முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 42. ஈகையும் வாகையும்!
புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!
பாடியவர்: இடைக்காடனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
சிறப்பு : சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும்.
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், |
5 |
புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே; தண்புனற் பூசல் அல்லது, நொந்து, களைக, வாழி, வளவ! என்று, நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது, புலிபுறங் காக்கும் குருளை போல, |
10 |
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப், பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர் கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர் படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர் கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை |
15 |
நீர்தரு மகளிர் குற்ற குவளையும், வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந! மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி, நிலவரை இழிதரும் பல்யாறு போலப், |
20 |
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே; நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்றுவெகுண் டன்ன முன்பொடு, மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!, இலக்கியங்கள், போர், நின், ஈகையும், நாட்டின்மீது, பூசல், புறநானூறு, வாகையும், நாட்டில், மோதல், இல்லாமல், புன்செய், நாடு, அன்று, போலப், எட்டுத்தொகை, சங்க, மலையின், கொண்ட, வாகை, மகளிர், போல்