முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 45. தோற்பது நும் குடியே!
புறநானூறு - 45. தோற்பது நும் குடியே!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை: வஞ்சி.
துறை; துணை வஞ்சி.
குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது.
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்; கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்! நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; |
5 |
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர் நும்மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 45. தோற்பது நும் குடியே!, நும், குடியே, கண்ணியும், தோற்பது, அல்லன், இலக்கியங்கள், புறநானூறு, மாலை, உன்னை, எதிர்ப்பவன், போர், சூடிய, சோழர், பாடல், ஆர்மிடைந், சங்க, எட்டுத்தொகை, வஞ்சி, தன்றே, வேந்தர்க்கு, அதனால், இந்தப்