முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 333. தங்கனிர் சென்மோ புலவீர்!
புறநானூறு - 333. தங்கனிர் சென்மோ புலவீர்!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
நீருள் பட்ட மாரிப் பேருறை மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண, கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல் உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும் தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், |
5 |
உண்கஎன உணரா உயவிற்று ஆயினும், தங்கனீர் சென்மோ, புலவீர்! நன்றும்; சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி, வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக், |
10 |
குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின், குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து, சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னூர் வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. .. .. .. .. .. உடும்பு செய் |
15 |
பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா, வம்பணி யானை வேந்துதலை வரினும், உண்பது மன்னும் அதுவே; பரிசில் மன்னும், குருசில்கொண் டதுவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 331 | 332 | 333 | 334 | 335 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 333. தங்கனிர் சென்மோ புலவீர்!, புலவீர், சென்மோ, இலக்கியங்கள், புறநானூறு, தங்கனிர், உடையது, மன்னும், தினை, உண்பது, இல்லை, தொள்ளை, எட்டுத்தொகை, சங்க, ஆயினும், யானை, வரினும்