புறநானூறு - 76. அதுதான் புதுமை!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை :வாகை.
துறை: அரச வாகை.
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, |
5 |
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி, ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப், பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக, நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப், |
10 |
பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க, ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 74 | 75 | 76 | 77 | 78 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 76. அதுதான் புதுமை!, இலக்கியங்கள், ஒருவன், புறநானூறு, அதுதான், புதுமை, வந்த, அடங்க, எதிர்த்துப், ஒருவனை, பாண்டியன், எட்டுத்தொகை, சங்க, நெடுஞ்செழியன், வாகை