முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 43. பிறப்பும் சிறப்பும்!
புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை.
துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு
எறிந்தானைச் , 'சோழன் மகன் அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது. நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத், தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக், கால்உண வாகச், சுடரொடு கொட்கும் |
5 |
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக! |
10 |
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின் தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல், கொடுமர மறவர் பெரும! கடுமான் கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்: ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம் |
15 |
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி, நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும், நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே; தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்! |
20 |
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக் காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின், யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்; மிக்குவரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே! |
25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!, இலக்கியங்கள், தம்பி, புறநானூறு, பிறப்பும், சிறப்பும், பார்ப்பார், முன்னோர், ஐயம், தவம், சிபி, பிழை, சோழர், மன்னன், மறவர், செய்வார்கள், புக்க, நலங்கிள்ளி, சோழன், சங்க, எட்டுத்தொகை, வட்டுக், அவிர்சடை, கிள்ளி, தேர்வண், பருந்தின், கொடுமர