முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 64. புற்கை நீத்து வரலாம்!
புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!
பாடியவர்: நெடும்பல்லியத்தனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண்.
துறை : விறலியாற்றுப்படை.
அருமிளை இருக்கை யதுவே-மனைவியும், வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது, படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை, யாணர் நல்லவை பாணரொடு, ஓராங்கு |
5 |
வருவிருந்து அயரும் விருப்பினள் ; கிழவனும் அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. நல்யாழ்,ஆகுளி, பதலையொடு சுருக்கிச், |
10 |
செல்லா மோதில் சில்வளை விறலி! களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை, விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப், பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின் குடுமிக் கோமாற் கண்டு, |
15 |
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!, இலக்கியங்கள், புற்கை, புறநானூறு, நீத்து, வரலாம், குடுமிக், செல்லலாமா, விறலி, சங்க, எட்டுத்தொகை, ஆகுளி