முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 77. யார்? அவன் வாழ்க!
புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!
பாடியவர்: இடைக்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்.
திணை: வாகை.
துறை: அரசவாகை.
கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக், குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி, நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் |
5 |
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக் மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!, வாழ்க, அவன், யார், இலக்கியங்கள், இல்லை, அணியும், புறநானூறு, அவர்களை, அணிந்திருக்கிறான், தலையில், நீக்கிவிட்டு, இவன், தாலி, எட்டுத்தொகை, சங்க, களைந்த, இலனே, இளமையில்