முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 398. துரும்புபடு சிதா அர்!
புறநானூறு - 398. துரும்புபடு சிதா அர்!
பாடியவர்: திருத்தாமனார்.
பாடப்பட்டோன்: சேரமான் வஞ்சன்.
திணை: பாடாண்.
துறை: கடைநிலை.
மதிநிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர, |
5 |
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப், பரிசிலர் வரையா விரைசெய் பந்தர் வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன், நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப் புலியினம் மடிந்த கல்லளை போலத், |
10 |
துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர், மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி, இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து, உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்! தள்ளா நிலையை யாகியர் எமக்கு என, |
15 |
என்வரவு அறீஇச், சிறி திற்குப் பெரிது உவந்து, விரும்பிய முகத்த னாகி, என் அரைத் துரும்புபடு சிதாஅர் நீக்கித், தன் அரைப் புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ, |
20 |
அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை, நிழல்காண் தேறல் நிறைய வாக்கி, யான்உண அருளல் அன்றியும், தான்உண் மண்டைய கண்ட மான்வறைக் கருனை, கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர, |
25 |
வரையுறழ் மார்பின், வையகம் விளக்கும், விரவுமணி ஒளிர்வரும், அரவுஉறழ் ஆரமொடு, புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம். உரைசெல அருளி யோனே; பறைஇசை அருவிப் பாயல் கோவே. |
30 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 394 | 395 | 396 | 397 | 398 | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 398. துரும்புபடு சிதா அர்!, அவன், வஞ்சன், துரும்புபடு, இலக்கியங்கள், போல், சிதா, போலத், புறநானூறு, பாணர், அரசன், தந்தான், கொண்ட, அதில், பரிசில், ஊற்றினான், செய்தி, ஆடையை, வாய்மொழி, வெள்ளி, சங்க, எட்டுத்தொகை, பொழுது, அறிந்து, நகைவர், வைகறைப், பெற்ற, விளக்கும்