முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
புறநானூறு - 78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை:வாகை.
துறை: அரசவாகை.
வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள், அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து, அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து, விழுமியம், பெரியம், யாமே; நம்மிற் |
5 |
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என, எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர, ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர் மாண்இழை மகளிர் நாணினர் கழியத், |
10 |
தந்தை தம்மூர் ஆங்கண், தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 76 | 77 | 78 | 79 | 80 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 78. அவர் ஊர் சென்று அழித்தவன்!, சென்று, இலக்கியங்கள், அழித்தவன், அவர், அவர்களை, புறநானூறு, போரிட, அழித்தான், மகளிர், முணங்கு, எட்டுத்தொகை, சங்க, நிமிர்ந்து, இளையன்