புறநானூறு - 397. தண் நிழலேமே!
பாடியவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம்.
வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும் |
5 |
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, எகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை, வைகறை அரவம் கேளியர்! பலகோள் செய்தார் மார்ப! எழுமதி துயில்! எனத், தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
10 |
நெடுங்கடைத் தோன்றி யேனே; அது நயந்து, உள்ளி வந்த பரிசிலன் இவன் என, நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு, மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல், பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு, |
15 |
மாரி யன்ன வண்மையின் சொரிந்து, வேனில் அன்ன என் வெப்பு நீங்க, அருங்கலம் நல்கி யோனே; என்றும், செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த |
20 |
தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள் வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்; எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும், தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும், என்னென்று அஞ்சலம் யாமே; வென்வெல் |
25 |
அருஞ்சமம் கடக்கும் ஆற்றல், அவன் திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 395 | 396 | 397 | 398 | 399 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 397. தண் நிழலேமே!, அவன், நாடு, வளவன், இலக்கியங்கள், துயில், நிழலேமே, பரிசில், புறநானூறு, புலவர், பாசறையில், போல், எனக்கென்ன, வழங்கினான், வேல், தாமரை, தோன்றி, சங்க, எட்டுத்தொகை, தேறல், வேனில், அந்தணர், அறுதொழில், வலம்படு