சமயத்தைச் சேர்ந்தவரான இவர், 22 ஆவது நேமிநாதர் எனும் தீர்த்தங்கரர் மீது பக்தி கொண்டவர் இதனால் தனது நூலுக்கு நேமிநாதம் எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகின்றது. சுருக்கமான நூல் ஆதலால் சின்னூல் என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.
பாயிரம்
கடவுள் வாழ்த்து
பூவின்மேல் வந்தருளும் புங்கவன்தன் பொற்பாதம் நாவினால் நாளும் நவின்றேத்தி - மேவுமுடி பெல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச் சொல்லால் உரைப்பன் தொகுத்து. |
அவையடக்கம்
உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல் நல்லாரைச் சேர்ந்தலால் நான்சொன்ன புன்சொல்லும் எல்லோரும் கைகொள்வர் ஈங்கு. |
1. எழுத்ததிகாரம்
ஆவி அகரமுதல் ஆயிரண்டாய் ஆய்தமிடை
மெவுங் ககரமுதன் மெய்களாம் - மூவாறுங் கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று நண்ணுமுதல் வைப்பாகு நன்கு. | 1 |
ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம்
ஏன்றமெய்ம் மூவாறும் எண்ணுங்கால் - ஊன்றிய வன்மையே மென்மை யிடைமையாம் வாட்கண்ணாய் தொன்மை முயற்சியால் தொக்கு. | 2 |
ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய்
ஆங்கிரு நூற்றொருபத் தாறாகும் - பாங்குடைய வல்லொற்று மெல்லொற்று வர்க்கம் அளபெடைகள் சொல்லொற்றி நீட்டத் தொகும். | 3 |
தொடர்நொடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்பு
அடைய வருமிகரம் அன்றி - மடநல்லாய் மும்மையிடத் தையௌவுங் குன்றுமுன் னொற்றுண்டேற் செம்மையுயிர் ஏறுஞ் செறிந்து | 4 |
குறில்நெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாங்
குறுகுமவ் வாய்தம் உயிர்மெய் - பெறுமுயிரே மெய்யாய்தம் இஉக் குறுக்கமரை மென்மொழியாய் ஐஔ வளவொன் றரை. | 5 |
உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து
கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து - வந்தபின் நாசிநா அண்ணம் இதழெயிறு மூக்கெனப் பேசும் எழுத்தின் பிறப்பு. | 6 |
காட்டு முயிருங் கசதநப மவ்வரியும்
ஈட்டிய வவ்வரியி னெட்டெழுத்தும் - ஈட்டு ஞயவின்கண் மும்மூன்று நன்மொழிக்கு முன்னென்று அயர்விலார் கட்டுரைத்தார் ஆய்ந்து. | 7 |
உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை இம்மூன்று
அயர்வில் இடையினங்க ளாறும் - நயனுணர்ந்து நன்மொழிகட் கீற்றெழுத்தாம் என்றுரைப்பர் ஞாலத்துச் சொன்முடிவு கண்டோர் துணிந்து. | 8 |
ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி
நீதியினால் யவ்வியையின் ஐயாகும் - ஏதமிலா எஒமெய் புள்ளிபெரும் என்ப சஞயமுன் அஐயாம் ஆதி யிடை. | 9 |
அகரத்திற்கு ஆவும் இகரத்திற் ஐயும்
உகரத்திற்கு ஔவும் இருவிற் - ககல்வரிய வாருமாம் ஏயாம் மிகரத்திற்கு ஒவாகிச் சேரும் உகரத்தின் திறம். | 10 |
நேர்ந்தமொழிப் பொருளை நீக்க வருநகரஞ்
சார்ந்தது உடலாயிற் றன்னுடல் போஞ் - சார்ந்ததுதான் ஆவியேற் றன்னாவி முன்னாகும் ஐஔவாம் மேவிய ஏவும் விரைந்து. | 11 |
மெய்யீறு உயிரீறு உயிர்முதன் மெய்ம்முதலா
எய்தும் பெயர்வினையும் இவ்வகையே - செய்தமைத்தாற் தோன்றல் திரிதல் கெடுதலெனத் தூமொழியாய் மூன்றென்ப சந்தி முடிவு. | 12 |
மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத
ஆன்ற வுயிர்ப்பின்னும் ஆவிவரின் - தோன்றும் யகர வகர மிறுதியிடைத் தோரோர் மகரங் கெட வகரமாம். | 13 |
குற்றுகரம் ஆவி வரிற்சிதையு கூறியவல்
லொற்றுமுன் தோன்றுதலும் உண்டாகும் - முற்றோன்று மென்மையதன் வல்லெழுத்தாம் வேற்கண்ணாய் முற்றுகரத் தன்மையும்போம் ஆவியினைச் சார்ந்து. | 14 |
குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கண்
நிற்கப்பின் வல்லெழுத்து நேருமேல் - ஒற்றாம் பிணைந்த வருக்கம் பெயர்த்தியல்பு சந்தி யிணைந்தபடி யேமுடியும் ஏய்ந்து. | 15 |
வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்
றேய்ந்து புகுதும் இயல்புமாம் - ஆய்ந்த இறுதி வருமெழுத்ததா மீறரா மோரோர் மறுவில்பதங் கெட்டு வரும் | 16 |
வன்மை வரினே ளணலன மாண்டறவா
மென்மை வரினே ளலணனவாந் - தந்நக்கண் முன்பின்னாந் தப்பி னணவியல்பாத் தட்டறவாம் ஒன்றழிந்து போதலு முண்டு. | 17 |
மகரந்தான் வன்மைவரின் வர்கத்தொற் றாகும்
புகரிலா மென்மைவரிற் பொன்றும் - நிகரில் வகரம்வந் தால்குறுகும் வவ்வழிந்து மவ்வாம் மகரந் தவயவாம் வந்து. | 18 |
உரிவரின் நாழியி னீற்றுயிர்மெய் யைந்தாம்
வருமுயிரொன் றொன்பான் மயங்குந் - தெரியத் திரிந்தும் விகாரங்கள் தேர்ந்தாறு முன்றும் பொருந்தமிடம் கண்டு புகல். | 19 |
நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான்
குன்றும் உயிருயிர்மெய் கூடுமேல் - ஒன்றியவெண் பத்தினிடை ஆய்தமுமாம் பந்நீண்டு நீளாது மற்றவைபோய் ஈறு வரும். | 20 |
ஒன்பா னொடுபத்து நூறதனை யோதுங்கான்
முன்பாந் தகரணள முன்பிரட்டும் - பின்பான வெல்லாங்கெட் டாறிரண்டு ஆவியின்பின் வல்லுகர நல்லா யிரமீறாய் நாட்டு. | 21 |
மேய விருசொற்பொருள்தோன்ற வேறிருத்தி
ஆய இடைச்சொல் அடைவித்தால் - தூயசீர் ஆவிபோ மொற்றுப்போம் ஆங்குயிர்மெய் போமன்றி மேவியசுட் டாங்கே மிகும். | 22 |
உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம்
பெற்றிடுநீ யாமாவின் பின்னிறுதி - யொற்றணையுஞ் சாவவக மென்புழிச் சார்ந்த இறுதியிடைப் போவதுயிர் மெய்யென்றே போற்று. | 23 |
ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும்
வந்துறழு மன்ன வயனலக்கள் - சந்திகளின் அல்லா தனவும் அடக்குவாய் கண்டடக்க எல்லாம் முடியும் இனிது. | 24 |
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேமிநாதம், Neminatham, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்