நேமிநாதம்
நேமிநாதம் என்பது தமிழின் இலக்கண நூல்களில் ஒன்று ஆகும். 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பழைய இலக்கண நூல்களைப் போலன்றி சுருக்கமாக எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர் ஆவார். சமண சமயத்தைச் சேர்ந்தவரான இவர், 22 ஆவது நேமிநாதர் எனும் தீர்த்தங்கரர் மீது பக்தி கொண்டவர் இதனால் தனது நூலுக்கு நேமிநாதம் எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகின்றது. சுருக்கமான நூல் ஆதலால் சின்னூல் என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.
2. சொல்லதிகாரம்
கடவுள் வாழ்த்து
தாதார் மலர்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் - பேதாய் விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு தெரித்துரைப்பன் சொல்லின் திறம். |
2.1. மொழியாக்க மரபு
ஏற்ற திணையரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும்
வேற்றுமை எட்டும் தொகையாறும் - ஆற்றரிய மூன்றிடமுங் காலங்கள் மூன்றும் இரண்டிடத்தால் தோன்ற வுரைப்பதாஞ் சொல். | 1 |
மக்கள் நரகரே வானோர் எனும்பொருள்கள்
தொக்க வுயர்திணையாந் தூமொழியாய் - மிக்க வுயிருள் ளனவும் உயிரில் லனவுஞ் செயிரில் அஃறிணையாஞ் சென்று. | 2 |
ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல வென்று
மருவியபா லைந்தும் வகுப்பின் - பொருவிலா வோங்கு திணைப்பால் ஒருமூன் றொழிந்தவை பாங்கில் அஃறிணைப்பா லாம். | 3 |
அன்னானும் அள்ளாளும் அர்ஆர்பவ் வீறுமா
முன்னை யுயர்திணைப்பான் மூன்றற்குந் - தன்வினைகொண்டு ஆய்ந்த துறுடுவும் அஆவவ் வீறுமாம் எய்த அஃறிணைப்பாற் கீங்கு. | 4 |
பாலே திணையே வினாவே பகர்மரபே
காலமே செப்பே கருதிடமே - போலும் பிறழ்வுஞ் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல் உறழ்வுஞ் சிதைந்த வுரை. | 5 |
ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும்
ஏவல் உறுவதுகூற் றிந்நான்கும் - பேதாய் மறுத்தல் உடன்படுதல் அன்றெனினு மன்ற விறுத்தலே போலு மிவை. | 6 |
ஐயந் திணைபாலில் தோன்றுமேல் அவ்விரண்டும்
எய்தும் பொதுமொழியால் ஈண்டுரைக்க - மெய்தெரிந்தா லன்மை துணிபொருண்மேல் வைக்கவொரு பேர்ப்பொதுச்சொல் பன்மைசிறப் பாலுரைத்தல் பண்பு. | 7 |
குழுவடிமை வேந்து குழவி விருந்து
வழுவுறுப்புத் திங்கண் மகவும் - பழுதில் உயர்திணைப் பண்போடு உயிருப்பு மெய்யும் அயர்வில் அஃறிணையே யாம். | 8 |
எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையாம்
எண்ணிவியங் கொள்க இருதிணையும் - எண்ணினாற் றன்மையாம் அஃறிணையுஞ் சொன்னமொழி தன்னினத்தை யுன்னி முடித்தலு முண்டு. | 9 |
உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
அயர்வில் திணைபான் மயங்குஞ் - செயிரில் வழக்குந் தகுதியுமாய் வந்தொழுகுஞ் சொற்கள் இழுக்கல்ல முன்னை இயல்பு. | 10 |
பெண்ணான் ஒழிந்த பெயர்தொழி லாகியசொல்
உண்மை யிருதிணைமேல் உய்த்தறிக - எண்ணி யினைத்தென் றறிந்த சினைமுதற்பேர்க் கெல்லாம் வினைப்படுப்பின் உம்மை மிகும். | 11 |
பொதுபிரிபால் எண்ணொருமைக் கண்ணன்றிப் போகா
பொதுத்தொழிலை யொன்றாற் புகலார் - மதித்த ஒருபொருண்மேற் பல்பெயருண் டானால் அவற்றிற்கு ஒருவினையே சொல்லுக ஓர்ந்து. | 12 |
ஒப்பிகந்த பல்பொருள்மேற் சொல்லும் உருசொல்லைத்
தப்பா வினையினஞ் சார்பினாற் - செப்புக சாதி முதலாஞ் சிறப்புப்பேர் தன்முன்னர் ஓதார் இயற்பெயரை உய்த்து. | 13 |
இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுஞ் வழக்கேல்
இனமுண்டாய்ப் பண்புவந் தெய்தும் - புனையிழாய் திண்ண மடையுஞ் சினையு முதலுமாய் வண்ணச் சினைசொல் வரும். | 14 |
2.2. வேற்றுமை மரபு
காண்டகுபே ரையொடுகு இன்னது கண்விளியென்
றீண்டுரைப்பின் வேற்றுமை யெட்டாகு - மூண்டவைதாந் தோற்றும் பெயர்முன்னர் ஏழுந் தொடர்ந்தியலும் ஏற்ற பொருள்செய் யிடத்து. | 15 |
பெயரெழுவாய் வேற்றுமையாம் பின்பதுதா னாறு
பயனிலையும் ஏற்கப் படுதல் - கயல்விழியாய் ஈற்றின் உறுபாறும் ஏற்றன்முக் காலமுந் தோற்றாமை நிற்ற றுணிபு. | 16 |
ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும்
எய்துங் குறிப்பும் இயலவருந் - தையலாய் ஆனொடு மூன்றா வதுதான் வினைமுதலும் ஏனைக் கருவியுமாம் ஈங்கு. | 17 |
ஓதுங் குகர உருபுநான் காவதஃது
யாதிடத்தும் ஈபொருளை யேற்குமாங் - கோதிலாது இன்னுருபைந் தாவ திதனினித் தன்மைத்தி தென்னு மொருநான் கிடத்து. | 18 |
அதுவென்ப தாறாம் உருபாம் இதனது
இதுவென் கிழமையிரண் டெய்தும் - விதிமுறையாற் கண்ணென்பது ஏழாம் உருபாகும் காலநில நண்ணும் வினையிடத்து நன்கு. | 19 |
2.3. உருபு மயங்கியல்
வேற்றுமை யொன்றன் உரிமைக்கண் வேறொன்று
தோற்றல் உருபு தொகவருதல் - ஏற்றபொருண் மாறினுந் தானிற்றல் வந்தொன்றின் ஒன்றேற்ற றேறவரு மெய்ந்நுற் றௌிவு . | 20 |
இருசொல் லிருதி யிரண்டே ழலாத
உருபு தொகாதென் றுரைப்ப - வுருபுதான் தொக்க விடத்துடனே தொக்கும் விரியுமிடத் தொக்கவிரி சொல்லு முள. | 21 |
ஒன்றன்பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர்
சென்றவைந்தாந் தம்முதலிற் சேர்தலோடு - ஒன்றாத வேறொன்றிற் சேர்தல் எனவிரண்டாம் வேற்கண்ணாய் ஈறு திரிதலுமுண் டீண்டு. | 22 |
2.4. விளி மரபு
ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
வேறு வருதலும் மெய்யில்புங் - கூறும் இரண்டீற்று மூவகைப்பேர் முன்னிைக்கண் ணென்றுந் திரண்டுவிளி யேற்குந் திறம். | 23 |
இகரம் ஈகாரமாம் ஐஆயாம் ஏயாம்
உகரவோ கார வுயிர்கள் - பகர்விளிகள் அண்மை யிடத்தும் அளபெடைப் பேர்க்கண்ணும் உண்மை யியல்பா யுறும். | 24 |
அன்னிறுதி யாவாகும் அண்மைக் ககரமாம்
மின்னு முறைப்பெயரே லேயாகு - முன்னியல்பாம் ஆனும் அளபெடையும் ஆனீற்று பண்புதொழின் மான்விழி யாயாய் வரும். | 25 |
ஈராகும் அர்ஆர் இதன்மேலும் ஏகாரம்
ஒரோ விடத்துளதாம் ஓங்களபாம் - பேர்கள் இயல்பாம் விளியேலா வெவ்வீற்றுப் பேரும் புயல்போலுங் கூந்தலாய் போற்று. | 26 |
ஈற்றயல் நீடும் லளக்கள்தாம் ஏகாரந்
தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் - ஆற்ற அயல்நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும் இயல்பாம் விளிக்கு மிடத்து. | 27 |
விரவுப்பே ரெல்லாம் விளிக்குங்கான் முன்னை
மரபிற்றாம் அஃறிணைபேர் வந்தான் - மரபிற் கொளவரும் ஏகாரமுங் கூவிங்காற் சேய்மைக்கு அளவிறப்ப நீளும் அவை. | 28 |
2.5. பெயர் மரபு
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
இயற்சொன் முதனான்கு மெய்தும் - பெயர்ச்சொல் உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண்விரவுப் பெயரு மெனவுரைப்ப ரீங்கு. | 29 |
சுட்டே வினாவொப்பே பண்பே தொகுனளர
வொட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர் - இட்டிடையாய் கூடியற்பெர் காலங் குலந்தொழிலின் போமகடூஉ ஆடூஉ உயர்திணைப்பே ராம். | 30 |
பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த
இகரஐ கார இறுதி - இகரமிறுஞ் சாதிப்பெண் பேர்மாந்தர் மக்களுந் தன்மையுடன் ஆதி யுயர்திணைப்பே ராம். | 31 |
ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர்
ஓதியவெண் ணின்பேர் உவமைப்பேர் - தீதிலாச் சாதிப்பேர் சார்ந்த வினாவுறுப்பின் பேர்தலத்தோர் ஓதிய அஃறிணைக்கா முற்று. | 32 |
இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
மயக்கிலா மூன்றனையும் வைத்துக் - கயற்கண்ணாய் பெண்ணாணே பன்மை யெருமையொடு பேர்த்துறழ நண்ணும் விரவுப்பேர் நன்கு. | 33 |
தந்தைதாய் என்பனவுஞ் சார்ந்த முறைமையால்
வந்த மகன்மகளோ டாங்கவையு - முந்திய தாந்தானும் நீநீயிர் என்பனவுந் தாழ்குழலாய் ஆய்ந்த விரவுப்பே ராம். | 34 |
பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுவோடா
நீராகு நீயிர் எவனென்ப - தோருங்கால் என்னென்னை யென்றாகும் யாமுதற்பே ராமுதலாம் அன்ன பொழுதுபோ தாம். | 35 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேமிநாதம், Neminatham, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்