முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 348. பெருந்துறை மரனே!
புறநானூறு - 348. பெருந்துறை மரனே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக், கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக், கள்ளரிக்கும் குயம், சிறுசின் மீன் சீவும் பாண் சேரி, வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, |
5 |
குவளை உண்கண் இவளைத், தாயே ஈனா ளாயினள் ஆயின், ஆனாது நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும், செந்நுதல் யானை பிணிப்ப, வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 346 | 347 | 348 | 349 | 350 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 348. பெருந்துறை மரனே!, பெருந்துறை, மரனே, இலக்கியங்கள், புறநானூறு, தழும்பன், குவளை, அவள், மரங்கள், ஊணூர், அங்குள்ள, தண்ணுமை, எட்டுத்தொகை, சங்க, காஞ்சி, கொண்ட